Monday, July 25, 2022

what to remember

  மறக்கக்  கூடாத  விஷயம்  --   நங்கநல்லூர் J K  SIVAN 



 நாம் இன்னும் தெரிந்து கொள்ளாத ஒரு விஷயம்   ''எது ஸாஸ்வதம், எது அநித்யம்?''

 நம்முள் இருக்கும்  ஆத்மா தான் நித்யமானது,  ஸாஸ்வதமானது. உலகில் தோன்றும் மற்றதெல்லாம்  மாறுவது அழிவது. இது புரிந்தால் புலன்கள் நம்மை   அதன் வழியில் இழுக்காது.  மனது அதனால் அமைதியுறும்.  


''ஷட் ஸம்பத்''  என்று வேத ஸாஸ்த்ரங்கள் கூறும் ஆறு செல்வங்கள் எது?  ஏற்கனவே தெரிந்தாலும் மறந்து போய்விட்டிருக்கும் என்பதால்  திரும்ப அதை நினைப்போம்.


'சமம்  " -  எல்லாவற்றையும் ஒன்றாக அபேதமாக ஏற்பது.

'தமம்'   -  புலனடக்கம்  

'' உபரதி ''   புலனின்பத்திலிருந்து விடுபடுவது.

''திதிக்ஷா'' -  பொறுமை , அடக்கம் 


ஒவ்வொருவனுக்கும் எது தேவை?

பகவானிடம் பக்தி

வேத ஸாஸ்த்ரங்களில் நம்பிக்கை

குருவிடத்தில்  பெரியோரிடத்தில்   மதிப்பு, மரியாதை,  இதை தான் ஸ்ரத்தை  என்கிறோம். 

ஆத்மாவிடம் சரணாகதி.  


மனதை ஒருமைப்படுத்தி ஒன்றின் மேல் செலுத்துவது  சமாதானம் 

வேத சாரமான  உபநிஷதங்கள் முடிவை  சிறு வாக்கியங்களாக அமைத்திருக்கிறார்கள் மஹா ரிஷிகள். அவை  மஹா வாக்கியம் எனப்படுபவை. அவற்றை மனப்பாடம் செய்து அர்த்தம் புரிந்து கொள்ளவேண்டும்

தியானம் செய்து  பழக்கத்தில் கொண்டு வரவேண்டும்.

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று தான் என்று அறிய அப்போது தான் முடியும்.

இதை ஆத்ம தியானம் என்கிறோம்.

எல்லாம் அவன் செயல், அவனன்றி ஓரணுவும் அசையாது என்று  புரிபடும்பகவான் நாமத்தை தொடர்ந்து ஜபம் செய்ய வைக்கும்

நாம்  இந்த தேகமல்ல, அதன் உள்ளே ஒளிரும் ஆத்மா என அறிவோம். ஸாத்வீக  உணவை மிதமாக உண்போம்.

அஹிம்சை, கருணை, அன்பு பெருகும்.

நாம் ஒரு அடி  பகவானை நோக்கி நடந்தால் அவன் பத்து அடிகள் நம்மை நோக்கி வருவான் என்று புரியும்.

காணும் யாவும் கண்ணனின் பல உருவம் என்று மனதுக்கு புலப்படும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...