Thursday, July 28, 2022

KALIYUG

 அப்போதே சொன்ன சுகர்: #நங்கநல்லூர்_J_K_SIVAN

கலிகாலம் 3

சரியான கணிப்பு

दाम्पत्येऽभिरुचिर्हेतुर्मायैव व्यावहारिके । स्त्रीत्वे पुंस्त्वे च हि रतिर्विप्रत्वे सूत्रमेव हि ॥ ३ ॥
dāmpatye ’bhirucir hetur māyaiva vyāvahārike strītve puṁstve ca hi ratir vipratve sūtram eva hi

கலிகாலத்தில் கணவன் மனைவி உறவு டாம் & ஜெர்ரி உறவு மாடலாக இருக்கிறது. ஓட்டுதல், மரியாதை, அபிமானம், சகிப்பு தன்மை எல்லாம் சுத்தமாக இருக்காது. சுயநலம் தான் பெரிது. கோர்ட்டுக்கு போய் கருப்பு கருப்பு கோட்டுக்காரனிடம் பணம் கொடுத்து தனித்தனியாக பிரிந்து போகாமல், ஒரே கூரையின் கீழே வாழும் இரு துருவங்களாக வாழ்வார்கள். பிராமணன் என்றால் வெறுமே பூணல் நூலை மட்டும் மாட்டிக் கொண்டவன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மதிப்பை இழந்தவனாகி விடுவான். மிருகத்தனத்தோடு மனைவி போகப்பொருள் என்று கருதி சுய திருப்தி நாடும், காமம் தேடும் மனித மிருகங்களாகி விடுவார்கள். காசு கொடுக்காத வேலைக்காரர்களாக கணவன் மனைவிகளாக இருப்பதற்காகத் தான் கல்யாணம் என்ற எண்ணம் மனதில் பதியும் . கடவுள் பக்தி தேய்பிறை மாதிரி குறைந்து கொண்டே போகும். வேதம் என்பது சில பெண்களின் பெயராக ''வேதா'' என்று மட்டும் உரு மாறி விடும்.

வெகுகாலம் முன்பு கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷனாக ஆண் இருந்தான். பெண் என்பவள் பின் தூங்கி முன்னெழும்பும் பேதை.யாக இருந்து ''ஏ மழையே பெய்'' என்றால் மேலே மேகத்துக்கு காது கேட்டு மழை பெய்தது. கணவன் கீறிய கோட்டை மனைவி தாண்ட மாட்டாள் 'பதி சொல் தவறாத பாவாய்'' எல்லாம் கலிகாலத்தில் சில பழைய புத்தகங்களில் தான் படிக்க முடியும். அதற்கு இப்போது அர்த்தம் புரியாது, இல்லை, அர்த்தமே தெரியாது, கிடையாது. அடேயப்பா, எவ்வளவு துல்லியமாக நம் காலத்தை அப்போதே சுக பிரம்ம ரிஷி கண்டித்திருக்கிறார். எப்படி ஐயா உம்மால் இது முடிந்தது?

கல்யாணத்தில் பெண்ணின் தலையில் நுகத்தடி வைத்தும், காசியாத்திரை செல்லும் யாரோ ஒரு ப்ரம்மச்சாரியை பிடித்து ''இந்தா தம்பி, என் பெண் உனக்கு'' என்று கன்யா தானம் செய்வதும் கலிகாலத்தில் அர்த்தம் இல்லாமல் ஏதோ டிராமாவில் ஒரு காட்சி போல் நடக்கிறது. மேடையிலிருந்து தட்டில் ஒவ்வொருவர் சீட்டுக்கு seat க்கு அருகில் வந்தும் மாங்கல்யத்தை காட்டி அக்ஷதை புஷ்பம் கை நிறைய தந்து அதை டமடம வென்று மேளம் தட்டும்போது நமக்கு முன்னால் நிற்கும் யார் தலையிலோ போடுகிறோமே இது தான் ஆசீர்வாதம் என்று ஆகிவிட்டதே!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...