Sunday, January 31, 2021

 

ஏகஸ்லோகி     ---           J K  SIVAN
ஆதிசங்கரர்

                             ஒண்ணே  ஒண்ணு  தான்....

ஆதிசங்கரரைப் பொறுத்தவரை  வெட்டு  ஒண்ணு  துண்டு ஒண்ணு  தான். ரெண்டே கிடையாது.  நோ டூயலிட்டி.  அத்வைதம்.   எல்லாம் ஒண்ணு  தான். அவர் தப்பு இல்லை  நாம் தான்  தப்பு.  எல்லாம் ஒண்ணே  ஒண்ணு தான் புரிஞ்சுவிட்டால்  நாம் வேறு சங்கரர்  வேறு இல்லையே.

ஆயிரக்கணக்கான  ஸ்லோகங்கள் எழுதியிருக்கிறவர் '' ஒரே  ஒரு ஸ்லோகம்'' என்று ஒரு ஸ்லோகம் எழுதியதை தான் இன்று படிக்கிறோம்.


किं ज्योतिस्तवभानुमानहनि मे रात्रौ प्रदीपादिकं
   स्यादेवं रविदीपदर्शनविधौ किं ज्योतिराख्याहि मे ।
चक्षुस्तस्य निमीलनादिसमये किं धीर्धियो दर्शने
   किं तत्राहमतो भवान्परमकं ज्योतिस्तदस्मि प्रभो ॥

கிம் ஜ்யோதிஸ்தவ  பானுமான ஹனி மே  ராத்ரோவ் ப்ரதிபாதிகம் ஸ்யா  தேவம் ரவி தர்சன  விதெள  கிம் ஜ்யோதிராக்யாஹி மே சக்ஷுஸ் த்ஸ்ய நிமிலநாதி சமயே கிம் தீ தியோ தர்சனே கிம் தத்ராஹம்  அதோ  பவான்பரமகம் ஜ்யோதிஸ்தத ஸ்மி ப்ரபோ:

''ஐயா கொஞ்சம் நில்லுங்க. எந்த வெளிச்சம் உங்களுக்கு உதவுது?யோசிச்சீங்களா?  பகலிலே  சூரியன். பொழுது சாய்ஞ்சா  தீபங்கள், விளக்குகள்.? அவ்வளவு தானா?   சூரியனும்  தீபங்களை இருந்தா வெளிச்சம் தெரிஞ்சுடுமா?  கண்ணு  வேண்டாமா? சரி  கண்ணுடைய ஒளி இந்த ஒளி யெல்லாம் பார்க்க  உதவுது.  கண்ணை மூடிக்கிட்டா? என்ன தெரியும்? நமக்குள்ளே  ஞானம் , அறிவுன்னு ஒண்ணு  இருக்கு இல்லை யா? அது ஒளி காட்டுது.  சரிங்க.  ஞானம் உள்ளே  இருக்குது. ஒளிகாட்டுது ன்னு யார்  உணர முடியும்?  ஆத்மான்னு, உயிர், ஜீவன்  என்று ஒன்று இருந்தா தானே  மத்ததெல்லாம் தெரியும், புரியும். செத்ததுக்கு என்ன தெரியும்?

ஆகவே  பகவானே  புரிஞ்சுக்கிட்டேன்.  ஆத்மா ன்னு ஒரே ஒரு ஒளி தான் உள்ளே வெளியே எல்லாம் வெளிச்சம் போடறது.  பிரகாசமானது. நீதான்  பிரம்மமே ,  அந்த ஆத்ம ஒளி. நீ  ஒண்ணு  தான்  எல்லாமே''.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...