Tuesday, January 26, 2021

 


கீதாஞ்சலி -தாகூர்                  J K SIVAN 


 

  9. மனதைக் கொடு ஆசியைப் பெறு


9. O Fool, try to carry thyself upon thy own shoulders!
O beggar, to come beg at thy own door!
Leave all thy burdens on his hands who can bear all,
and never look behind in regret.
Thy desire at once puts out the light from the lamp it touches with its breath.
It is unholy---take not thy gifts through its unclean hands.
Accept only what is offered by sacred love.

 
ரவிந்த்ரநாத் தாகூர் கற்பனை வளம் மிக்க, அபூர்வ, தத்வ ஞானி. கீதாஞ்சலியை அவர் எழுதியது வங்காள மொழியில். அதை பின்னர் அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். கிருஷ்ணா என்ற வார்த்தையை எந்த பாடலிலும்   காணோம்.   அது குறையாக எனக்குப் பட்டதால்  நான் சேர்த்திருக்கிறேன். அழகுக்கு அழகு சேர்க்க. அவர் கற்பனை சற்று புரியாதவர்களுக்கு கிருஷ்ணனை சேர்த்து சொன்னால் புரியாதா என்ற நப்பாசையில்.

''அடே அடிமுட்டாளே, உன்னை நீயே உன் தோளில் தூக்கிக்கொண்டு நடக்க முயற்சிக்கிறாயா? முடியுமா? . உன்னை ஆட்டிவைப்பதே அவன்.    நீயல்ல. நீ நடப்பதே, நினைப்பதே, பேசுவதே, ஏன்? நீ மூச்சு விடுவதே கூட அவன் இஷ்டத்தில் என்பது நினைவிருக்கட்டும்.


ஹே,,பிச்சைக்காரா உன் வீட்டுக் கதவையே தட்டி யாசகம் கேட்க வந்தாயா? சபாஷ். உன் சுமையெல்லாம் சுமக்க அதோ  ஒரு  நீல நிறத்தவன்   தயாராக இருப்பது தெரியாதா உனக்கு? அடடா இதை நாம் இதுவரை அறிந்து கொள்ளவில்லையே என்று வருத்தமா? போகட்டும் போ. போனதை நினைத்து வருந்தாதே.
உன் அருகே உள்ள தீப ஒளியை உன் ஆசை மூச்சால் அணைந்து போகாமல் பார்த்துக் கொள் . அதுவாவது முடியட்டும்.


உனக்கு தரப்படும் பரிசுகளை வாழ்க்கையில் நீ பெறும் பரிசுகளை, அழுக்கு கரங்களாலே தொட்டு கொடுக்கப்படும்போது அது வேண்டவே வேண்டாம் தம்பி.     விலை குறைவான எளிய பரிசாக இருந்தாலும் பரிசுத்த அன்புடன், தூய மனதுடன் அளிக்கப்பட்டால், அதை அவன்  பெறுவதற்கு   நீ பாக்கியவான். 

கிருஷ்ணன்  யார் தூய மனதோடு, என் மீது பக்தியோடு ஒரு சொட்டு நீரோ, ஒரு சிறு இலையோ , ஏதேனும் ஒரு சிறு காய்ந்த கனியோ கொடுத்தாலும் பரிபூரண அன்போடு அதை ஏற்றுக்கொள்கிறேன், அவர்களை ரக்ஷிப்பது என் வேலை என்கிறானே  தெரியாதா?


சந்தர்ப்பம் கிடைத்தால் நழுவ விடாதே. நீயும் அதே போல் மனதை இறை அன்பால் நிரப்பு. மற்றவரிடம் அன்பைப் பொழி.''


கீதாஞ்சலிக்கு ஏன் நோபல் பரிசு கிடைத்தது என்பது இந்த ஒரு பாடலில் புரிகிறதா இல்லையா? மொத்தம் 105 போல இருக்கிறது. ஒவ்வொன்றாக தினமும் எழுதுவேன். கடைசியில் அச்சேறி இலவச புத்தகமாக வெளிவரும். நன்கொடை கிடைப்பதை வைத்து இந்த கைங்கர்யத்தை ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் நடத்துகிறது.

                       

                    


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...