Sunday, January 31, 2021

LOST TEMPLE




 ஒரு அக்ரமத்தின் கதை. J K SIVAN

ஈவு இரக்கமில்லாமல் சில நல்ல உயிர்க ளையும் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது கொரோனா. எனது அருமை நண்பர், விஜயபாரதம் ஆசிரியர் மா. வீரபாகுவின் மறைவு பெரிய வெற்றிடத்தை தந்துள்ளது. அவர் இழக்கக்கூடிய ஒரு மனிதர் அல்ல. சத்யத்துக்கும், நேர்மைக்கும்,குரல் கொடுத்த தீரர். பயமரியாத 72 வயது வீரர். என்னவோ தெரியவில்லை, இறப்பதற்கு ரெண்டு மாதங்கள் முன்பு என்னை நங்கநல்லூரில் வந்து சந்தித்தார் நண்பர்களுடன். சில புத்தகங்கள் பரிசளித்தேன். அவர் என்னை சந்தித்தது இந்த கட்டுரையை நான் எழுதிய
பிறகு (TO APPRECIATE MY WRITING)

''கோவில் போய் கோர்ட் வந்தது டும் டும்''

ஸ்ரீ வீரபாகு ஒழுக்க சீலர். ப்ரம்மச்சரியத்தை கடைபிடிப்பவர். இனிய குணத்தவர். மக்களிடம் நேசம் கொண்டவர். எல்லாவற் றிற்கும் மேலாக இந்திய தேசிய வார இதழ் ''விஜய பாரத'' ஆசிரியர் , ஸ்ரீ ம . வீரபாகு. RSS இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட சமூக சேவகர். அரைநூற்றாண்டுக்கு மேல் தன்னலமற்ற தேச சேவை: வணங்குகிறேன்:

விஜய பாரத ஏடு தனது அக்டோபர் 3-2017 இதழில் ஒரு பூதாகரமான செயதியை வெளியிட்டது

ஏற்கனவே இருந்த சிவ, விஷ்ணு கோயில் களை இடித்துவிட்டு அந்த இடத்தில் தான் ஆங்கிலேயர்கள் இப்போதிருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தை கட்டினார்கள்'' -
இந்த விஷயம் எனக்கு புதியது. மறைக்கப் பட்ட ஒரு மாபெரும் பூசணிக்காய் . என்னால் இதை ஜீரணிக்க முடியாமல் கொஞ்சம் விஷயம் தேடினேன். செய்தி ஆதார பூர்வ மானது என்று தெரிய வருகிறது. முழு விவரமும் தேடவேண்டும்.

'' சென்னை சௌகார்பேட்டை பகுதியில் சென்னகேசவ பெருமாள் கோயில் இருக் கிறது. இதை பாரதத்தை சுரண்ட வந்த கிழக்கிந்திய கம்பெனி நிதி அளித்து கட்டச் செய்தது என்று 'வரலாறு' . இது உண்மையல்ல. சுத்தப் பொய் . சென்னை உயர்நீதிமன்றம் இப்போது இருக்கிறதே அங்கே தான் சென்னை மல்லீஸ்வரர், சென்னை கேசவர் ஆலயங்கள் இருந்தன. கிழக்கிந்திய கம்பெனி வெள்ளையன் இவற்றை இடித்து விட்டு கோர்ட் கட்டினார்கள்.

ஹை கோர்ட் கட்டிட 150வது ஆண்டுவிழா நிகழ்ச்சியின் போது இந்த வெளியே பரவாத செயதி அம்பலமானது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பேசும்போது: 'ஆஹா நமது நீதிமன்றம் ஒரு புனிதமான இடத்தில் அமைந் திருக்கிறது' என்று கொண்டாடினார். புனிதமான இடத்தில்' என்றால் கோயில் இருந்த இடம் தானே!.

சென்னை மாநகருக்கே அந்தப் பெயர் வருவ தற்கு ஒரு காரணம் சென்ன கேசவ பெருமாள், சென்ன மல்லீஸ்வரர் இரட்டை ஆலயங் கள்தான். கிழக்கிந்தியக் கம்பெனி செயின்ட் ஜார்ஜ் கோட்டையை விஸ்தரிப்பதற்காக இந்த இரட்டைக் கோயில்களை தகர்க்கப் போவதாக அறிவித்ததும் அன்றைய பக்தர்கள், ஹிந்து பெருமக்கள் புயலாய் சீறினார்கள். கவலை வேண்டாம் இந்த வேறு இடத்தில் கோயில் கட்ட பணமும் இடமும் தருகிறோம் என்று கிழக்கிந்திய கம்பெனி அவசரமாக சொல்லிப் பார்த்தது. அன்றைய ஹிந்துக்களின் தலைவ ரான மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் ஆவேசமுற்றார். ஆங்கிலேயர்களுக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவர்.

''போய்யா, உன் பணம் யாருக்கு வேண்டும்'' என முடிவெடுத்து கோயில் இடிக்கப் படுவதைக் கேள்விப்பட்டு தன்னுடைய சொந்த செலவில் சென்ன கேசவப் பெருமாளையும் சென்னமல்லீஸ்வரரையும் தேவராஜ முதலித் தெருவில் 1700 ல் பிரதிஷ்டை செய்தார். வெள்ளையன் அரசாங்கம் தருவதாக சொன்ன பணத்தை நிராகரித்து தன் சொந்த செலவில் கோயில் கட்டிமுடித்தார். குறிப்பாக சென்ன மல்லீஸ்வரர் கோயிலை ஆலங்காத்தா பிள்ளை என்ற வணிகர் கட்டிக்கொடுத்தார். ஆதியில் இந்த இரு கோயில்களும் 1646லேயே கட்டப்பட்டவை என்கிறார் சென்னை பற்றி வரலாற்று குறிப்புகள் தரும் எஸ். முத்தையா. அந்த இரண்டு கோயில்களையுமே பேரி திம்மப்பா என்ற மொழிபெயர்ப்பாளர் கட்டியிருந்தார். யார் கட்டினால் என்ன?

கோயில் இருந்த காலத்தில் அந்த வளாகத் தில் இருந்த சிறிய நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வருகிறவர்கள் கோயிலிலிருந்து அர்ச்சகர்கள் கொண்டுவரும் துளசி தீர்த்தத்தை வார்த்து 'நான் சொல்லும் சாட்சி உண்மை. பொய் அல்ல' என்று சபதம் ஏற்பார்கள். இதைப் பார்த்துவிட்டு வழக்குத் தொடர்ந்தவர்கள் சிலரும் 'நான் தொடுத் திருப்பது உண்மையான வழக்கு. பொய் வழக்கு அல்ல' என்று சபதம் ஏற்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சாதாரண மக்களின் மன நிலை எப்படி இருந்தது,

புனித ஜார்ஜ் கோட்டையை விஸ்தரிக்க கோயிலை இடித்தது மட்டும் அல்ல. 1844ல் வெள்ளையன் ஒரு சட்டம் இயற்றி அதன்படி கிறிஸ்தவராக மதமாற்றப்பட்டவர் சொத்துக்கு வாரிசாக தொடர்ந்து இருக்க முடியும். ஏறக்குறைய அதே சமயத்தில் கிறிஸ்தவ இறை இயலை (தியாலஜி) சென்னை பல் கலைக்கழகத்தில் கட்டாயப் பாடம் ஆக்கினான்.

பிரபல அவுரி வர்த்தகரான கஜுலு லட்சுமிநரசு செட்டி இந்த மதமாற்ற சட்டத்தை எதிர்த்து 1846ல் சென்னை நகரில் கண்டன கூட்டம் நடத்தி னார். இதையடுத்து அந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது. 1888ல் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஒரு மாணவர் மதமாற்றப்பட்டார். அது மாநிலமெங்கும் கடுமையான பதட்டத்தை ஏற்படுத்தியது.

இதெல்லா ம் நடந்து முன்னூறு வருஷங்க
ளுக்கு மேல் ஆகிவிட்டது. சென்னை கேசவர் சென்னை மல்லீஸ்வரர் கோயிலை இடித்து கிழக்கிந்தியக் கம்பெனி உயர்நீதிமன்றம் கட்டியது என்ற செயதியை இப்போது அறிந்தும் கூட இத்தனை ஆண்டுகள் கழித்தும் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. சென்னை என்ற நமது அருமை மாநகருக்கே பெயரை தந்துள்ள சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவ பெருமாள் ஹை கோர்ட் வருவதற்காக காணாமல் போனதா?? இடித்த கோயிலை வேறு இடத்தில் கட்டிக்கோ என்று வெள்ளையன் பணம் தந்தபோது அதை நிராகரித்த சென்னை ஹிந்துக்கள் என்றென்றும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

ஹை கோர்ட் நாலு வாசலை கொண்டது. பெரிய கோவில்களில் இன்றும் நான்கு வாசல்கள் இருப்பதை நினைவூட்டு கிறது. ஆமாம் இங்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல், மேற்கு வாசல், வடக்கு வாசல் உள்ள பெரிய கோவில்கள் இருந்தது. இப்போது வெறும் வாசல் மட்டும் நீதி மன்றத்துக்கு என்று தெரிகிறது.

நல்ல நீதிபதி, நல்ல பக்தர் நல்ல நீதிபதியாக திகழ்ந்த டி. முத்துசாமி ஐயர் நல்ல பக்தரா கவும் திகழ்ந்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் அமரும் இடம் பழைய கோயிலில் மூலஸ்தானம் என்று அவருக்குத் தெரியும். எனவே, தனது பணிக்காலம் முழுதும் நீதிமன்றத்திற்கு உள்ளேயே அவர் காலணி அணிந்து செல்வது இல்லை.

Wikipedia படித்தேன். அதில் கோவில்களை அகற்றிய செயதி இருக்கிறது. சென்னை நில உடமை பற்றிய பழைய சில விவரங்களை படித்தேன். அதிலும் இது ருசுவாகிறது.

''மெட்ராஸ்'' 22.8.1639 அன்று பேர் பெற்று உருவானது. அதில் வாழ்ந்த முக்கிய பிரமுகர்களில் இருவர் பேரி திம்மண்ணன் எனும் பிரான்சிஸ் டே Francis Day எனும் வெள்ளைக்காரரின் உதவியாளன். இன்னொ ருவர் நாக பட்டன் எனும் கிழக் கிந்திய கம்பனிக்கு பீரங்கி வெடி மருந்து தயாரிப் பாளர். சென்ன கேசவ பெருமாள் கோவிலை, சென்னமல்லீஸ்வரர் கோவிலொடு சேர்த்து திம்மண்ணன் நாராயணப்பையர் என்பவ ருக்கு தானமளித்தான்.

ஸர்வதாரி வருஷம் சாலிவாகன சகாப்தம் 1569 சித்திரை மாசம் 28ம் நாள் அன்று மெட்ராஸ் சென்னை கேசவ பெருமாள் கோவிலை தான பத்ரம் எழுதி நாராயணப்பய்யருக்கு அளித் தான். மெட்ராஸ் சென்னை ஆனது இந்த கோவிலால் தான் என்று சொல்கிறார்கள். ''சென்னபட்டணத்தில் நான் சென்னை கேசவ பெருமாள் கோவில் காட்டினேன். அதை மானியமாக நிலத்தோடு உனக்கு மாற்றி அளிக்கிறேன். இனி நீ புத்ர பௌத்ராதி உரிமையோடு சூரிய சந்திரர்கள் உள்ளவரை ஆண்டு அனுபவிக்கவும். இந்த தானத்தை எதிர்த்து தடுத்தவர்கள் கங்கைக்கரையில் காராம்பசுவை கொண்ட பாபத்தை அனுபவிப்பார்கள். மனப்பூர்வமாக பேரி திம்மண்ணன் ஆகிய நான் எழுதி கொடுத்த தான பத்ரம்'' இந்த சென்னைகேசவ பெருமாள் கோவில் அதற்கு முன் நாகபட்டன் வசம் இருந்தது . இதற்கு தாய் பாத்திரம் ரெண்டு வருஷம்முன்பு அதே கோவில் மானியத்தை நாகப்பட்டன் பேரி திம்மண் ணனுக் கு எழுதிக் கொடுத்தது. இந்த ஆலயம் இப்போது உயர்நீதி மன்றம் இருக்கும் இடத்தில் கட்டப்பட்டிருந்தது. அப்புறம் காணாமல் போனது.
1710 வரை பெரிய கோவில் என்று வரை படங்களில் காண்கிறது. பலர் தரிசித்ததாக அறிகிறோம்.1746 முதல் 1749 வரை சென்னை பிரெஞ்சுக்காரர்கள் வசம் இருந்து மீண்டும் கிழக்கிந்தியுங் கம்பனி வெள்ளையர் வசம் வந்து போது பாதுகாப்புக்காக ''கருப்பு நகரம்'' blacktown எனும் சென்னை பலப்படுத் தப்பட்டது. 1757ல் சென்னகேசவ பெருமாள்-சென்னை மல்லிகேஸ்வரர் கோவில் வெள்ளை யர்களால் அழிக்கப்பட்டது. கோவிலின் கற்கள் சுவர் கட்ட உபயோகமானது. 250,000 சதுர அடி நிலம் கொண்ட கோவில் மான்ய நிலம் அழிந்தது. வேறு இடத்தில் அந்த அளவு நிலம் தருகிறோம். கட்டிக்கொள்ள பணம் தருகிறோம்'' என்றது வெள்ளை அரசாங்கம். மணலி முத்து கிருஷ்ண முதலியார் பணம் வேண்டாம் நிலம் கொடு என்று நிலம் பெற்று கெங்கு ராமையா தெரு, தேவராஜ முதலி தெரு, NSC போஸ் தெரு, நைனியப்ப நாயக்கன் தெரு இடைப்பட்ட இடத்தில் இப்போது இருக்கும் கோவிலாக கட்டப்பட்டது.''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...