Saturday, May 5, 2018

pattinathar




பட்டினத்தார் -- J.K. SIVAN

                                          ஒரு நிமிஷம்  பேசலாமா?

பட்டினத்தார் பாடல்களுக்கு தனியாக விளக்கம் தேவை இல்லை. எளிதில் புரிகிற தமிழ். அர்த்தம் ஆழமான சொற்கள். இன்று சிலவற்றை ரசிப்போம்.
                                                    4

நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க !

தம்பி  நினைவு கொள் , சிவனை மறைந்தவர் எவர் வாழ்ந்தார்?  சிவனை நினைத்தவர் எவர் தாழ்ந்தார்? இந்த உடம்பை  நினைத்து நாளை போக்குகிறாயே. இது பேய்த்தேர். கண்மூடி கண் திறப்பதற்குள் காணாமல் போகக் கூடியது. இதுவா சாஸ்வதம்?

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;

இந்த உலகத்தில் வாழும் எல்லா உயிர்களுக்கும் ஒரே  ரூல் தான்.  பிறப்புX பிறப்பு, தோற்றம் X மறைவு, PERISU X சிறிசு, நினைவு X மறதி,  சேர்வதுX பிரிவது  இதெல்லாம் மாறி மாறி  வந்தே தீரும். ஒன்றுக்கு மகிழ்வது  இன்னொன்றுக்கு அழுவது  வேண்டாம்.

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்;
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன.

நன்றாக உணர்ந்துகொள்ளுங்கள்.  சாப்பிட்டது பாதாம் அல்வா என்றாலும் அடுத்த நாள் காலை ????  நிறைய தண்ணீர் விட்டு  வெளியேற்றாவிட்டால் அந்த பக்கமே போகமுடியாது.  எது பிடிக்குமோ ஒரு நாள் அது பிடிக்காமல் போகிறது. அப்படியும் திரும்பி திரும்பி பல பிறவிகளில் நாம் மாறாமல் செய்ததையே செயகிறோமே. நாம் ரொம்ப  பிடித்து செய்தது சொன்னது  தின்றது எல்லாமே திரும்ப நமக்கு  வேட்டு வைத்து கொல்கிறது இல்லையா? 

தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன;
பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன;
ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை;
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை;

இனிப்பு நிறைய சாப்பிட்டாயே , இப்போது இனிப்பு உன்னை தின்கிறதே!   முற்பகல் நீ செய்தது உன்னை பிற்பகலில் ஆட்டுவிக்கிறதே. பார்க்கிறோமே நிறைய பேர் தவிப்பதை.
எதை நீ தேடி சென்றாயோ, அது உன்னை தேடி விஸ்வரூபத்தில் வந்து வாட்டுகிறதே. செல்வந்தனாக இருந்தாய். அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் போனாய். ஸ்வர்கத்தில் உனக்கு ஈடு இணை எவரும் இல்லை என்று கொடிகட்டி அறந்தாய். இதோ இப்போது எங்கே இருகிக்கிறாய்? இது நரகம் இல்லையென்றால் வேறு எது?

இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை;
ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும்,
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள்
பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி;
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி;

சலமும் சீயும் சரியும் ஒருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை.

இதை எழுதுவதற்கே கொஞ்சம் அருவறுப்பாகவும்  பயமாகவும்   இருக்கிறதே. படிக்கும்போது உங்களுக்கு அப்படி இருக்காதா? 

பன்னீரில் குளித்து, ஜவ்வாது சென்ட்  உடலில் பூசிக்கொண்டு பட்டு சட்டை வேஷ்டி ...ஹல்வா பாதாம் கீர்,...  
தங்கத்தட்டில்  சாப்பிட்டு   உடம்பை வளர்த்தாயே, இப்போது நன்றியோடு அது உனக்கு  என்ன செயகிறது பார்தாயா?
சீழும் ரத்தமும், பீளை, மலம், சளி, இருமல், வியாதி பிண்டமாக இருக்கிறாய். அருகே வரமுடியாமல் நாற்றமெடுத்து அசையமுடியாமல் கிடக்கிறாய். நீ வளர்த்த உடம்பு சுடுவதற்கு தயாராகி விட்டது. எலும்பு மட்டுமே கொஞ்சம், மற்றது சாம்பல். இப்போது புரிந்து கொள்கிறாயா எதற்கு முக்யத்வம் கொடுக்கவேண்டும் என்று.  

பட்டினத்தாரை ரொம்ப  பிடிக்கிறது. இப்படி  சுலபமாக தமிழில் எழுத நமக்கு வருமா? 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...