Wednesday, May 30, 2018

kala bairavar



கால பைரவாஷ்டகம். 5  j.k. sivan 


கீழே  64 பைரவர்கள் பட்டியல் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு பைரவரைப் பற்றியும் சொன்னாலே ஒரு புத்தகம் போட்டுவிடலாம். ரெடிமேட்  தலைகாணி தயாராகிவிடும்.

நீலகண்ட பைரவர்
விசாலாக்ஷ பைரவர்
மார்த்தாண்ட பைரவர்
முண்டனப்பிரபு பைரவர்
ஸ்வஸ்சந்த பைரவர்
அதிசந்துஷ்ட பைரவர்
கேர பைரவர்
ஸம்ஹார பைரவர்
விஸ்வரூப பைரவர்
நானாரூப பைரவர்
பரம பைரவர்
தண்டகர்ண பைரவர்
ஸ்தாபாத்ர பைரவர்
சீரீட பைரவர்
உன்மத்த பைரவர்
மேகநாத பைரவர்
மனோவேக பைரவர்
க்ஷத்ர பாலக பைரவர்
விருபாக்ஷ பைரவர்
கராள பைரவர்
நிர்பய பைரவர்
ஆகர்ஷண பைரவர்
ப்ரேக்ஷத பைரவர்
லோகபால பைரவர்
கதாதர பைரவர்
வஞ்ரஹஸ்த பைரவர்
மகாகால பைரவர்
பிரகண்ட பைரவர்
ப்ரளய பைரவர்
அந்தக பைரவர்
பூமிகர்ப்ப பைரவர்
பீஷ்ண பைரவர்
ஸம்ஹார பைரவர்
குலபால பைரவர்
ருண்டமாலா பைரவர்
ரத்தாங்க பைரவர்
பிங்களேஷ்ண பைரவர்
அப்ரரூப பைரவர்
தாரபாலன பைரவர்
ப்ரஜா பாலன பைரவர்
குல பைரவர்
மந்திர நாயக பைரவர்
ருத்ர பைரவர்
பிதாமஹ பைரவர்
விஷ்ணு பைரவர்
வடுகநாத பைரவர்
கபால பைரவர்
பூதவேதாள பைரவர்
த்ரிநேத்ர பைரவர்
திரிபுராந்தக பைரவர்
வரத பைரவர்
பர்வத வாகன பைரவர்
சசிவாகன பைரவர்
கபால பூஷண பைரவர்
ஸர்வவேத பைரவர்
ஈசான பைரவர்
ஸர்வபூத பைரவர்
ஸர்வபூத பைரவர்
கோரநாத பைரவர்
பயங்க பைரவர்
புத்திமுக்தி பயப்த பைரவர்
காலாக்னி பைரவர்
மகாரௌத்ர பைரவர்
தக்ஷிணா பிஸ்திதி பைரவர்

சுவர்ண கால பைரவர் , திருவண்ணாமலையில்  தரிசனம் தருகிறார்.    செல்வத்திற்கு அதிபதியான பைரவர் என்பதால் சொர்ண ஆகர்ஷண பைரவர். டது கையில் கபாலம்  காணோம். ஆனால்  அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தருபவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்வது வழக்கம்.  இவரை வணங்கினால் வீட்டில் செல்வம் பெருகும். இரண்டு நாய் வாகனங்கள்.

தஞ்சைமாவட்டம்,திருவிடைமருதூர் வட்டம்  கதிராமங்கலம்  அருகில் காவேரி   வடக்கு நோக்கி ஓடி வடகாவேரி என அதற்கு பெயர்.   காவேரிக்கு   மேற்கு கரையில் வினாயகர்.காசிவிஸ்வநாதர் கோவில்கள் உண்டு.  இந்த ரெண்டு  கோவில்கள் நடுவே  மிக பழமையான இரட்டை கால பைரவர் கோவில் ஒன்று  இருக்கிறது. . தர்போது தேய்பிறை அஷ்டமி திதியில் சிறப்பு பூஜைகள்.  திருமணதடை நீங்கி வரைவில்திருமணம் நடை பெறும் என்பது ஐதீகம். 


காசியில் காவல் தெய்வம், ரட்சிக்கும் தெய்வம்   காலபைரவர்.   முதலில் கால பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும்.  காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும்.

"அமர்தகர்"  (அகங்காரத்தை அழிப்பவர்) ,   "பாப க்ஷணர்"(பாபங்களை போக்குபவர்)  என்று  கூட  பைரவருக்கு  பெயர் உண்டு. .

தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு  அணிவிக்கும்  புஷ்பங்கள். வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூ  போடுவதில்லை.  மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சார்த்தலாம். 
.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...