Monday, March 11, 2019

SUR DAS


சூர் தாசர் J K SIVAN
''நான் பாபிகளுக்கெல்லாம் சக்ரவர்த்தி''

சூர் தாசரைப்பற்றி இது வரை அறியாதவர்களும் சரி தெரிந்தவர்களும் சரி, மிக ஆவலோடும் ஆர்வமோடும் என்னுடைய கட்டுரைகளை படிக்கும்போது நான் பட்ட ஸ்ரமம் இன்ப அனுபவமாக இனிக்கிறது. 18-20மணி நேரம் தினமும் உழைப்பவனை இன்னும் நேரம் கிடைக்குமா என்று தேட வைக்கிறது. எனக்கே தெரிகிறது. நான் நிறைய பெரிய பெரிய விஷயங்களை ஒரே நேரத்தில் கையாள்கிறேன் என்று, ஸ்ரீமத் பாகவதம், மஹா பாரதம், மகா பெரியவா, ஸ்லோகங்கள், சூர் தாசர், கிருஷ்ண கர்ணாம்ருதம், கீத கோவிந்தம், சித்தர்கள், ஆச்சார்யர்கள், தாகூர், ரமணர், விவேகானந்தர் ..... என்று என்னென்னவோ.... ஏதோ நம்மால் சில நல்ல காரியங்கள் எளிமையாக தர முடிந்தால் அதை மனப்பூர்வமாக செய்வோமே என்ற நப்பாசை.... உடல் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. வயது, விருத்தாப்பியம் ஒரு முக்கிய காரணமாகிவிட்டது. இரும்பு மனது அதை லக்ஷியம் செய்யவில்லை...

சூர் தாஸர் கண்ணை இழந்தவர் என்று நாம் தான் சொல்கிறோம் அவர். கண்ணில்லாமலேயே கண்ணனை கண்ணார அகத்தில் கண்டவர் அவர். அவர் கண்ணன் மேல் ப்ரிஜ்பாசி மொழியில் பாடியது ஸுரஸாகர் என்று ஹிந்தியில் இருக்கிறது. கிருஷ்ண சமுத்திரம். எனக்கு ப்ரிஜ் பாசி தெரியாவிட்டால் என்ன? ஆங்கிலத்தில் படித்து புரிந்துகொண்டு தமிழில் முடிந்தவரை எளிமையாக தருகிறேன். அப்படித்தானே தாகூரின் கீதாஞ்சலி, அவருடைய அமர கதைகளை கொடுத்தேன்.
தன்னை முழுதாக இழந்து கிருஷ்ணனோடு மூச்சாக கலந்தவர் சூர் தாசர். அதனால் தான் அவர் சொற்களில் கிருஷ்ணனை நாம் உணரமுடிகிறது. பாரதியாரை, கம்பரை, தமிழிலே தானே அனுபவிக்க முடியும். நமக்கு பிரிஜ் பாசி தெரியாததால் சூர் தாசரை நிறைய பேருக்கு அறிமுகமில்லை. வடக்கே சூர் சூரியன், துளசிதாஸ் சந்திரன், வடுகன் கேசவ தாஸ் நக்ஷத்திரம் என்று பக்தர்கள் சொல்வார்கள்;

“ Kindhaun sur ko sar lagyo kindhaun sur ki pir
Kindhaun sur ko pada lagyo Bmdhyaun sakal sarir ”

சிலர் யுத்தத்தில் அம்புகள் துளைத்து காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்தி வலியில் துடிப்பார்கள். ஆனால் சிலரோ சூர்தாசரின் கிருஷ்ண பக்தி பாடல்களின் சக்தியால் இதயம், மனம் எல்லாம் சல்லடைக்கண்ணாக துளைக்கப்பட்டு பக்தி பிரவாகம் பெறுக கண்ணீருடன் ஆனந்தத்தில் மேலும் திளைத்திட துடிப்பார்கள்.... என்று சூர்தாஸை புகழ்வதுண்டு.

சூரதாஸர் 1478ல் பிறந்தவர். etween 1581-1585 கால கட்டத்தில் மறைந்தவராம்.
ஒருமுறை ஸ்ரீ வல்லபாச்சார்யர் வ்ரஜ் கிராமம் வந்தபோது சூர்தாஸ் கௌகட் என்ற ஊரில் இருப்பதை அறிகிறார். சூர்தாஸ் அருகே இருந்தார் சிஷ்யர்கள் ''குருநாதா, ஸ்ரீ வல்லபாச்சார்யர் இங்கே வந்திருக்கிறார் '' என்கிறார்கள். கண் பார்வை இல்லாத சூரதாஸர் ''அப்படியா, எவ்வளவு பெரிய மஹான் அவர், என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர் பாதத்தில் விழுந்து வணங்க வேண்டும் என்கிறார் சூர்தாசர்.
''சூர் தாஸரே , உங்கள் கிருஷ்ண பக்தி என்னை இங்கே இழுத்து வந்திருக்கிறது. வாருங்கள் உட்காருங்கள் என்று அவரை கையால் அணைத்து அமரச்செயகிறார். ''சுவாமி உங்கள் வாயால் நேராக ஒரு கிருஷ்ணன் பாடல் பாடி கேட்கும் பாக்யம் எனக்கு அருளவேண்டும் '' என்று வேண்டுகிறார். சூர்தாசர் பாடுகிறார்.

0 lord, 1 am the crown amongst the sinners.
The others are just the beginners
I have been born a crook.
To Ajamil, the hunter, and to the whore
■even to poison-breasted Putana you granted salvation.
You have shown favors to all but me. This hurts.
I claim, emphatically, confidently that nobdy else IS as capable of sinning as 1 have been.
Still amidst the sinners, and crooks,
I; Sur, die of shame, for not having had your favor.
Who else, deserves your grace More than I?

என் அப்பனே கிருஷ்ணா, என் தெய்வமே, நான் யார் என்று உனக்கு தெரியாதா? பஞ்சமகா பாதகங்களை செய்த பாபிகளுக்கு நடுவே நான் முடிசூடா சக்கரவர்த்தி.. நான் செய்த பாவங்களோடு ஒப்பிட்டால் அவர்கள் அனைவருமே கற்றுக்குட்டிகள். நான் கருவில் இருக்கும்போதே பெரிய மஹா பாபி.
அஜாமிளன் எனும் கொடிய வேடுவன், மற்றும் வேசி ஒருவள், உன்னையே கொடிய விஷம் தடவிய
தனது முலையில் பால் அருந்த செயது கொல்ல வந்த பூதகி ஆகியோருக்கெல்லாம் கருணாசாகரமாக நீ முக்தி அளித்தாய். என்னை கவனிக்கவே மாட்டேன் என்கிறாயே. எனக்கு நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கிறதே. நான் மறுபடியும் சொல்கிறேன் கிருஷ்ணா, நான் மஹா பாவி, கொடியவன், என்னைவிட அதிக பாபங்கள் செய்தவன் இருக்கவே முடியாது. என் போன்றவர்களை அல்லவோ நீ அருள் புரிந்து ரக்ஷிக்க வேண்டும். இன்னும் உன் கடைக்கண் பார்வை கூட என் மேல் படமால் எனக்கே அவமானம் அதிகமாகி மண்டையை போட்டு விடுவேனோ என்று தோன்றுகிறது. பகைவனுக்கும் அருளும் பகவானே, என்னைவிட உன் கருணையை எதிர்பார்த்து வாடும் ஒருவன் உண்டா சொல் ? '' வல்லபாச்சார்யர் மனம் குளிர்ந்து சூர்தாசருக்கு மஹாபாரதம், பாகவதம் எல்லாம் உபதேசிக்கிறார். அற்புதமாக அவற்றை ஸ்ரவணம் பண்ணி மனதில் இறுக்கி பிடித்து வைத்துக் கொள்கிறார் சூர்தாசர் அவை அத்தனையும் ஒவ்வொரு சம்பவமாக கவிதைகளாக நமக்கு கிடைத்திருக்கிறதே.

முகலாய சக்ரவர்த்தி அக்பர் கொஞ்சம் நல்லவன். இசை ஞானம் கொண்டவன். பக்தி பாடல்களை தான்சேன் பாடிக்காட்டும் போது ரசிப்பான். கண்களில் நீர் பெருகும் இதயம் கொண்டவன். ஒருநாள் மாலை அரண்மனையில் அக்பர் முன் அமர்ந்து தான்சேன் சில பாடல்களை பாடுகிறான். நடுவே ஒரு பாடல். அது தான்சேன் சூர்தாஸ் பாடி கேட்டு அவனுக்கு பிடித்த பாடல். அது தான் மேலே சொன்ன பாட்டு: அக்பருக்கு சூரதாசரை அழைத்து பாடவைக்க விருப்பமாகி ஆள் அனுப்புகிறான். சூர்தாசர் ''சக்ரவர்த்தி எனக்கு கண்ணனை நினைத்து அவன் எதிரே அமர்ந்து இங்கே ஆலயத்தில் பாடினால் தான் பாடவரும் '' என்று மறுக்கிறார். இப்படித்தானே பிற்காலத்தில் தியாகராஜ ஸ்வாமிகளும் தஞ்சாவூர் மராத்திய ராஜாவிடம் எனக்கு நீ தரும் நிதியை விட ராமன் சந்நிதி போதுமே என்று.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...