Tuesday, March 12, 2019

GITANJALI



கீதாஞ்சலி

நமதுஞாபக சக்தி இருக்கிறதேஅபாரம். 
இன்று காலை என்ன சாப்பிட்டோம் என்பது கூடநினைவில் இல்லை.  நாம் எப்படி என்றோ வாழ்ந்த மகான்களை நினைக்கப்போகிறோம்? .தாடிக்காரர்களில் சிலர் மோசமாக இருப்பவர்களும் உண்டு அருமையானவர்களும் உண்டு.  பறவைகளில் குருவி,  ராஜாளி, கிளி,  கருடன் இல்லையா அது போல். நான் சொல்லும் தாடிக்காரர் வசதியானவர். எதையும் அறுக்க, வெட்ட, உடைக்கச்  சொல்லாதவர்.அமர காவியங்களைப்  படைத்தவர். உலகம் புகழ்ந்த காவியக் கவியோகி  ரவீந்த்ரநாத்தாகூர் (1861-1941). அப்போதே நோபல் பரிசு வாங்கியவர்.80 வயது வாழ்ந்த அவர் சாதித்தது எத்தனையோ யுகங்களுக்கு போதுமானது. குருதேவ்  என்றுஎல்லோராலும் போற்றப்பட்டவர். சிறந்த தத்துவ ஞானி.நமது முண்டாசு கவிஞனுக்கும் காந்திஜிக்கும்ரொம்ப பிடித்தவர்.அவர் எழுதிய கீதாஞ்சலி அற்புதமான ஒரு காவியம். அடிக்கடி   எடுத்து சிலது அப்பப்போ  படிப்பேன் .ஆஹா அதை கொஞ்சம் அள்ளி வீசினால் என்ன? 

தாகூரின்  காபூல் காரன், ராய் சரண், சுபா, போஸ்ட்மாஸ்டர்,  படிக் சக்கரவர்த்தி  போன்ற  மனதைப் பிழியும் கதைகளை உங்களுக்கு ஏற்கனவே சுருக்கி தந்திருக்கிறேன். மீண்டும் அதை படிக்க ஆசியானால் சொல்லுங்கள். மறுபடியும்  இந்த என் முக நூல்  பக்கத்த்தில் தருகிறேன். அவசியமா? 

பிஞ்சிலே பழுத்தவர் என்று  தாகூரை சொல்லலாம். முதல் வங்காள மொழிகவிதைத் தொகுப்பு 17 ஆவது வயதில்.
கீதாஞ்சலி   தாகூரின்அற்புதமான மனம் கவரும் எண்ணச் சிதறல். எல்லா மொழிகளும் எல்லோருக்கும் தெரியாது. வங்காளியில் படிக்க முடியாவிட்டாலும்  அவரே  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததை தான் நாம் படிக்க முடியும்.  

தாகூர்  குடும்பத்தில் பல கலைஞர்கள்,  கவிஞர்கள்  உள்ளார்கள். கோகோந்த்ரநாத், அபனீந்திரநாத், தேவேந்திரநாத், த்விஜேந்திரநாத்  தாகூர்கள்   பலே பலே.கீதாஞ்சலியை இனி  தினமும் ஒன்று அறிந்துகொள்வோம்.

                                                        1  எங்குமே  ஆனந்தம்.

1. Thou hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life. This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through it melodies eternally new. At the immortal touch of thy hands my little heart loses its limits in joy and gives birth to utterance ineffable. Thy infinite gifts come to me only on these very small hands of mine. Ages pass, and still thou pourest, and still there is room to fill.

தாகூருக்குகிருஷ்ணன் ஞாபகம் வந்திருக்கிறதோ? எப்படி அவன் குழலிசை கீதத்தை நினைவிலிறுத்தி ஆரம்பிக்கிறார். கீதை  தந்தவனுக்கு அஞ்சலி தான் கீதாஞ்சலியோ? யாராயிருந்தாலும்  எந்த பாஷை பேசினாலும் கிருஷ்ணனை மறந்து இயற்கையையோ தெய்வத்தையோ நினைக்க வழி உண்டா? 

''பகவானே, எனக்குகடைசிகாலம் என்று ஒன்று இல்லை. நிரந்தரமாக்கி விட்டாய். அதில் உனக்கு எவ்வளவு சந்தோஷம். இந்த தேகம்எனும் மண்பாத்திரம் அடிக்கடி உடையும், காலியாகும். ஆனால் நீ மறுபடியும் இன்னொன்று படைத்து அதில்  உயிரை உள்ளே வைத்து நிரப்புபவன். மீண்டும் புது வாழ்க்கை. !!  

அடேயப்பா, கிருஷ்ணா, நீஎப்படியப்பா, இந்த சாதாரண நாணல் மூங்கில் குழாயில்   உன் மூச்சுக்காற்றை செலுத்தி ஒரு தெய்வீக சங்கீதத்தை கொடுத்து,    காடு மலை, நதி பள்ளத்தாக்கு  என்று எங்கும் உயிர்ப்பிக்கிறாய்.ஒவ்வொரு ஒலியும் உயிரோட்டம் நிறைந்த ஒரு புது நாதம்.  ஜீவ கானம் .எல்லையற்ற நிரந்தர அமர  இன்னிசை.   உன் மூச்சுக்காற்று மட்டுமா?. உன் தெய்வீகக் கரங்கள் தாங்கி விரல்கள் அசைந்து அந்த சாஸ்வத சங்கீதம் என் மேல் காற்றில் படும்போது  நான் எங்கே இருக்கிறேன் என்றே தெரியவில்லை!   என் நெஞ்சத்திற்கு அதை எடுத்துச்  சொல்லும் சக்தி இல்லை.  வார்த்தைகள் மொழிகள் மீறிய ஒரு எல்லையற்ற இன்பம்.  அதன் அர்த்தங்கள்   எத்தனை வேதத்திலும் அடக்க முடியாதது.  நீ பரோபகாரி, எவ்வளவு அதிசயதானமாக  இதை அளிக்கிறாய்.யுகங்கள் தான் மாறி மாறி வருமே தவிர உன் கருணைப் பரிசு தொடர்ந்து தான் அளித்துக் கொண்டிருக்கிறாய். இந்த பிரபஞ்சத்தில்  எங்கே ஒரு மண் பாண்டமும் காலி இல்லையே அடடா  எல்லாமே உன் ஜீவ நாதத்தால் நிரம்பி பொங்கி வழிகிறதே!   எங்குமே ஆனந்தம். 



 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...