Saturday, March 23, 2019

GITANJALI



கீதாஞ்சலி J K SIVAN
ரவீந்திரநாத் தாகூர்

3. உன் பாட்டுக்கு நான் அடிமை

3. I know not how thou singest, my master! I ever listen in silent amazement.
The light of thy music illumines the world.
The life breath of thy music runs from sky to sky.
The holy stream of thy music breaks through all stony obstacles and rushes on.
My heart longs to join in thy song, but vainly struggles for a voice.
I would speak, but speech breaks not into song, and I cry out baffled.
Ah, thou hast made my heart captive in the endless meshes of thy music, my master!

கிருஷ்ணா, நான் பாடுவது இருக்கட்டும். என்னால் எவ்வளவு நன்றாக பாட முடியும் என்று நினைக்கிறேனோ அப்படி படுகிறேன். அதில் எனக்கே திருப்தி இல்லை.

உன்னால் எப்படி இவ்வளவு அதிசயமாக அபூர்வமாக ஆனந்தமாக பாட இயற்கையாகவே முடிகிறது. அதை கேட்டு அசந்து சிலையாகி விட்டேன். நிச்சயமாக உன் கானத்தில் ஒரு ஒளி இருக்கிறது அது தான் இந்த பிரபஞ்சத்தையே பொன்மயமாக்குகிறது. உன் கானத்தின் உள் மூச்சில் உயிர் சக்தி இருக்கிறதே அது ஆகாயம், அதற்கு மேல் இன்னொரு ஆகாயம், இன்னும் மேலே, இன்னுமே மேலே, .அடடா ..எல்லையின்றி சொல்லமுடியாமல் பரவிக்கொண்டே போகிறது. அந்த கான வெள்ளத்தின் முன் எதிற்பட்ட தடங்கல் எதுவெல்லாமோ தூள் தூளாக சுக்கு நூறாக சிதறுகிறது. என்ன சக்தி என்ன வேகம் ! என் இதயம் விம்முகிறது. உன் கானத்தோடு இணைய துடிக்கிறது. மயில் பாட ஆசைப்படலாமா? . குரல் இல்லையே! பேச்சு மட்டும் ஏதோ வருகிறது. பேச்சு பாட்டாகுமா? அழுகை அழுகையாக வருகிறது. என்னை ஏன் இந்த இக்கட்டில் விட்டாய் கிருஷ்ணா.? ஏன் என்னை உன் கானாம்ருதத்தில் சிக்குண்டு அடிமையாக்கி விட்டாய் என் எஜமானே, நான் உன் அடிமையல்லவா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...