Saturday, March 9, 2019

ஸ்ரீமத் பாகவதம்  11 வது காண்டம் உத்தவ கீதை                             J K SIVAN
                                                      
               ''உத்தவா  இதை  கவனமாக கேள் ''

வேதவியாசர் சாதாரண  மனிதர் அல்ல. மற்ற ரிஷிகள் முனிவர்கள் போலும் அல்ல.  விஷ்ணு சஹஸ்ரநாமத்தில்  ''வியாச ரூபாய விஷ்ணவே''  என்று வரும். விஷ்ணுவின் அம்சம்.  இல்லாவிட்டால் இத்தனை புராணங்கள், இதிகாசங்கள், உபநிஷத், பகவத்  கீதை,விஷ்ணு சஹஸ்ரநாமம் எல்லாம் எழுத முடியுமா.

உத்தவகீதை பதினெண் புராணங்களில் ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பதினோராவது ஸ்கந்தமாக அமைந்துள்ளது. இந்தப் பதினோராவது ஸ்கந்தத்தில் சிறந்த கிருஷ்ண பக்தரும்,  மந்திரி,  கிருஷ்ணனின் சித்தப்பா  என்ற யோக்கியதாம்சங்கள் கொண்ட  உத்தவருக்கு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அருளிய உபதேசம்தான் உத்தவ கீதை என அறியப்படுகிறது. உத்தவ கீதை, 1367 சுலோகங்களுடன், முப்பத்தி ஒன்று அத்தியாயங்கள் கொண்டுள்ளது. ஏழாவது அத்தியாயம், சுலோகம் 19 முதல் ஸ்ரீகிருஷ்ணர் உத்தவருக்கு அருளிய உபதேசம் தொடங்குகிறது.

உத்தவ கீதை மூலம், ஸ்ரீகிருஷ்ணர் 125 ஆண்டுகள் வரை வாழ்ந்தார் என அத்தியாயம் ஆறு, சுலோகம் 25 மூலம் தெரியவருகிறது.  இதில்  மஹாபாரதத்தில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு  பகவத் கீதையாக  சொன்னதை விட  சில   அதிக விஷயங்கள், உபரி விஷயங்கள் உத்தவன் மூலமாக  நமக்கு கிருஷ்ணன்  சொல்வதை விசயாசர்  மூலம்  அறிகிறோம்.   

kṛtvā daitya-vadhaṁ kṛṣṇaḥ sa-rāmo yadubhir vṛtaḥ
 bhuvo 'vatārayad bhāraṁ javiṣṭhaṁ janayan kalim
 
 ye kopitāḥ su-bahu pāṇḍu-sutāḥ sapatnair
 durdyūta-helana-kaca-grahaṇādibhis tān
 kṛtvā nimittam itaretarataḥ sametān
 hatvā nṛpān niraharat kṣiti-bhāram īśaḥ
bhū-bhāra-rāja-pṛtanā yadubhir nirasya
 guptaiḥ sva-bāhubhir acintayad aprameyaḥ
 manye 'vaner nanu gato 'py agataṁ hi bhāraṁ
 yad yādavaṁ kulam aho aviṣahyam āste
naivānyataḥ paribhavo 'sya bhavet kathañcin
mat-saṁśrayasya vibhavonnahanasya nityam
antaḥ kaliṁ yadu-kulasya vidhāya veṇu-
stambasya vahnim iva śāntim upaimi dhāma
evaṁ vyavasito rājan satya-saṅkalpa īśvaraḥ
śāpa-vyājena viprāṇāṁ sañjahre sva-kulaṁ vibhuḥ
sva-mūrtyā loka-lāvaṇya-nirmuktyā locanaṁ nṛṇām
 gīrbhis tāḥ smaratāṁ cittaṁ padais tān īkṣatāṁ kriyāḥ
 ācchidya kīrtiṁ su-ślokāṁ vitatya hy añjasā nu kau
tamo 'nayā tariṣyantīty agāt svaṁ padam īśvaraḥ

க் ̄த்வா ைதத்யவதம் க் ̄ஷ்ண: ஸராேமா ய¢பிர்வ் ̄த:
©ேவா(அ)வதாரயத்பாரம் ஜவிஷ்டம் ஜனயன் கலிம் - 1
ேய ேகாபிதா: ஸுபஹுபாண்ஸுதா: ஸபத்ைன-
ர்¢ர்த்®தேஹலனகசக்ரஹணாதிபிஸ்தான்
 க் ̄த்வா நிமித்தமிதேரதரத: ஸேமதான்
ஹத்வா ந் ̄பான் நிரஹரத்க்ஷிதிபாரமீஶ: - 2
aபாரராஜப் ̄தனாய¢பிர்னிரஸ்ய
குப்ைத: ஸ்வபாஹுபிரசிந்தயதப்ரேமய:
மன்ேய(அ)வேனர்ன§ கேதா(அ)ப்யகதம் ஹி பாரம்
யத்யாதவம் குலமேஹா அவிஷஹ்யமாஸ்ேத - 3
ைநவான்யத: பரிபேவா(அ)ஸ்ய பேவத்கதஞ்சி-
ந்மத்ஸம்ưரயஸ்ய விபேவான்னஹனஸ்ய நித்யம்
அந்த:கலிம் ய¢குலஸ்ய விதாய ேவ ஸ்தம்பஸ்ய
வஹ்னிமிவ ஶாந்தி«ைபமி தாம - 4
ஏவம் வ்யவஸிேதா ராஜன் ஸத்யஸங்கல்ப ஈưவர:
ஶாபவ்யாேஜன விப்ராணாம் ஸஞ்ஜஹ்ேர ஸ்வகுலம் வி©: - 5
ஸ்வ¬ர்த்யா ேலாகலாவண்யனிர்«க்த்யா ேலாசனம் ந் ̄ணாம்
கீர்பிஸ்தா: ஸ்மரதாம் சித்தம் பைதஸ்தானக்ஷதாம் ீ க்ரியா: 6
ஆச்சித்ய கீர்திம் ஸுưேலாகாம் விதத்ய ஹ்யஞ்ஜஸா
 ெகௗதேமா(அ)நயா தரிஷ்யந்தத்யகாத்ஸ்வம் ீ பதமீưவர: - 7
ராேஜாவாச
ப்ரஹ்மண்யானாம் வதான்யானாம் நித்யம் வ் ̄த்ேதாபேஸவினாம்
விப்ரஶாப: கதமaத்வ் ̄ஷ்ணனாம் ீ க் ̄ஷ்ணேசதஸாம் - 8
யன்னிமித்த: ஸ ைவ ஶாேபா யாத் ̄ேஶா த்விஜஸத்தம
கதேமகாத்மனாம் ேபத ஏதத்ஸர்வம் வதஸ்வ ேம - 9
1⁄4ஶுக உவாச
பிப்ரத்வ©: ஸகலஸுந்தரஸன்னிேவஶம்
கர்மாசரன் ©வி ஸுமங்கலமாப்தகாம:
ஆஸ்தாய தாம ரமமாண உதாரகீர்தி:
ஸம்ஹர்¢ைமச்சத குலம் ஸ்திதக் ̄த்யேஶஷ: - 10


கலியுகம் துவாபர யுகத்தை விழுங்கும் சமயம். க்ரிஷ்ணனின் யதுகுளம் சபிஜாடா ஒருவருமில்லாமல் அழிய ரிஷிகள் சாபமிட்டுவிட்டனர். அதற்கு முக்கிய காரணமே  கிருஷ்ணன் மகன் சாம்பன் அவர்களை கேலியும் அவமானமும் செய்ததுதான்.  கிருஷ்ணன் தனது  குலம்  தனக்குப்பின் அழிய திட்டமிட்டுவிட்டாரோ என்னவோ?

பரீக்ஷித் மன்னா, சொல்கிறேன் கேள் :  யாதவர்கள் கெட்டுப்போய்விட்டார்கள், திருத்த முடியாத நிலை. இனி அவர்கள் அழியவேண்டிய நிலை.  கௌரவர்கள் பாண்டவர்கள் யுத்தத்திலேயே  பூமியின் பாரம் குறைந்துவிட்டது.   ஒரு பிரளயம் மாதிரி இந்த யுத்தம்.  எல்லாமே  கிருஷ்ணன் ஏற்பாடு தான்.  அதற்காகத்தானே  அவதாரமே எடுத்தது.
கிருஷ்ணா நீயே  சர்வ ஆதாரம். எல்லாம் உன் செயலாலே. எதுவும் உன் சங்கல்பத்தாலே.  நீ  முடிவெடுத்துவிட்டால் அதன் பிறகு என்ன மாற்றம்?  ''கிருஷ்ணன் பதிலளித்தான்.... நீ சொல்வது நீ சொல்லாதது எல்லாமே நான் அறிவேன்.  தேவர்களுக்கு  நான் கொடுத்த வாக்கு, அதற்காக நான் எடுத்த  என் அவதார  காரியம் முடிந்துவிட்டது.பூமாதேவியின் குறை தீர்ந்து விட்டது. பாரம்  குறைந்துவிட்டது. நான் இல்லாவிட்டால் என் குலத்தவர் இன்னும் பல தீங்குகளை செய்வார்கள் என்பதால் அவர்களையும்  தங்களை தாங்களே அழித்துக் கொண்டு முடிவு கட்டியாகி விட்டது.  இதற்காக  தானே  ஒரு சந்தர்ப்பம்  ஏற்படுத்தி துர்வாசர் என் மகன் சாம்பன் செயலுக்காக சாபம் அளிக்க காரணமாக இருந்தேன்.  யதுகுலத்தவர்களில் மூத்தவர்களை அழைத்து   ''துர்வாசர் மற்றும் சில பிராமணர்கள் சாபத்தால் இனி துர்சகுனங்கள்  தோன்றுகிறது.அனைவரும் இங்கிருந்து  ப்ரபாஸ க்ஷேத்திரம் செல்லுங்கள் என்று சொன்னேன்.  எல்லாம்  விஷ்ணு மாயை.   பலராமன்  ஆதிசேஷனாக மீண்டும்  வைகுண்டம் திரும்பி விட்டான். 
கிருஷ்ணனின் முடிவும்  வந்துவிட்டது.  பெருத்த ஒரு  அஸ்வத்த  (ஆலமரம்) அடியில்  அமர்ந்து கிருஷ்ணன்  தனது ஆத்ம  தியானத்தில்  ஈடுபடுகிறார். அப்போது தான் அவர் உறவினரும்  சிறந்த சிஷ்யருமான  உத்தவர் கிருஷ்ணனை அணுகுகிறார்.
''கிருஷ்ணா, நீ  இந்த பூமியை விட்டு  வைகுண்டம் திரும்ப போகிறாயாமே. நீ இன்றி நான் இங்கே எப்படி வாழ்வேன்? என்னையும் அழைத்து செல் ''
''உத்தவா, நீ  சிலகாலம் இங்கே இருந்து செய்யவேண்டிய  காரியம்  கொஞ்சம் இருக்கிறது. சில விஷயங்கள் உனக்கு  போதிக்கிறேன். அதன் மூலம் எல்லோரும் என்னை அடையமுடியும்.  பதரிகாச்ரமம் சென்று  அங்குள்ள   நர நாராயண ரிஷிஇடமும், மற்றவர்களிடமும்  நான் சொல்வதை சொல். நீ என்  பக்தன். na tathä me priyatama ätma-yonir na çaìkaraù na ca saìkarñaëo na çrér naivätmä ca yathä bhavän ''
''உத்தவா, நீ எனக்கு நெருக்கமானவன்.   எனக்கு வேண்டிய  ப்ரம்மா, சிவன், ஆதிசேஷன், லட்சுமி அனைவரையும் விட  தேர்ந்தெடுத்தேன். 
.asmäl lokäd uparate mayi jïänaà mad-äçrayam arhaty uddhava eväddhä sampraty ätmavatäà varaù 
இன்னும் சற்று நேரத்தில் இந்த உலகை விட்டு  சென்றுவிடுவேன்.  பொறுப்பானவனாக உன்னிடம் சில ரஹஸ்யங்களை சொல்கிறேன். இன்றும் திவ்யதேசமான  பத்ரிகாஸ்ரமத்தில் நரநாராயணனாக இருப்பது கிருஷ்ணன் தான். 
உலகமே ஒரு குடும்ப வாழ்க்கையைப் போல தான் இருக்கிறது. எப்படி விடுதலை பெற்று   கிருஷ்ணனை அடைவது.  அதற்காகத்தான்  உத்தவனிடம்  ''  உத்தவா,  இனி கலியுகம் உலகத்தை புரட்டி போடப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஹிமாலய ஆரண்யங்களுக்கு செல். ரிஷிகளோடு இரு என்று கிருஷ்ணன் போதித்தது தான் உத்தவ கீதை.  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...