Tuesday, February 20, 2018

NEETHI SATHAKAM

ராஜா பர்த்ருஹரியின்  நீதி சதகம்:      J.K. SIVAN

                                        சுபாஷிதம்  - 12

केयूराणि न भूषयन्ति पुरुषं हारा न चंद्रोज्ज्वला
न स्नानं न विलेपनं न कुसुमं नालंकृताः मूर्धजाः ।
वाण्येका समलंकरोति पुरुषं या संस्कृता धार्यते
क्षीयन्तेऽखिलभूषणानि सततं वाग्भूषणं भूषणम् ॥


Keyooraani na bhooshayanti purusham haaraa na chandrojjwalaa
Na snaanam na vilepanam na kusumam naalamkritaa moordhajaah
Vaanyekaa samalankaroti purusham yaa samskritaa dhaaryate
Ksheeyante’khila bhooshanaani satatam vagbhooshanam bhooshanam 1.18

ஒருவனுக்கு  எது மகிழ்ச்சியூட்டும் அலங்காரம் தெரியுமா?   பளளபளக்கும்  தங்க அபரணமோ, வைரமோ, கமகமக்கும் சந்தன பூச்சோ  அல்ல, வண்ணவண்ண  மலர் மாலைகளும் இல்லவேயில்லை.   மிருதுவாக அன்புகலந்த மனம் திறந்த பேச்சு ஒன்றே அவனை காந்தமாக  மற்றவர்கள் கவர்ச்சி செய்கிறது. அதற்கு இணை எதுவுமே இல்லை. 

क्षान्तिश्चेत्कवचेनकिं? किमरिभिः क्रोधोऽस्तिचेद्देहिनां
ज्ञातिश्चेदनलेन किं? यदि सुहृत् दिव्यौषधैः किं फलम् ?।
किं सर्पैर्यदिदुर्ज्जनाः किमु धनैर्विद्यानवद्या यदि
व्रीडा चेत्किमुभूषणैः सुकविता यद्यस्ति राज्येन किं ?

Kshaantishchet kavachena kim? Kimaribhih krodhosticheddehinaam
Jnaatishchedanalena kim? Yadi suhrit divyaushadhaih kim phalam
Kim sarpairyadi durjanaah kimu dhanairvidyaanavadyaa yadi
Vreedaa chetkimu bhooshanaih sukaviataa yadyasti raajyena kim 1.20

ஒருவனிடத்தில் பொறுமை லிருந்தால் அதுவே பூஷணம் மட்டும் அல்ல.  அவனது பாதுகாப்பும் கூட. வேறு எந்த இரும்பு கேடயமும் வேண்டாம் அவனைக் காத்துக்கொள்ள.  இவனிடம் கோபம் ஆங்காரம் இருக்கிறதோ அவனுக்கு வேறு எதிரியே வேண்டாம். அதுவே போதும் அவனை அழிக்க. நிறைய உறவினர்கள் உன்னைத் சூழ்ந்து இருக்கிறார்களா. அப்படியென்றால் உனக்கு  வேறு சூடு, கனகணப்பு வேண்டாம். உன்னைச்  சூடேற்ற  வேறு நெருப்பே வேண்டாம். உன் வியாதிகளுக்கு கை கண்ட மருந்து உன் நண்பனே. கெட்டவர் களோடு  சகவாசம் ஒருவனுக்கு இருந்தால் ஒரு விஷமுள்ள பாம்புடன் பழகுவது போல் அந்த நட்பு  அவனைக்  கொன்றுவிடும்.  சிறந்த கல்வியறிவு, பூரண ஞானம் ஒருவனுக்கு இருப்பின் அதைக் காட்டிலும் அளவற்ற செல்வம் எதுவும் இல்லை. வெட்கம், நாணம் உள்ள பெண்ணுக்கு தங்க வைர ஆபரணங்கள் தேவையே இல்லை. இன்னொரு விஷயமும் சொல்கிறேன்.  கவிதை, காவியம், இலக்கியம், இதில் மனம் முழு ஈடுபாடு கொண்டுவிட்டால் ஆஹா  அவன் தான் ஏக போக சக்ரவர்த்தி. வேறு தனியாக ஒரு  சாம்ராஜ்யம் வேண்டவே வேண்டாம். 

दाक्षिण्यं स्वजने दया परिजने शाठ्यं सदा दुर्जने
प्रीतिस्साधुजने नयो नृपजने विद्वज्जनेष्वार्जवम् ।
शौर्यं शत्रुजने क्षमा गुरुजने कान्ताजनॆ धृष्टता
ये चैवं पुरुषाः कलासु कुशलाः तेष्वेव लोकस्थितिः ॥

Daakshinyam swajane dayaa parijane shaathyam sadaa durjane
Preetih saadhujane nayo nripajane vidwajjaneshwaarjavam
Shauryam shatrujane kshamaa gurujane kaantaajane dhrishtataa
Ye chaivam purushaah kalaasu kushalaasteshweva lokasthitih 1.21

உனக்கு  மற்றவர்களோடு பழக்க பிடிக்குமா, மனம் விட்டு பேசுவாயா, அவர்களது அன்பை சம்பாதிக்க தெரிந்தவனா, தாராள மனசா, உறவு நட்பு, சக ஊழியர்களிடம் சமரச அன்பு,  கெட்டவர்களை அருகில் சேர்த்துக்கொள்ளாத பழக்கம், ஆன்மீக சாதுக்களிடம் மரியாதை, பக்தி, அரசன், ராஜரீக விஷயத்தில் சமயோசிதம்,நேர்மை  படித்தவர்களிடம் பண்பு, எதிரிகளிடம் பயமில்லாத தீரம், பெரியோரிடம் பதவிசு, மரியாதை, பெண்களை மதிக்கும் பாங்கு  இதெல்லாம் உன்னிடம் இருந்தால் உனக்கு டிமாண்ட். உலகம் உன்னை மாதிரி ஆட்களைத்தான்  தேடிக்கொண்டிருக்கிறது. உங்களைத்தான் நம்பி இருக்கிறது.

स्वल्पस्नायु वसावसेकमलिनं निर्मांसमप्यस्थिकं
श्वा लब्ध्वा परितोषमेति न तु तत्तस्य क्षुधा शान्तये।
सिंहो जम्बुकमंगमागतमपि त्यक्त्वा निहन्ति द्विपं
सर्वः कृच्छ्रगतोऽपि वाञ्झति जनः सत्वानुरूपं फलम् ॥

Swalpa-snaayu-vasaavaseka-malinam nirmamsamapyasthikam
Shwaa labdhwaa paritoshameti na tu tattasya kshudhaa shaantaye
Simho jambukamankamaagatamapi tyaktwaa nihanti dwipam
Sarvah krichchhragato’pi vaajnchchhati janah satwaanuroopam phalam 1.29

ஒரு நாய்க்கு  எங்காவது ஒரு எலும்புத்துண்டு கொஞ்சம் ரத்தத்தோடும் சதையோடும்  ஒட்டிக்கொண்டிருந்தால் போதும். அது பசி தீர்க்காவிட்டாலும் பரம சந்தோஷத்துடன் அதைக்கவ்விக்கொண்டு எங்காவது சௌகர்யமாக உட்கார்ந்துகொண்டு அதை ரசித்து கடிக்கும்.  பசித்த சிங்கம் அப்படி இல்லை.  அருகிலேயே ஒரு கொழுத்த குள்ளநரி கிடைத்தாலும் அதை கொன்று விழுங்காது.  எங்கோ உள்ள ஒரு யானையைத்தான் குறி வைத்து தாக்கி உண்ணும். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், கல்விமான்கள், பண்டிதர்கள், வறுமை, ஏழ்மை வாட்டினாலும் அவர்களுடைய கௌரவம், மேன்மை, மதிப்பு எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். தங்கள் அந்தஸ்துக்கு தகுதியான மரியாதையை மட்டுமே  ஏற்றுக் கொள்வார்கள்.


परिवर्तिनि संसारे मृतः को वा न जायते।
स जातो येन जातेन याति वंशः समुन्नतिम् ॥

Parivartini samsaare mritah ko vaa na jaayate
Sa jaato yena jaatena yaati vamshah samunnatim 1.31

எத்தனை பிறவிகள், எத்தனை மரணங்கள், மாற்றி மாற்றி அனுபவிக்கிறான் மனிதன். யார் அவனை லக்ஷியம் பண்ணுகிறார்கள்?   ஆனால்  எவன் தான் பிறந்த குலத்துக்கு, சமுதாயத்துக்கு  பெருமை, மேன்மை பெற்று தருகிறானோ, அதை உயர்த்துகிறானோ,  அவன்  தான் உண்மையில் பிறந்ததன் பயனை அனுபவித்தவன்.

ராஜா  பர்த்ருஹரி  சொல்கிற வார்த்தைகள் முத்துக்கள் என்பதில் உங்களில் யாருக்காவது ஏதாவது சந்தேகம் இருக்கிறதா? அவர் இன்னும் தொடர்ந்து பேசப்போகிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...