Saturday, February 10, 2018

KRISHNA KARNAMRUTHAM




பில்வமங்கள் என்கிற லீலா சுகர் - J.K. SIVAN


கர்ணாம்ருதம் என்றால் சிலருக்கு புரியாமல் இருக்கலாம். சிம்பிள். கர்ணம் என்றால் காது. காது குத்தும் விழாவுக்கு கர்ண பூஷண பத்திரிகை வீட்டுக்கு நிறைய வந்திருக்குமே. அம்ருதம் என்றால் தேவ மிர்தம், பாற்கடலில் தேவர்களுக்கு கிடைத்த அமரத்வம் தரும் டானிக். அப்படி ஒரு இனிய சுவைமிக்க ஒரு வஸ்து காதுக்குள் நுழைந்தால் எப்படி சந்தோஷமாக இருக்கும். நல்ல பாடல், இனிய குரல், அர்த்தம் செறிந்த ஒரு கவிதை, சுகமான ராகத்தில் காதுக்குள் நுழைந்தால்....?? அதைதான் நான் மேலே சொன்ன சிம்பிள் தமிழில் ''இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே'' என்று பாரதியார் தனக்கே உரித்தான கொஞ்சும் தமிழில் சொன்னார்.

அப்படி இன்பத்தேனாக காதில் நுழையும் ஒரு அற்புத பாடல் தொகுப்பு பக்தி நிறைந்த ''கிருஷ்ண கர்ணாம்ருதம்'' இதில் என்ன அதிசய பொருத்தம் என்றால். கிருஷ்ணன் என்று சொன்னாலே என் போன்றோருக்கு ''கிக்'' ஏறிவிடும். அந்த கிருஷ்ணனை இன்னும் அற்புதமாக வர்ணித்து இனிய சுவை கூட்டி ஸ்லோகங்களாக சொன்னால்....!! அது தான் கிருஷ்ண கர்ணாம்ருதம்.

ஒரு அபூர்வ பக்தி ரசம் சொட்டும் காவியம் ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம். யாருடைய கர்ணத்தில் (செவியில்) இது அம்ருதமாக பாய்கிறது? ''தேன் வந்து பாயுதே'' என்று பக்தன் காதிலா, அல்லது பக்தனின் பரிசுத்த பக்தி பாடல் -தேனாக பகவான் காதிலா? எப்படி எடுத்துக்கொண்டாலும் சரியாகவே உள்ளது. என்னை மிகவும் ஈர்த்தது இந்த ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம். ஸ்ரீ எம். கே. வெங்கட்ராமன் அவர்கள் எழுதிய இந்த ஸ்லோகங்களின் அர்த்தங்கள் படித்தேன். ரொம்ப ரசித்தேன். என் நண்பர், நமது முகநூல், வாட்ஸாப் அன்பார் ஸ்ரீ பம்பாய் எஸ். விஸ்வநாதன் இதை புத்தமாக எனக்கு அனுப்பியிருந்தார். in a piece of paper, he added a note ''Respected Sivan sir, ...... I will be overjoyed if you find this book useful for your writing to us..''

உங்களுக்கு மீண்டும் ஞாபக படுத்த ஒரு சின்ன விஷயம் --- லீலா சுகர் இதை எழுதுமுன் ஒரு சைவர். பில்வமங்கள் என்று பெயர். சமாதி வடக்கே மதுராவில் இருந்த போதிலும் அவர் கேரளக்காரர் தான். எப்படியாம்? அவர் வர்ணிக்கும் குழந்தை கிருஷ்ணன் புலி நகம் தரித்திருக்கிறான். இது மலையாள தேச வழக்கம். ''பால முகுந்தாஷ்டகம்'' எழுதியிருக்கிறார். இதில் ஏதோ ஒரு பக்கமோ இரண்டு பக்கமோ தான் சைதன்யர் கையில் எப்போதோ எங்கோ ஆந்திராவில் கிடைத்தது.

சில சமயம் வேற் கடலை மடித்து வரும் காகிதத்தை விரும்பிப் படிப்போம். காசு கொடுத்து வாங்கும் புத்தகத்தில் இல்லாத அலாதி விஷயங்கள் கிழிந்த அந்த அரைபக்கத்தில் இருப்பதாக சந்தோஷம் பொங்கும். சைதன்யர் இந்த துண்டு காகிதத்தை படித்து ''அடடா, இது அதி அற்புதமாக அல்லவோ இருக்கிறது. இதை யார் எழுதியது?. முழுபுத்தகமும் எனக்கு வேண்டுமே'' என்று சொல்ல சிஷ்யர்கள் எங்கெங்கோ ஓடி கேரளாவில் முழு ஓலைச் சுவடியும் கிடைத்தது. இந்த புத்தகம் சைதன்ய மகா பிரபு கையில் கிடைத்ததால் நம் அதிர்ஷ்டம் இன்று இதை புத்தகமாக படிக்கிறோம்.

பில்வமங்கள் நிறையவே எழுதியிருக்கிறார். குருவாயூரப்பன் மீது அலாதி பிரேமை.'' உன்னி கிருஷ்ணா நீ வாடா'' என்றால் அவர் முன் வந்து நிற்பான்.

चिन्तामणिर्जयतु सोमगिरिर्गुरुर्मे
शिक्षागुरुश्च भगवान् शिखिपिञ्छमौलिः।
यत्पादकल्पतरुपल्लवशेखरेषु
लीलास्वयंवररसम् लभते जयश्रीः॥ १-१

சிந்தாமணிர்ஜயதி ஸோமகி³ரிர்கு³ருர்மே
ஶிக்ஷாகு³ருஶ்ச ப⁴க³வாந் ஶிகி²பிஞ்ச²மௌலி: ।
யத்பாத³கல்பதருபல்லவஶேக²ரேஷு
லீலாஸ்வயம்வரரஸம் லப⁴தே ஜயஶ்ரீ: ॥ 1.1॥

ஏற்கனவே ஹரிதாஸ் படம் (MKT பாகவதர் நடித்தது) பற்றி சொல்லியிருக்கிறேன்.'' கிருஷ்ணா முகுந்தா'' பாடல் நாலரை -ஐந்து கட்டையில் இன்றும் எங்கும் 70 வருஷத்துக்கு அப்புறமும் எதிரொலிக்கிறது. மூன்று தீபாவளி ஒரே சினிமா கொட்டகையில் பார்த்த படம். அவர் பில்வமங்களாக நடித்த படம். ஹரிதாஸ் கதையில் பில்வ மங்கள், சிந்தாமணி என்ற வேசி லோலன். அவனை கிருஷ்ணன் பக்கம் சேர்த்தவள் வேசி சிந்தாமணி. அவளைப் பற்றியே முதல் ஸ்லோகம் அமைந்ததை யாராவது எதிர்த்தாலும், யார் ஒருவனை கிருஷ்ணனை மனதால் நாட உபதேசித்தாலும் அவர் உயர்ந்தவர் என்ற தகுதியில் முதல் ஸ்லோகத்தில் அவரை வணங்குவது மிகவும் சரி.

''இந்த சுட்டிப் பயல் கிருஷ்ணன் ஒரு அவதாரம் என்றே வைத்துக்கொண்டாலும் மற்ற பகவானின் அவதாரங்களை விட சிறந்தவன்.எப்படி?

மற்ற அவதாரங்களில் அவர் கையில் ஏதாவது ஒரு ஆயுதம் இருக்கும், நிறைய ஆபரணங்கள், கிரீடம், எல்லாம் இருக்கும். பெரிய ராஜ, பிராமண குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். குதிரை யானை, அரண்மனை .... இப்படி ஏதாவது ஒன்று இருக்கும். ஆனால் இந்த கிருஷ்ணன் பயலைப் பாருங்கள். ஏதோ ஒரு மயில் இறகை தலையில் செருகி, அதுவே அவன் கிரீடம். சாதாரண மக்கள் வீட்டில் வளர்ந்து, பழகி, மண்ணில் விளையாடி, நீரில் குதித்து, வெண்ணை திருடி....... சாதாரணமானவனாகவே இருக்கிறான். பாமரர்க்குள் பரமன்.

பில்வமங்கள் ஆசார்யன் சோமகிரி தனக்கு கோபால மந்த்ரம் உபதேசித்ததால் கிருஷ்ணன் பிரத்யக்ஷமாக தோன்றினான் என்கிறார்.

अस्ति स्वस्तरुणीकराग्रविगलत्कल्पप्रसूनाप्लुतम्
वस्तु प्रस्तुतवेणुनादलहरीनिर्वाणनिर्व्याकुलम्।
स्रस्त स्रस्त निरुद्धनीवीविलसद्गोपीसहस्रावृतम्
हस्तन्यस्तनतापवर्गमखिलोदारम् किशोराकृति॥ १-२

asti svaḥ taruṇī kara agra vigalat kalpa prasūna āplutam
vastu prastuta veṇu nāda laharī nirvāṇa nirvyākulam
srasta srasta niruddha nīvī vilasat gopī sahasra āvṛtam
hasta nyasta nata apavargam akhila udāraṁ kiśora ākṛti

அஸ்தி ஸ்வஸ்தருணீகராக்³ரவிக³லத்கல்பப்ரஸூநாப்லுதம்
வஸ்துப்ரஸ்துதவேணுநாத³லஹரீநிர்வாணநிர்வ்யாகுலம் ।
ஸ்ரஸ்தஸ்ரஸ்தநிருத்³த⁴நீவிவிலஸத்³கோ³பீஸஹஸ்ராவ்ருʼதம்
ஹஸ்தந்யஸ்தநதாபவர்க³மகி²லோதா³ரம் கிஶோராக்ருʼதி ॥ 1.2॥

இந்த காட்சியை ரசியுங்கள்.
ஒரு சிங்கக் குட்டி அழகாக தனது புல்லாங்குழலை தாமரை இதழ்களில் வைத்து ப்ரணவத்தையே ஜீவனாக கொண்ட மனதை வருடும் மெல்லிய இனிய கீதம் பாடுகிறது. அசையும் எதுவும் அசையாமல் அதில் கட்டுண்டு மயங்கி நிற்கிறது. இடுப்பு துணி அவிழ்ந்தது கூட சரி செய்ய நேரமில்லாமல் எண்ணற்ற கோபியர் நறுமண மலர்களை கைநிறைய ஏந்தி வந்து அவன் மீது விரல் நுனியால் மலர் மாரி பொழிகிறார்கள். அவன் தேவாதி தேவனல்லவா. அவனிடம் முக்தி பெறப்போகிறவர்களாயிற்றே!

அடுத்த கட்டுரையில் மேற்கொண்டு ரசிப்போம். In the meantime, you can enjoy Krishna Mukunda song by MKT, an all time famous song by clicking the link https://youtu.be/1LZGwwdGvAAhttps://youtu.be/1LZGwwdGvAA



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...