Saturday, February 3, 2018

PERIYAVA


''உஷ்..... பெரியவா பேசறா.......சப்தம் போடாமல் கேளுங்கோ'' J.K. SIVAN :

எங்கும் அமைதி. மனமும் எந்த சூறாவளியின் தாக்குதல் இல்லாமல் தெளிவாக அமைதியாக இருந்தது.

தனியே நானும் எதிரே மஹா பெரியவா தத்ரூபமாக என்னை பார்த்து ' ஹே துரும்பே! '' என்று புன்னகைத்தவாறு.
என் கண்கள் அவரையே உற்று இமை கொட்டாமல் விழித்தன. மெல்லியதாக அசையாமல் தீபம் எரிந்தது. ஊதுவத்தி நல்ல கலப்படமில்லாத நறுமணம் வீச மலர்களைத்தூவி அவரை வணங்கின என் கைகள்.

''உம். சொல்லுங்கள். உங்கள் உபதேசத்துக்காகத்தானே காத்திருக்கிறேன்''
வார்த்தைகள் பேசாசமலேயே அவரிடமிருந்து என் மனதில் குடியேறின.

உரக்க உங்களுக்கும் சொல்கிறேன் அவர் என்ன சொன்னார் என்று. கேளுங்கள். பயனுறுங்கள்:

''சாத்விகம்னு சொன்னேனே, அது என்ன தெரியுமாடா?

''சொல்லுங்கோ பெரியவா''.

'' போஜனம் உடம்பை வளர்ப்பதற்கு மட்டுமில்லை. உள்ளத்தை வளர்த்துக்கொள்வதற்கும் உபயோகப்படணும். சாஸ்திரங்களில் ஆகாரத்தைப் பற்றி அநேக நியமங்கள் சொல்லியிருக்கு. சத்வ குணத்தை விருத்தி செய்யும்படியான ஆகாரம் சாப்பிடவேண்டும். கோபதாபம், காம மோகம்,பதற்றம் இதை எல்லாம் வளர்க்காத ஆகாரம் தான் அவசியம். அதற்காக ஒரேயடியாக மந்தமாகிச் சோம்பியும் வழியாமல், எல்லோரிடத்திலும் சாந்தமாகவும் பிரியமாகவும் இருக்கணும். ல்ல சிந்தனா சக்தியுடனும் க்ரியா சக்தியுடனும் இருப்பதுதான் சத்வ குணம், சாத்விகம் என்பது. மற்றதெல்லாம் ரஜஸ் - ரஜோ ணம் அல்லது ராஜஸ குணம் அல்லது ஒரே சோம்பல், தாமஸ குணம். இப்படி மூன்று குணங்கள்.உணர்ச்சியமயமாக, ஓவர் எமோஷனலாக, தடாபுடா என்று தாறுமாறாகக் காரியம் பண்ணுவது ரஜஸ். அது ஒரு ‘எக்ஸ்ட்ரீம்' (கோடி) .ஒரே ‘டல்'லாக, எதற்கும் பிரயோஜனமில்லாமல் புத்தியில்லாமல் கார்ய சக்தியுமில்லாமலிருப்பது தமஸ் இன்னொரு ‘எக்ஸ்ட்ரீம்'. இரண்டுக்கும் நடுவே சமநிலையில் ‘பாலன்ஸ்டாக' இருப்பது சத்வம். மனசின் எழுச்சி ரஜஸ்; தாழ்ச்சி தமஸ்; ஸம நிலை ஸத்வம். புரியறதா
எண்ணம் காரியம் எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கணும். இந்த ஸத்வத்தையும்விட உசந்த ஒரு நிலை உண்டு. அங்கே மனஸ் (எண்ணம்), சரீரம் (காரியம்) இதுகளை ஒருத்தன் அடியோடு கடந்துவிடுவான். தமஸ் மனஸின் தாழ்ச்சி என்றால், இது மனஸின் வீழ்ச்சி! தமஸிலே தூங்குவான். இதிலே சமாதி நிலைமை அநுபவிப்பான்! ரெண்டுக்கும் என்ன வித்யாசமென்றால், தூங்குகிறவனுக்குத் தன்னைத் தெரியாது. சமாதியிலிருக்கிறவன் வெளியில் பார்த்தால் தூங்குகிறாற் போலத்தானிருந்தாலும் அவனுக்குத் தன்னை நன்றாகத் தெரியும். தான் ஒன்றுதான் இருக்கிற எல்லாமும் என்று தெரியும். இப்படியிருக்கிறவன்,

நாமெல்லாம் 'நான்', 'நான்' என்று எதையோ சொல்லிக்கொண்டு அதற்காக இத்தனை ஹிம்ஸையும் பட்டுக்கொண்டி
ருக்கிறோமே,

சத்வ குணவான் அந்த ‘நானை'ப் பற்றின நினைப்போ, அரிப்போ கொஞ்சங்கூட இல்லாமல், ஈஸ்வரனுடைய கைக்கருவியாக, லோக கல்யாணத்துக்காக ரஜோகுணக்காரனைவிட நிறையச் சிந்தித்து, நிறையக் காரியமும் பண்ணுவான். நாம் பட்டுக்கொண்டு, அடிபட்டுக்கொண்டு பண்ணுவதைவிட ஜாஸ்தியாகவும் சவரணையாகவும் இவன் பட்டுக்கொள்ளாமலே பண்ணிவிடுவான். ஸத்வ, ரஜஸ், தமஸ்களை முக்குணமென்றும், இப்போது சொன்ன மூன்றும் கடந்த நிலையை குணாதீதன் என்றும் சொல்லியிருக்கிறது.

கீதையில் பகவானும் இந்த மூன்று குணங்களைப் பற்றி விஸ்தாரமாகச் சொல்லி அர்ஜுனனிடம் “நிஸ்த்ரைகுண்யோ பவ”,
“மூன்று குணங்களும் இல்லாதவனாக, அவற்றுக்கும் மேலே போ” என்கிறார் (2.45) .

“குண த்ரய விபாக யோகம்”என்றே (கீதையில்) ஒரு அத்யாயம். அதிலே ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய ஒவ்வொன்றின் குணாதிசயங்களை பற்றி கிருஷ்ணன் சொல்கிறார்.

“தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்” என்கிற அத்யாயத்தில் தெய்வ குணம் என்பதை விளக்குகிறார். ஸத்வமாயும் குணாதீதமாயும், அஸுர குணம் என்பது ரஜோ, தமோ குண இயற்கைகளாக இருக்கிறது. அதே போல ஸ்ரத்தையிலும் மூன்று தினுசு. இதை “ஸ்ரத்தா த்ரய விபாக யோக”த்தில் சொல்கிறார். ஸ்ரத்தையில் மநுஷ்யர்களை மூன்று விதமாகப் பிரித்து இந்த மூன்று குணங்களில் அவர்களிடம் எது தூக்கலாக இருக்கிறதோ அதைப் பொருத்ததுதான் அவர்கள் குணம் என்கிறார்.

பூஜை, யஜ்ஞம், தபஸ், தானம் பண்ணுகிறோம், அதில் இதிது ஸத்வம், இதிது ரஜஸ், இதிது தமஸ் என்று சொல்லிக் கொண்டு வரும்போது நடுவில் அவர்கள் போஜனம் பண்ணும் ஆகாரம் பற்றியும் விளக்குகிறார்.

ஸத்வ குணத்தவரால் ஸத்வகுண அபிவிருத்திக்காகச் சாப்பிடப்படும் ஆகாரம் எப்படியிருக்கும், ரஜோ, தமோ ஆகாராதிகளின் லக்ஷணமென்ன என்றெல்லாம் இதன் மூலம் தெரிகிறது.

பகவான் கீதையில் போஜன வஸ்துவின் லக்ஷணத்தை, அது எப்படிப்பட்ட பதார்த்தமாயிருக்க வேண்டுமென்பதைத்தான் சொல்கிறார்.

‘ஸாத்விகம்' என்றதைப் புரிய வைப்பதற்காக த்ரிகுணங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். அவற்றிலே உசந்தது ஸத்வம்.
மனசு கொந்தளிக்காமல் கட்டுப்பட்டு, அமைதியாகவும் அன்பாயும் இருக்கிற உசந்த நிலை. இதைவிட உசந்தது குணாதீத, மனோதீத நிலை என்றாலும் அது நமக்கு எட்டாக்கை. நாம் முதலில் ஸத்வ குணிகளாக ஆகித்தான், அப்புறம் அது பழுத்து குணாதீத நிலைக்குப் போகணும்.

‘ஸத்வ'த்தைக் குறித்த எல்லாவற்றுக்கும் ‘ஸாத்விகம்' என்று பெயர். சுத்த ஆகாரம், சுத்த ஆகாரம் என்று பல தடவை சொன்னேனே, அது ‘ஹைஜீன்'படி சுகாதாரமாகப் பண்ணி, க்ளீனான கப், சாசரில் பரிமாறுவது மட்டுமில்லை, சுத்த ஆகாரமென்றால் ஸத்வ ஆகாரம் என்றே அர்த்தம். சத்வ குணத்தைத் தரும்படியான சாத்விக ஆகாரமாக அது இருக்க வேண்டும்''

பெரியவா தெய்வம். அவர் சொல்வது தானே தெய்வத்தின் குரல்......



.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...