Wednesday, February 28, 2018

VEMANA. 2

தேனான வேமனா 2 J.K. SIVAN
தெலுங்கில் தெள்ளிய வேதாந்தம்

தமிழைத்தவிர ஆங்கிலத்தில், மற்ற இந்திய மொழியில் உள்ள நல்ல விஷயங்களையும் கூட நாம் இந்த குழுவில் சேர்ந்துஅனுபவிக்கிறோம்.

இன்று ஒரு தெலுங்கு மஹான் பற்றிய விபரங்கள். அவரது பொன்மொழிகளை பார்ப்போம் ரசிப்போம்.

தெலுங்கு வேதாந்தி வேமனாவைப்பற்றி முன்பே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். இன்னும் சில வார்த்தை சொல்லவேண்டுமே. அவர் சிவ பக்தர். பொய்ம்மை வேஷம் கொண்ட பக்தர்களையோ சந்நியாசிகளையோ சாடுவதில் அவருக்கு நிகர் அவரே. அதைப்பற்றி அவர் பாடுவதை நான் எழுதுகையில் கோபம் என்மீது திரும்ப வேண்டாம்.

நடு நடுவில் எத்தனையோ வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அடி மனத்தில் வேமனாவை விட்டு விட்டு வந்தேனே இப்போது எங்கிருக்கிறாரோ, மீண்டும் அவரைத் தேடி கண்டுபிடித்து சில பொன் மொழிகளை சம்பாதிக்கவேண்டும் அதை பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்ற அரிப்பு இருந்து கொண்டே இருந்தது. சரி கொஞ்சம் free பண்ணிக்கொள்ளவேண்டும் , ஆரம்பிப்போம் என்று ஒரு பிரதிஞை எடுத்துக்கொண்டேன்..ஆகவே முயற்சி வீண் போகவில்லை. இதுவரை எண்ணம் காற்றில் பறக்க வில்லை. இதோ அவர் மீண்டும் நம்மிடம் சொல்லும் விஷயங்கள்:

வேமனாவின் 100 பதிகங்களைப் பார்ப்போமா? தெலுங்கில் உள்ள பதிகத்தில் முதல் மூன்றடி அவர் கருத்தைச் சொல்லும். நான்காவது அடியில் தன்னைத் தானே "என்னடா வேமா சொல்கிறாய், சரிதானே?" என்பது போல் அமைந்துள்ளது

Kanaka mrugamu bhuvini kadhu Ledhanakanu.....కనక మృగము భువిని కలదు లేదనకను
Tharuni veedi chaniye DhaasharathuDu.........................తరుణి వీడి చనియె దాశరధుడు
Budhi Lenivaadu Dhevudetlaayaraa............................బుద్ధిలేనివాడు దేవుడెట్లాయెరా?
Viswadhaabhiraama, Vinura Vema...............................విశ్వధాభిరామ, వినుర వేమ

"தங்கமான் எங்கேப்பா இருக்கு? பாவம், அந்த அப்பாவி ராமன் மனைவியை விட்டு மானைத்தேடி ஏன் ஓடினான். மாயை இவ்வாறு கஷ்டங்களை எல்லாம் அவனுக்கே தந்தபோது, நாம் எங்கே தப்புவது?"


Gangi govu paalu garitadainanu chaalu...................గంగి గోవు పాలు గరిటడైనను చాలు
Kadivedainanemi kharamu paalu............................కడివెడైననేమి ఖరము పాలు
Bhakti kalugu koodu pattedainanu chaalu................భక్తి కలుగు కూడు పట్టెడైనను చాలు
Viswadhaabhiraama, Vinura Vema...........................విశ్వధాభిరామ, వినుర వేమ

"ஒரு உத்ரணி சுத்தமான காராம்பசுவின் பாலுக்கு ஒரு குடம் கழுதையின் பால் ஈடாகுமா? . அன்பாக உபசரித்து உண்மையான பாசத்தோடு ஒரு கரண்டி சாதம் போதுமே, "இந்தா கொட்டிக்கோ" என்று மனதில் நினைத்துகொண்டு ஒரு வாழை இலை நிறைய விருந்து வைப்பதை விட அது பலமடங்கு மேல் அல்லவா? "


Atmasuddhi leni acharamadi ela...................ఆత్మశుద్ధి లేని అచారమది ఏల
Bhandasuddhi leni pakamadi ela...................భాండశుద్ధి లేని పాకమేల
Chittasuddi leni sivpujalelara........................చిత్తశుద్ది లేని శివ పూజలేలర
Viswadhaabhiraama, Vinura Vema................విశ్వధాభిరామ, వినుర వేమ

ஆத்மாவில் சுத்தமில்லாமல் ஆச்சாரமாக, மடியாக, இருந்து என்ன பயன்? பாத்திரத்தை சுத்தமாக துலக்காமல் பாயசம் அதில் நிரப்பி என்ன புண்ணியம்? சித்தத்தை அவன் பாலே வைக்காத சிவன் பூஜையால் யாருக்கு பலன் ?

Alpudeppudu palku adamburamu ganu..............ఆల్పుడెపుడు పల్కు ఆడంబురము గాను
Sajjanundu palku challaganu....................................సజ్జనుండు పల్కు చల్లగాను
Kanchu moginatlu kanakammu mroguna...................కంచు మోగినట్లు కనకమ్ము మ్రోగునా
Viswadhaabhiraama, Vinura Vema............................విశ్వధాభిరామ, వినుర వేమ

வெங்கலபாத்திரத்தை தட்டினால் வரும் சத்தம் தங்கபாத்திரத்தை சுண்டினால் வருமா? ஆழ்ந்த ஞானஸ்தன் அரைவேக்காடு மாதிரியா வெளியிலே காட்டிக்கொள்வான் "

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...