Wednesday, April 15, 2020

PESUM DHEIVAM

பேசும் தெய்வம் J K SIVAN

''மனசு சேஞ்ஜ் CHANGE கேட்கிறதா?''

உலகத்திலேயே புரிந்து கொள்ள முடியாதது எது? மனிதமனம். அதை சரியாக புரிந்து கொண்டவர் அது ஒரு குரங்கு என்றார். ஒரு நிலையில் இல்லாமல் கிளைக்கு கிளை தாவுவது போல் எதிலும் ஒரு கண நேர விருப்பம், ஈடுபாடு, உடனே அலுப்பு, சலிப்பு இப்படி மாறி மாறி செயல்படும் மனது உண்மையில் குரங்கைக் காட்டிலும் மோசம். நிறைய வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தபோது ஒரு நாளாவது காலை நீட்டிக் கொண்டு ஒருவேலையுமில்லாமல் வெளியே போகாமல் வீட்டில் சும்மா இருப்போமா என கனவு கண்டோம். இப்போது வாரக்கணக் கிறதே. சந்தோஷமா? ஐயய்யோ , மறுபடி காலாற எப்போது தெருவில் நடப்போம்? என்றல்லவோ ஏங்குகிறோம். அது தான் மனித மனம்.

இதை புரிந்துகொண்டு இந்துமதத்தில் நமது முன்னோர்கள், அறிவாளிகள் , இதில் இருந்து மீள ஒரு உன்னத ஏற்பாடு, சலிப்பு தட்டாதவகையில் எதிலும் மாறுதல், மாறுபாடு எல்லாம் உண்டாக்கி தந்திருக்கிறார்கள்.

மாறுபாட்டில் ருசி தேடுவது மனித இயற்கை - சலிப்பையே விருப்பாக மாற்ற உதவும் வழி தான் பகவானை பல ரூபங்களில் பல வழிகளில், பல பண்டிகைகள், பல வித பட்சணங்க ளோடு கொண்டாடுவது. இதை தெளிவாக மஹா பெரியவா சொன் னதை சுருக்கி விளங்கும்படியாக சொல்லட்டுமா?.

சாதாரண மநுஷயர்கள் மட்டுமல்ல பக்குவப்பட்ட மனது கொண்டவர்களாக இருந்தாலும், மநுஷ ஸ்வபாவம் எப்படியி ருக்கிறதென்றால் ஒன்றிலேயே எக்காலமும் முழு மனஸையும் ஸ்திரமாக கொடுப்ப தென்றால் முடிவதில்லை.

எத்தனை நன்றாயிருந்தாலும் அந்த ஒன்றிடமே முழு ஈடுபாட்டை ஸதா காலமும் வைக்க முடிவதில்லை.

இன்றைக்குச் சமையல்-- ஸாம்பார், ரஸம்,கறி---நன்றாகத்தானிருக்கிறது.அதிருப்திக்குக் கொஞ்சங்கூட இடமில்லை, என்றாலும் நித்யம் (தினந்தோறும்) இதே சமையல் என்றால் பிடிக்கிறதா? மனம் வேறே தேடுகிறதே.

கறி காய்களை, குழம்பில் போடும் காய்கறி தானை மாற்றத் தோன்றுகிறது! அப்புறம், இந்த கத்திரிக்கா, வெண்டக்கா, பூசணி, பரங்கி, முருங்கை சாம்பார் எதுவுமே வேண்டாம். ஒரு நாள் ஒரு சேஞ்சுக்காக CHANGE சித்ரான்னங்களாக தேங்கா ,எலுமிச்சை, புளி , வெல்ல, எள்ளு, தனியா, மிளகு ஜீரக, தயிர் சாதம் சாப்பிடலாம்' என்று நாக்கு சப்பு கொட்டுகிறது.

வித்வான் எத்தனை நன்றாகப் பாடி னாலும்,அதே பாட்டு, அதே ராகத்தை ஒவ்வொரு கச்சேரியிலும் பாடினால் கேட்க பிடிக்க வில்லை. அலுத்துப் போகி றது. எதில் (எந்தத் துறையில்) போனா லும்இப்படித்தான் பல தினுஸாக, மாறுபாடு வேண்டியிருக் கிறது.

அவ்வப்போது ஒவ்வொன்றிடமும் முழு ஈடுபாடு இருந்தாலும்- இன்றைக்குத் தயிர்வடை பிடித்திருக்கிறது. சப்பு கொட்டிக்கொண்டு ஐந்து ஆறு என்று உள்ளே தள்ளினாலும், நாளைக்கு,நாளன்றைக்கு
நாலாம் நாள், அஞ்சாம் நாளும் அதுவே தான் என்றால், இன்றைக்குச் சப்புக் கொட்டின வர்களே அன்றைக்கு முகத்தைச் சுளிக்கிற மாதிரி- திரும்பத் திரும்ப தயிர் தானா? என்று அதிலே ருசி, ஈடுபாடு குறைந்துவிடுகிறது.

இது தெரிந்து தான் நம்முடைய மதத்தில் இத்தனை ஸ்வாமி, வித விதமான ரூபம், வித விதமான அலங்காரம், வித விதமான வாஹனம், அததற்கும் வித விதமான பூஜா பத்ததி என்று வைத்தி ருக்கிறது.

கோயிலுக்குப் போய் பிள்ளையார் ஸந்நிதியில் தோப்புக்கரணம் போட்டுவிட்டு நிற்கிறோம். அப்போ தைக்கு ஒரு க்ஷணம், இரண்டு க்ஷணம் மனஸு பிள்ளையார் மேல் குவிந்த மாதிரி தான் இருக்கிறது. அப்புறம் கையை, காலை சொறிந்து கொள்கி றோம். மனஸு பிய்த்துக் கொண்டு கிளம்பி வேறு எதற்கோ தாவி விடுகிறது!

மனஸை அப்படியே எந்தக் குப்பைத் தொட்டிக்கு வேண்டுமானாலும் ஓடட்டும் என்று விட்டு விடுவதா? அப்படி விட்டு விடாமல், நல்லதிலேயே,தெய்வ ஸம்பந்தமாகவே அந்த மனஸை இழுத்தால் தானே தேவலை? எப்படி இழுப்பது?

பாழும் மனஸுக்கு இந்த விக்னேஸ்வ ரமூர்த்தி, தொப்பையும் தொந்தியுமாக இத்தனை அழகாக உட்கார்ந்திருந்துங் கூட, அவரிடமே தொடர்ச்சியாக ஒட்டிக்கொண்டிருக்க முடியவில்லையே!'

''பரவாயில்லையப்பா!' என்று இங்கே தான் நம் ஸமயாசார புருஷர்கள் ஆறுதல் தர வருகிறார்கள்.

'மனஸின் நேச்சர்'' அப்படித்தான் அப்பா! அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான்திருத்தி நிலையாக ஒருமுகப் படுத்த முடியுமேப்பா ! அதற்கு எதிலும் 'சேஞ்ச்' வேண்டும். தெய்வ ஸம்பந்த மாகவும் கூட அப்படி அதற்கு வேண்டும். அதையும் தான் நம்முடைய மதம் தருகிறதே!

விக்நேச்வரரிடம் ஈடுபாடு குறைகிறதா ,அழாதே ! இதே 'சேஞ்சா' க பக்கத்தி லேயே ஸுப்ரஹ் மண்யர் ஸந்நிதி, அப்புறம் இன்னும் பல 'சேஞ்ச்'கலும் வைச்சிருக்கே. அம்மன், ஸ்வாமி, தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை, நடராஜா, ஹனுமான், நவகிரகம், பைரவர் மநுஷ்ய ரூபத்தில் வந்த வேறே வேறே ரூபத்தில் வந்த அறுபத்து மூணு நாயன்மார்கள் என்று எல்லாம் ஒன்று சேர்த்து தானே கோவில் என்று வைத்திருக் கிறோம்.

ஒவ்வொன்றிடமும் ஒரு க்ஷணம், இரண்டுக்ஷணம் மனஸ் ஈடுபட்டுக் கும்பிட்டு விட்டுப் போயேன். மொத்தத்தில் ஒரு கணிசமான நாழி உன் மனசு தெய்வ ஸம்பந்தமாகவே ஈடுபட்டிருக்கும் 'என்கிறார்கள்.

நம்முடைய மதத்தின் சிறப்பு களிலெல்லாம் பெரிய சிறப்பு ஒன்று எது தெரியுமா? ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றேதான் என்று காட்டுகிற ஒரே மதம் ஹிந்து மதம் தான் என்று பல பேர், அறிவாளிகள், அந்நியதேசத்தவர்கள் கூட, ரொம்பவும் சிறப்பித்துச் சொல்கிறார்கள். 'எந்த மதத்திலும் இல்லாத அத்வைத ரத்னம் இருக்கிற இந்து மதத்தில்,எந்த மதத்திலும் இல்லாத அளவுக்கு இத்தனை அத்வைதம் ஆசார அநுஷ்டானங்களும், சாமிப் பட்டாளமும் இருக்கிறதே! இவை ஒன்றுக் கொன்று ஒரே முரண்பாடாக இருக்கிறதே' என்று அவர்களில் ரொம்பப் பேர் வருத்தப் படுகிறார்கள்.

மஹா பெரியவா சொல்கிறார்:
'எனக்கு என்ன தோன்றுகிற தென்றால், அத்வைதம் நம்முடைய பெரிய சிறப்புத்தான் என்றாலும் , அதை விடவும் சிறப்பாக எது தோன்றுகிறது? இப்படி ஒன்றேயான அத்வைதத்தைச் சொன்ன மதத்திலேயே வித்யாஸம் வித்யாஸமாக இத்தனை வர்ணாச்ரம வ்யவஸ்தை களும், இத்தனை பட்டாளமாக தெய்வங்களும் வைத்திருப்பது தான்!
அத்வைதம் ஏக பரமாத்மா என்பது ஐடியல். அப்படி என்றால் எதற்கு இத்தனை ஸ்வாமி பட்டாளம்? இத்தனைவிதமான ஆசார வ்யவஸ்தைகள்? என்பது ப்ராக்டிகல் கேள்வி. ப்ராக்டிகலில் ஆரம்பித்து க்ரமேண (படிப்படியாக) முன்னேறி னால் தான் ஐடியலுக்குப் போய்ச்சேர முடியும். இப்போதே ஐடியல் என்று யத்தனம் பண்ணினால் ஒன்று தோல்வியாகஆகும், அல்லது, அதைவிடத் தப்பாக ஹிபாக்ரிஸியாக, போலி வேஷமாகத்தான் ஆகும்.

எல்லாம் ரெண்டோ அநேகமோ இல்லை, ஒன்றே, என்று அத்வைதத்தைச் சொன்ன மதத்தில்இத்தனை த்வைதத்துக்கு இடம் கொடுப்பதா என்று, கொஞ்சம் கூடத் தயங்காமல், ஜனங்களின் மனப்பான்மையை நன்றாகப் புரிந்துகொண்டு, அநுதாபத்துடன், பரம கருணையுடன் இத்தனை தர்மாசாரப் பிரிவினை களையும், சாமிப் பட்டாளத்தையும் இடம் கொடுத்து வைத்துக் கொண்டிருப்பது தான் சிறப்புக்களில் பெரிய சிறப்பு. அதனால் தான் அத்வைத ஆசார்யா ளான நம்முடைய ஆதி சங்கர பகவத் பாதாளே வர்ணாச்ரம வ்யவஸ்தை களை யெல்லாம் மறுபடி நன்றாக ஒழுங்கு படுத்தி நிலை நாட்டினார்.

பஞ்சாயதனம் என்று ஐந்து தெய்வங் களை வைத்துப் பூஜை பண்ணும் படியாக ஏற்பாடு செய்தார். அதோடு, 'ஸுப்ரஹ்மண்யரையு பூஜை பண்ணு' என்கிற மாதிரி (ஸுப்ரஹ்மண்ய) புஜங்கம் பாடி வைத்திருக்கிறார். ஷண்மத ஸ்தாபனம் என்று பண்ணும்போது அதில் (ஸுப்ரஹ் மண்ய உபாஸனையான) கௌமாரம் என்பதையும் சேர்த்துக் கொண்டார். இன்னும், ராமன்,க்ருஷ்ணன், நர ஸிம்ம மூர்த்தி, அம்பாள்என்று எடுத்துக் கொண்டால் அதிலேயே த்ரிபுர ஸுந்தரி, பவாநி, ப்ரமராம்பா, சாரதாம்பா என்று பல ரூப பேதங்கள், கங்காதி புண்ய நதிகள்- என்று ஒன்று பாக்கியில்லாமல் அத்தனைசாமிப் பட்டாளத்தின் மேலேயும் ஸ்தோத் ரங்களைப் பாடி வைத்திருக் கிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...