Saturday, April 4, 2020

MAN AND MIND



மனமும் குணமும்     J K SIVAN        
                                              
இரும்புத் துண்டு  சிறிது நேரம்  காந்தத்தின் பக்கம் இருந்தால்  அதற்கும்  காந்த  சக்தி வந்துவிடும்.  கொதிக்கும் நீரை  பனிக்கட்டியின் மேல்  ஊற்றினால் பனி உருகி  ரெண்டுமே  சாதாரண குளிர் நீராகிறது.   ரசவாத மந்திரக்கல் எதன் மேல்  பட்டாலும்  அந்த  வஸ்து  பொன்னாகும்.   அழுகிய ஒரு  பழம்   இருந்தால்  போதும்  கூடையில்   அத்தனை பழமும்  அழுக ஆரம்பிக்கும்.  மனிதர்களும்  இதற்கெல்லாம் சோடை போனவர்கள் இல்லையே.  ஆங்கிலத்தில்  சொல்வார்களே உன் நண்பனை காட்டு  நீ  யார்  என்று  சொல்கிறேன் என்று.  அது  வாஸ்தவ மானது.   கூட்டத்தில் ஒரு நல்லவன் இருந்தால்  அனைவரும்  நல்லவனாக  மாற  சான்ஸ் உண்டு. ரெண்டு  பேர் கொஞ்சநாள்  சேர்ந்திருந்தால் ரெண்டு பேர்  குணமும்  ஒன்றாகவே  இருக்க முடிகிறதே.  ரெண்டு பேருமே   இணைபிரியாத நண்பர்கள்  ஆகின்றனர்.

இதற்கு  மூல காரணம்  நாம் வெளியே  விடும் மூச்சு.  பிராணன்.   அது  ஒருவன் மற்றொருவனிடம்,  மிருகத்தினிடம், பறவையிடம்  பரிமாறிக்கொள்ளும்போது ரெண்டு ப்ராணன்களும்  ஒன்று சேர்கிறது.  இடைவெளியில்  இருக்கும்   ஈதர்  என்பது  உள்ளே  ரண்டு ப்ராணன்களுக்குள்ளும் பிரதிபலிக்கும் உணர்வுகளை ஒன்று சேர்க்கிறது.  மஞ்சளும் நீலமும்  ஒன்று  சேர்ந்து  பச்சையாகிறது.  மஞ்சள்  கறுப்போடு  சேரும்போது ப்ரௌனாக  மாறுகிறது.  இதை  எல்லாம்  நன்கு  அறிந்து தான்  நமது முன்னோர்   நல்ல  சகவாசம் வேண்டும்  என்று  கவனமாக  இருந்தார்கள்.  கண்டவர்களோடு சேர  சேர்ந்து விளையாட கூட  அனுமதிக் கவில்லை.  சத் சங்கம்  என்பது இது தான்.

 மந்தரையின்  சேர்க்கை இல்லாமல்   இருந்தால்   கைகேயி  என்ற  உத்தம  பெண்ணின்  குணம்  மந்தரையின் குணமாக   மாறி இருக்காது.  தசரதனை  உலுக்கி உயிரையும் பறித்து   ராமன்  காட்டுக்கும் போயிருக்கமாட்டான்.  அட  ராமாயணம் எங்கேயோ போகிறதே!! ராவணனை நீங்களும் நானுமா கொல்லமுடியும்? 
ஒரு மலை மேல் சில  ரிஷிகள்   ஆயுர்வேத தவ வலிமையால்  வயதற்று   வாழ்ந்தனர்.   இருக்கும் இடம் விட்டு  மலைமீதிலிருந்து இறங்கி  நதியோரம்   ஒரு  கிராமத்துக்கு சென்று  வாழ்ந்தனர். அங்குள்ள அண்டை அசல்  மக்கள் கூட   பழகியதில்  அவர்களும்  மற்றவர்கள் போல் வயதானவர்களானார்கள் என்று  ஒரு கதை உண்டு.

இதேபோல் நல்ல சகவாசத்தால் ஒருமனிதன்  உயர்ந்த  மெச்சத்தகுந்த குணத்தைப்  பெறுவதும்  நிகழ்கிறது.   ராமன்  கால்   பட்டதுமே  கல்லாயிருந்த  அஹல்யா  ரிஷி  பத்னியாக மீண்டும் மாறினாள்.   அர்ஜுனன்  கீதா ஞானம்  பெற்றது கிருஷ்ணனோடு  பழகியதால்.  

 அசத்தியம்,  அ -சத் விஷயங்கள் நிரம்பியவர்களின்  சகவாசம்  உடல் உள்ளம்   ரெண்டையுமே பாதிக்கும்.   அழிவுக்கு அழைத்து போகும். 
சத்சங்  என்றால்  தாடி மீசை  காவி  ஜடை  ஆசாமிகளின்  நட்பு என்று மட்டும்  அர்த்தம்  இல்லை.   வேதங்களை  மந்த்ரங்களை கேட்பது,    தூய எண்ணங்களை அள்ளித் தரும்  நிகழ்ச்சிகளை  நாடுவதும்   கூடத்தான்.   நல்ல  புத்தகங்களை  படிப்பதும்   அவற்றில் சிந்தனை கொள்வதும்  சத் சங்கம்  தான்.  சான்றோர் சகவாசத்தால்  உள்ளே  ஒரு  பாசிடிவ் விளைவு  ஜீவனுக்கு தோன்றும்.
 தாயே எனக்கு   நல்லோர் நட்பு கிடைக்க  அருள் செய்  என்று  வேண்டுகிறோம்.  இருளி லிருந்து  ஒளிமயத்துக்கு  அழைத்துபோ என்கிறோம் . நாம்  எப்படிப்பட்டவர்கள்  சத்சங்கம் பக்கமா  எதிர்மறையா  என்று  நமது செயல்கள்  விளக்கும்.    தர்ம  காரியங்களில்  ஈடுபடுகிறோம், ஆத்ம விஷயங்களில்   நேரம் செல்கிறது,  த்யானம் , ஜபம்,  செய்கிறோம்.   போதை, குடி, நாக்கின்  ருசிக்கு அடிமையை  பார்ட்டிகள் ஹோட்டல்கள், விருந்துகளில்   கிடைத்தால்  விடுவதில்லை,  தேடிப்போகிறோமா  என்று  கவனித்தால்  விடை கிடைக்கும்.   மற்றவர்  யாரும்  உன்னைப் பார்த்து   நீ நல்லவன்  என்று  சொல்ல எதிர்பார்க்க வேண்டாம்.   உன்னையே  நீ  எண்ணிப்பார்  இது தான்.  

 ''நமக்குள்ளே  ரெண்டு  ஓநாய்கள்   இருக்கு   என்று  சொல்கிறாயே  என்ன  தாத்தா  அது?  உண்மையிலேயே  ரெண்டு  நமக்குள்ளே  இருக்கா?''

''ஆமாண் டா பேராண்டி,  ரெண்டுக்கும்  எப்போதும்  கொலை சண்டை நடக்கிறது.  எப்போதும் தான்.   முதல்  ஓநாய் ரொம்ப  மோசமானது. அது  தான்  கோவம்,  பொறாமை, பேராசை துக்கம்,  திமிர்,  அழுத்தம், பொய்   எல்லாம்  உண்டாக்குகிறது.  மனதை   இதால்  நிரப்புகிறது.   ரெண்டாவது  இருக்கிறது பார்,  அது  சாது, நல்லது.  நம்பிக்கை,  அமைதி,  அன்பு,  சந்தோஷம், உண்மை,  தான  தர்ம தாராள குணம் ,  இதெல்லாம் உண்டாக்கி  மனதையும்  இதயத்தையும்   நிரப்புகிறது.   ஆனால் ரெண்டுக்கு  சண்டை.  நான்  தான்   என் சரக்கை  நிரப்புவேன் என்று. ''

''எது   தாத்தா  ஜெயிக்கும்?''

''நீ  எதுக்கு  சாப்பாடு  போட்டு  வளர்க்கிராயோ  அது''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...