Monday, January 13, 2020

GEETHANJALI



கீதாஞ்சலி           J K   SIVAN  

ரவீந்திரநாத் தாகூர் 

                                             29.   ''எனக்கு  நானே  வேண்டாம் 

 29  He whom I enclose with my name is weeping in this dungeon. 
I am ever busy building this wall all around; 
and as this wall goes up into the sky day by day 
I lose sight of my true being in its dark shadow.
I take pride in this great wall, and I plaster it with dust and sand 
lest a least hole should be left in this name; 
and for all the care I take I lose sight of my true being.

என் பெயர் தாங்கிய ஒரு ஜீவனை, என்னை தான் சொல்கிறேன், நான் தான்  அந்த ஜீவன்.....  அதை   இந்த இருட்டறையில் பார்க்கலாம். சாதாரணமாக  சப்தமில்லாமல்  அல்ல. எந்நேரமும்  விம்மி விம்மி அழுதுகொண்டே அல்லவோ  இருக்கிறேன்.

என்னை சுற்றி சுவர்  மேலேமேலே  உயரமாக  எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறேன்.  வானத்தை தொடட்டும் இந்த சுவர்கள்.  அந்த  சுவர்களின்  வளர்ச்சியை, உயரத்தை  அண்ணாந்து பார்த்து மலைத்து போகிறேன்.   அதை  நன்றாக புழுதி மண் எல்லாம் கலந்து  சிமெண்ட்  போட்டது  போல்  கெட்டியாக  கட்டி இருக்கிறேனே.  ஒரு துவாரம் கூட  அந்த   என்னை சுற்றியுள்ள  ''ஜீவ சமாதியில்'' விடவில்லை.  ஆமாம்  என்னை பற்றிய  எந்த விஷயமும்  வெளியே  கசியக்கூடாது  என்பது தான் என் எண்ணம்.    அதன் இருண்ட  நிழலுக்குள் நான் எனது என்ற என் அடையாளமே மறைந்து போகட்டுமே. 



 நான் எதற்காக இவ்வளவு அக்கறையோடு இப்படி எல்லாம் செயகிறேன் தெரியுமா. '' நான்,  எனது '' என்பவை எல்லாம் என் கண்ணுக்குக்கூட  தெரியவேண்டாம்.''   அப்படியென்றால்  யார்  அதற்குப்பதில் தெரியவேண்டும்???  நீ தான்   கிருஷ்ணா   நீ தான்''.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...