Monday, June 11, 2018

PRIZE

இது உனக்கு என் பரிசு - J.K. SIVAN

யாருக்கு வசந்த காலம் பிடிக்காது? இயற்கையை ரசிக்க சிறந்த காலம் அது. நம்மை விட அறிவு குறைந்தது என்று நாம் தவறாக எடை போட்ட பக்ஷிகளும் மிருகங்களும் தாவரங்களும் பூரண திருப்தியுடன் வரவேற்கும் .காலம் அது. அவர்களும் இல்லை அவைகளும் வசந்தத்துக்கு மெருகூட்ட தங்களான அன்பளிப்பை தருகிறது. அனுபவிக்க மட்டும் அறிவு மிகுந்த மனிதர்கள்.

ஆம் அப்படிப்பட்ட ஆனந்த வசந்த காலம் வந்துவிட்டது. எங்கு வந்தாலும் பிருந்தாவனத்தில் அது ஸ்பெஷல். ஏன் என்றால் பிருந்தாவனத்தில் எப்போதுமே வசந்தம் தான். கிருஷ்ணன் இருக்கிறானே

மரங்களும் கொடிகளும் செடிகளும் பூத்து குலுங்குகின்றன. யமுனையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது குளுமையான நீர். ஆயர் பாடி சிறுவரும் சிறுமியரும் தென்றல் காற்றில் மிதந்துவரும் மலர்களின் நறுமணத்தை சுவாசித்துக்கொண்டு அன்று மாலை வெயிலின் மென் சுகத்தில் யமுனையின் கரையோர நீரில் நேரம் போவது தெரியாமல் சுகமாக விளையாடுகின்றனர். கிருஷ்ணன் புல்லாங் குழலி லிருந்து இன்னிசை வெள்ளம் வேறு இந்த சூழ்நிலையில் கலந்துள்ளது. மழை வரலாம் என்று அறிவிக்க கார்முகில் கூட்டம் மெல்ல மெல்ல கவிந்து வர அந்த பிரதேசத்தில் உள்ள மயில்களுக்கு கொண்டாட்டம். இந்த சூழ்நிலையில் தானாகவே தோகை விரித்தாடும் அவற்றுக்கு கண்ணனின் குழலோசையின் பதங்கள் சற்று அதிக சந்தோஷத்துடனேயே ஆட வைத்தது.

"என்னமாக வாசிக்கிறான் இந்த கிருஷ்ணன் பார்த்தாயா?" என்றது மயில் கூட்டத்தின் தலைவன் மயில் ராஜா தன் ராணியிடம்.

"நீ எப்போதும் தப்பாகவே தான் எதையும் செய்வாய், சொல்வாய்" என்றது மயில் ராணி.

" நான் என்ன தப்பாக சொல்லி விட்டேன்" என்று ஆட்டத்தை நிறுத்தி கேட்டது ராஜா மயில்

" பின்னே என்ன, கிருஷ்ணன் குழல் ஓசையை பார்த்தாயா, என்கிறாயே. கேட்டாயா என்று தானே சொல்லணும்.

''ஓ, நீ அப்படி சொல்கிறாயா?? என்ன செய்வது சொல்; கிருஷ்ணனைப் பார்த்தால் எல்லாம் மறந்து விடுகிறதே. அப்பறம் எப்படி கேட்பது?"

உனக்கு எப்போதும் எங்கோ எதிலோ யார் மேலோ தான் ஞாபகம் என்று என்று ராணி மயில் வழக்கம் போல் சொல்லவே "ஆமாம் நீ எப்பவும் எதிலும் சரியே" என்று பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தது ஆண் மயில்.

"இவ்வளவு அழகாக இன்னிசை பொழிந்த கண்ணனுக்கு நாம் என்ன பரிசு கொடுப்பது?" என்று கேட்டது தலைவன். எதாவது தப்பாக சொல்லி மாட்டிக் கொள்வதை விட ராணியையே யோசிக்க வைக்கலாமே என்று சாமர்த்தியமாக கேட்டது.

"நீ தான் நம் கூட்டத்திலேயே அழகன், உன்னிடம் என்ன அழகான பொருளோ அதையே அவனுக்கு கொடேன்" என்றது ராணி மயில்.

யோசித்து பார்த்த ராஜா மயில் நடமாடிக்கொண்டே கிருஷ்ணனை அணுகியது. அவன் மடியில் தன் தலையை வைத்து கொண்டது. குழலை வாயிலிருந்து எடுத்து விட்டு கிருஷ்ணன் கேட்டான்.

"அழகிய மயிலே எதற்கு என்னிடம் வந்தாய்.சொல்."

"கிருஷ்ணா, எங்களை உன் கீதத்தால் பரவசப்படுத்திய, ஆடவைத்த நீ எல்லோரையும் பரவசப் படுத்தவேண்டும் என்பதற்காக உனக்கு நாங்கள் மயில்கள் எல்லாரும் சேர்ந்து எங்களால் இயன்ற ஒரு பரிசு தருகிறோம் ஏற்றுக் கொள்வாயா சொல் ?"

"மிக சந்தோஷமாக பெற்றுகொள்கிறேன் மயில் ராஜா "

" இந்தா" என்று அந்த அழகு ஆண் மயில் தன்னிடத்தில் இருந்த ஒரு அழகிய இறகை கண்ணனுக்கு பரிசாக கொடுத்து " என்னிடம் பெருமைப்பட இருப்பது இது ஒன்றுதான்; இதை எப்போதும் உன்னிடம் வைத்துக் கொள்வாயா?" .என்றது

" அப்படியே அழகு மயிலே, இந்த உன் அழகிய மயில் இறகு இந்த கணம் முதல் என்றும் என் தலையில் செருகப்பட்டு இருக்கும் திருப்தியா" என்றான் கிருஷ்ணன்.

மயிலுக்கு, மயில்களுக்கு திருப்தியோ என்னவோ, நாம் அகிலமுழுதும் கிருஷ்ணா பக்தர்கள் ஏகோபித்து சந்தோஷமாக கிருஷ்ணனின் அழகுக்கு அழகு சேர்க்கும் மயில் இறகின் நேர்த்தியில் மனதை இழக்கிறோம்.



மனமுவந்து ஓருவருக்கு கொடுத்த எதுவுமே மதிப்பிட முடியாதது .அன்பை விளையால் எடை போட முடியாதே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...