Friday, June 22, 2018

SURI NAGAMMA



சூரி நாகம்மா : ஒரு தெலுங்கு பக்தை சொல்கிறாள்''- 3 J.K. SIVAN

இன்றே ஆஸ்ரமத்தில் ஒரே பேச்சாக இருந்தது. நாளைக்கு காலை பகவான் ரமணர் ஸ்கந்தாஸ்ரமம் செல்வதற்காக கரடுமுரடு பாறைகளை தாவி மலை ஏறுவார். நல்ல நாள். பக்தர்களும் கூட செல்வார்கள். எல்லோருக்கும் அங்கே தான் போஜனம். அவரவர் எங்கோ தொலை தூரம் செல்வதுபோல் மூட்டை முடிச்சு எல்லாம் தயார் பண்ணிக்கொண்டிருந்தார்கள். பகவான் எதையும் நினைவில் கொண்டவராக தோன்றவில்லை. வழக்கம்போல் அமைதியாக கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். ''சுவாமி வாருங்கள் ஸ்கந்தாஸ்ரமம் செல்லலாம் என்றால் அப்படியே எழுந்து கிளம்பிவிடுவார். எங்கும் போகவேண்டாம் என்றால் அப்படியே அமர்ந்துவிடுவார். அவருக்கு எதற்கு முன் ஏற்பாடு? கையில் ஒரு கமண்டலம். கைத்தடி, அரையில் கோவணம். மேலே ஒரு துண்டு. இது தான் அவர் ஆஸ்தி. சொத்து எல்லாமே.

மறுநாள் காலை. வேத பாராயணங்கள் வழக்கம்போல் முடிந்தது. பகவான் ஸ்னானம் பண்ணியாகி விட்டது. காலை உணவும் அருந்தினார். மலை ஏற கிளம்பிவிட்டார். சிவபெருமானுக்கு நந்தி போல் உறுதுணையாக கூட இருந்து பகவான் ரமணருக்கு உதவுவது எப்போதும் ரங்கசாமி தான். மலையில் சௌகரியமாக பகவான் ஏற குறுக்கு வழி ஸ்கந்தாஸ்ரமத்துக்கு அவனுக்கு தெரியும். ஏதோ ஆர்வமாக தனது வீட்டுக்கு ஒருவர் போவது போல் பகவான் ஸ்கந்தாஸ்ரமத்துக்கு கிளம்பினார். பக்தர்கள் பலர் முன்னரே நடந்து வழியை சரிபடுத்திக்கொண்டு சென்றனர்.
என்னோடு பகவானின் சதோதரி அலமேலு. மீதி சிலர் பின்னால் வந்தனர். ஸ்கந்தாஸ்ரமம் கட்டிடம் எதிரே மரங்களின் நிழலில் பகவான் அமர்ந்தார். ஸ்கந்தாஸ்ரமம் அப்போது எப்படி இருந்தது என்றால் நைமிசாரண்ய ரிஷிகள் சொல்வார்களே பத்திரிகாச்ரமம் புராணங்களில் எப்படி இருந்தது என்று அப்படி தான்.சுற்றிலும் வனம் .எண்ணற்ற பறவைகள், எங்கோ மலைமீதிருந்து சிலுசிலு வென்று ஒரு அருவி. விலங்குகள். ரம்யமான சூழ்நிலை. ரிஷிகுமாரர்கள் சாமவேதம் பாராயணம் பண்ணுவது போல் பக்ஷிகள் குரல் செவிக்கு இனிமையாக இருந்தது. பகவான் ஸ்கந்தாஸ்ரமத்தில் இன்று இருப்பார் என்று தெரிந்து எண்ணற்ற பக்தர்கள் குழுமி இருந்தார்கள். வெளி மாநிலங்களில் இருந்து வண்டிகளில் வந்து மலை ஏறி டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், ஆசிரியர்கள், புலவர்கள், காலை நிபுணர்கள், பாடகர்கள், ஆண்களும் பெண்களுமாக, ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி அங்கு காணப்பட்டனர். பகவானை சுற்றி எல்லோரும் தரையில் அமர்ந்தார்கள். அவர் மீதே பார்வை. மேலே மர நிழல்களுக்கும் அப்பால் மேகங்கள் குடை பிடித்தது போல் இருந்தது. தென்றல் காற்று வெண்சாமரம்; வீசியது.

பக்தர்கள் சிலர் அனைவருக்கும் சிற்றுண்டி,இனிப்புகள் வழங்கினார்கள். நிறைய பூரி கூட்டு ஆகாரமாக உள்ளே சென்றது. மாலை நெருங்கும் வேளை பகவான் திரும்ப ஆஸ்ரமம் நடந்தார். அனைவரும் பின்னால் தொடர்ந்தார்கள். சந்தியா கால வேத பாராயணங்கள் ஆஸ்ரமத்தில் ஆரம்பித்தன. பகவான் அமைதியாக அசையாமல் உட்கார்ந்திருந்தார். எங்கோ சிந்தனை. முகத்தில் அரும்பு புன்னகை. யார் யாரோ போட்டோக்கள் எடுத்தார்கள். சிலருக்கு பதில் சொன்னார். ஓரிரு வார்த்தைகளில். ஒரு மஹாராஜா தர்பாரில் இருப்பது போல் இருந்தது. காற்று பலமாக வீசவே, ஒரு சில பக்தர்கள் ஒரு துப்பட்டாவை முகம் மட்டும் தெரியும்படியாக அவர் மேல் போர்த்தினார்கள். '' மௌன வியாக்கியானம் '' மெளனமாக விளக்குவது தொடர்ந்தது. எண்ணற்றவர் மனதில் எழுந்த வினாக்கள் விடை பெற்றன. சாப்பாடு நேரம். எல்லோருக்கும் புளியோதரை தயிர் சாதம் வழங்கப்பட்டது. எல்லோர் மத்தியிலும் தரையில் அமர்ந்து பகவானும் உண்டார். வழக்கமாக உட்காரும் சோபா வெராண்டாவில் கொண்டு வைத்தார்கள். வெராண்டாவில் க்ராதிக் கம்பிகள் போட்டு மடக்கி வைத்ததால் அருகே யாரும் போகமுடியாது. எல்லோரும் நகர்ந்து நகர்ந்து அருகே வந்து அமர்ந்தார்கள். பக்கத்தில் ஒரு சிறு அறை . அதில் நானும் அலமேலுவும் . அதன் ஜன்னல் வழியாக பகவான் தெரிவார். பகவான் குட்டி குட்டி கதைகள் சொல்வார். சில சமயம் அருணாச்சல மலையில் தனது அனுபவங்களை ஞாபகப்படுத்தி சொல்வார். நிறைய சிறுத்தைகள், குரங்குகள் சர்ப்பங்கள்மயில் கூட்டங்கள் அணில் குடும்பங்கள், கீரிப்பிள்ளை, தன்னோடு நெருங்கி பழகியதை சொல்வார். அவரது அம்மா வந்ததை .பற்றி சொல்வார். ஸ்கந்தாஸ்ரமம் கட்டுமானம் வேலைகள் நடந்தது பற்றி செயதி வரும்.

அப்போது அங்கு வந்த நாகனார் பகவானை வணங்கினார்.'' எப்போ வந்தீர்கள்?''
என்றவர் '' அங்கே தான் அழகம்மா நிர்வாணம் எய்தினாள். அதோ அங்கே உட்கார்த்தி வைத்தோம். முகத்தில் மரண சாயை தெரியவில்லை. நீண்ட சமாதியில் இருப்பது போல முகம் தோன்றியது. ''
பகவானின் தாயார் அழகம்மா சமாதியை எழுப்பி அதன் மாத்ருபூதேஸ்வரர் லிங்கம் பிரதிஷ்டை பண்ணியாகி விட்டது. இன்றும் அந்த ஆலயத்தை தரிசிக்கும்போது மனதில் ஒரு வித இயலாத அமைதி பரவுகிறது. பகவான் அருகில் நாள் கணக்கில் பேசாமல் அமர்ந்திருந்தால் ரமணராகி விட முடியுமா? ஆத்ம ஞானம் அடைய பாடுபட வேண்டும்

பகவானுக்கு எண்ணெய் தடவி காலை பிடித்து விடும் கைங்கர்யம் சிலர் செய்தார்கள். அவர் எதையுமே லக்ஷியம் செய்யவில்லை. ''நானும் சிறிது உங்களை போல புண்யம் செயகிறேனே'' என்று சொல்லி தானே தனது கால்களை பிடித்து விட்டுக்கொண்டார். அவரைப் பொறுத்தவரை தனது உடலுக்கு செய்யும் பணி யாருக்கோ செய்வது போல. ஒரு 70 வயதான ஜட்ஜ் நான் சிறிது நேரம் உங்கள் காலைபிடித்து விடட்டுமா? என்கிறார். முதலில் உங்களுக்கு நீங்கள் உதவி செய்து கொள்ளுங்கள். உங்களில் இருக்கும் அமைதியை தேடி அடையுங்கள். இதற்கு மேல் என்ன உபதேசம் தேவை?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...