Thursday, June 7, 2018

saiva devotees



அறுபத்து மூவர் :   J.K. SIVAN
எறிபத்த நாயனார்




            1.   பூக்கூடையும்  யானையும்
                                               
தமிழ் நாட்டில் ஒரு அருமையான ஊர்  கருவூர். கோயம்பத்தூரிலிருந்து 127 கி.மீ தூரம். ஈரோடி லிருந்து 70 கி.மீ.   திருச்சியிலிருந்து  75 கி.மீ. தூரம்.

கருவூர் ( கப்போது  கரூர்) மிகச் சிறப்பு வாய்ந்த சம்பவங்களுக்கு  ஆதாரமாக இருந்த ஊர். கொங்கு நாட்டின் சிறந்த  ஏழு சிவஸ்தலங்

களில் ஒன்று. ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட சிவாலயம் தான்  கல்யாண பசுபதீஸ்வரர் இருக்கும்  சிவன் கோவில். 127அடி உயர கோபுரம். 

 காமதேனு இங்கே சிவனை வழிபட்டதாக புராணம். அதனால் இந்த ஊருக்கு ஆநிலை என்று பெயர் ஏற்பட்டது. சிவனுக்கு  பசு பதீஸ்வரர் என்று திருநாமம்.   அதாவது
 ஆநிலையப்பர் என்று தமிழில் பெயர்.  அம்பாள்   சுந்தரவல்லி,அலங்காரவல்லி என்ற பெயர் கொண்டவள்.சுந்தரர் சம்பந்தர் ஆகியோர் தரிசனம் செய்த தேவார பாடல் பெற்ற ஸ்தலம்.
வருஷாவருஷம் பங்குனியில் மூன்று நாள் சூரிய ஒளி நேராக பசுபதீஸ்வரர் மேல் படுகிற அற்புதம்.கரூர் சித்தர் வாழ்ந்த இடம். இவரைப்பற்றி அப்புறம் சொல்கிறேன்.

இந்த ஊரில் ஒரு அற்புதம் நடந்தது. அதைப் பற்றி தான் சொல்ல வந்தேன். திருத்
தொண்ட
 தொகையில் ஒரு வரி சுந்தரர் அழகாக எழுதுகிறார். 

''இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க் கடியேன்''  என்று.    தன்னை  எறிபத்த நாயனார் என்ற சிவனடியாரின் அடிமையாக சொல்கிறார்.  யார் அந்த எறிபத்தர்?

கருவூரில் பரமசிவனை வழிபடும் சிவபக்தர்
களில் ஒருவர். அறுபத்து மூன்று நாயன்மார்
களில் ஒருவர்.  சிவனடியார்களுக்கு தொண்டு செய்து மகிழ்ந்தவர்.  சிவனடியார்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால்  தனது கையில் வைத்திருக்கும் மழுவினால் எதிரிகளை தாக்கி  சிவனடியார்களைக்  காப்பாற்றியவர்.  மழுவுக்கு பரசு என்று ஒரு பெயர். இதை கையில் வைத்திருந்ததனால் தான் மஹாவிஷ்ணுவின் தாசாவதாரங்களில்  பரசுராமன் என்று ஒரு அவதாரம்.

எறிபத்தர் கருவூரில் வாழ்ந்த காலத்தில்
சிவகாமியாண்டார் என்ற  ஒரு  முதிர்ந்த சிவபக்தரும் கருவூரில் இருந்தார். தினமும் மலர் பறித்து மாலையாக்கி பசுபதீஸ்வரருக்கு சாத்துவது அவர் கைங்கர்யம்.  எறிபத்தருக்கு  அவரிடம் மிக்க பக்தி, விஸ்வாசம்.

 ஒவ்வொருநாளும் விடியற்காலம்  சிவகாமியாண்டார்  ஸ்னானம் முடித்து சிவநாமம் சொல்லியவாறு நந்தவனத்திற்கு சென்று புஷ்பங்களை பறித்து  எடுத்து வந்து மாலை கட்டுவது வழக்கம். ஒரு பெரிய கூடை வைத்திருப்பார் அதை நிரப்பிக்கொண்டு வருவார்.

ஒருநாள் அவ்வாறு  விடியற்காலை எழுந்து, ஸ்நானஞ் செய்து வாயை, வஸ்திரத்தினாலே கட்டி, நந்தவனத்துக்குள் சென்று, புஷ்பங்களை  பறித்து  தான் சுமந்து வந்த கூடை நிரம்ப , கையிலே தண்டை ஏந்தி  பசுபதீஸ்வரருக்கு மாலை கட்டி சாற்ற ஆலயம் நோக்கி நடந்தார்.அன்று  மஹா நவமி உற்சவத்திற்கு முதலாவது நாள்.

அந்த நேரம் பார்த்து, அந்த ஊர் ராஜா புகழ் சோழனின் பட்டத்து யானையை  அவிழ்த்து விட்டிருந்தார்கள், அது காவேரியிலே சந்தோஷமாக  முழுகிவிட்டு பெருமிதத்தோடு உலாவிக் கொண்டிருந்தது. அதன் பாகன், காவலர்கள் நிறைய  பேர் அதோடு நடந்தார்கள். யானை வேகமாக நடந்தது.

எது எப்போது நடக்கவேண்டுமோ அது அப்படியே நடந்து தானே தீரும்.

யானைப்பாகனோடும்,காவலர்களோடும்  வந்த  பட்டத்து யானை  ஒரு வீதியிலே விரைவாக திரும்பியது.  அந்த தெருவில்  தனக்கு முன்னே ஓரமாக மெதுவாக நடந்து சென்ற  சிவகாமி
யாண்டாரைப் பார்த்து விட்டது. அவர் முதுகில் சுமந்த பெரிய  பூக்கூடை அதற்கு  பிடித்தது.
ஒரு கண நேரத்தில்  கூடை  யானையின் தும்பிக்கையில்.  பூக்களை வாரி வீசியது.
சிவகாமியாண்டார்  மிரண்டுவிட்டார். இப்படி ஒரு ஆபத்தா?

மேலே படிப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...