Thursday, June 28, 2018

GITANJALI



ரபீந்திரநாத் தாகூர்   --    ஜே.கே சிவன் 

                                                        கீதாஞ்சலி 


                                      
                                   
   

That I want thee, only thee---let my heart repeat without end. All desires that distract me, day and night, are false and empty to the core.

As the night keeps hidden in its gloom the petition for light, even thus in the depth of my unconsciousness rings the cry---`I want thee, only thee'.
As the storm still seeks its end in peace when it strikes against peace with all its might, even thus my rebellion strikes against thy love and still its cry is---`I want thee, only thee'.
இன்றோ நேற்றோ அல்ல, பல காலமாகவே, ''நீ வேண்டும் நீ வேண்டும்''   என்று என் இதயத்தில் ஒரு  அயராத துடிப்பு.    மூச்சு துடிப்பு எத்தனையோ அத்தனை இந்த துடிப்பும்  ஆகும். இன்றுவரை அதற்கு முடிவே இல்லை. வேறே ஏதாவது எண்ணங்கள் என்னை ஆக்கிரமிக்கிறதா, ஆக்கிரமித்ததா என்று பார்த்தால்  நிச்சயம் இல்லை என்று தான் சொல்வேன். வேறே  துடிப்பு இருந்தது என்று நான் சொன்னால் அது அக்மார்க் பொய்.

வெளிச்சம் வேண்டும், ஒளி தேவை என்று இரவு தனது   வேட்கையை இருளில்  எங்கே வைத்திருக்கும். மறைத்து தான் வைத்திருக்கும்.  பொழுது விடிய, சூரியன் வர,  அதுவரை தேடியது, தேவையானது  கிடைக்க காத்திருக்கவேண்டும்  அல்லவா?    அதே போல் தான் என்னுடைய  இதயத்திலும், என்னென்னவோ குழப்பங்களில் அடிப்படியாக  அந்த ஒரு தேடல், வேட்கை இருந்து கொண்டே இருக்கிறது.  அது வேறொன்றுமில்லை ''நீ வேண்டும்  எனக்கு நீ வேண்டும், நீ மட்டுமே  வேண்டும் ''

ஒரு அருமையான உதாரணம் சொல்லட்டுமா?  புயல் சீற்றத்தோடு  மரங்களை எல்லாம் சாய்த்தவாறு ஒரு அமைதியான கிராமத்தை உருக்குலைக்கிறது.கடைசியில் என்ன ஆயிற்று?  தனது பலம் குறைந்த காற்று இருந்த இடம் தெரியாமல் அந்த கிராமத்தில் மறைந்தது.  எஞ்சியது என்ன  ஏற்கனவே இருந்த அமைதி தானே. நடுவில் தானே  புயல் அதன் சீற்றம். அமைதியான ஊர் அதை ஏற்றுக்கொண்டு  பின்னர் தானே மட்டும் தான் இருக்கிறது. வந்தது போய்விட்டதே.  என் மனததில் பெரும் போராட்டம். நினைவுக்கு அப்பால், நினைவு தப்பி,  என் மனது   எந்த வேகமான, சக்தியான உணர்வு, உணர்ச்சிகளால்   பாதிக்கப்பட்டாலும், அடிநாதமாக எப்போதும் ஆரம்பம் முதல் இப்போது வரை இருப்பது ஒரு மெல்லிய ஏக்க ஸ்வரம் தான்  ''கிருஷ்ணா, எனக்கு நீ வேண்டும்''
When the heart is hard and parched up, come upon me with a shower of mercy.                                                                                                                                                  When grace is lost from life, come with a burst of song.                                                                                                                                                                                            When tumultuous work raises its din on all sides shutting me out from beyond, come to me, my lord of silence, with thy peace and rest.                                                     When my beggarly heart sits crouched, shut up in a corner, break open the door, my king, and come with the ceremony of a king.                                                           When desire blinds the mind with delusion and dust, O thou holy one, thou wakeful, come with thy light and thy thunder.
என்ன செய்வேன். என் இதயம் பாறையாக உறைந்து விட்டது.  கடினமாக  ஆகி உஷ்ணம் அதிகரித்து  பாளம் பாளமாகி விட்டதே. வா கிருஷ்ணா  வா இந்த கடின பாறை இனியும் வெயிலில் சூட்டில்  வெடிக்க வேண்டாம். உன் கருணை மழையைப்  பொழி. என் மனம், இதயம்,  குளிரட்டும் உன் அன்பால்.  தேடிப்பார்த்தேன். என்  வாழ்வில்  உன் கருணை, பேரன்பு காணோம் அப்பா,  வா  உன் திவ்ய சங்கீதம் என் மனதை உருக்கி  இளகச்செய்து  அதில்  உன்  பேரன்பையும் அருளையும்  பெறட்டும்.
எண்ணற்ற  அலைபோல்  என் ஆரவாரமான  செயல்பாடுகள்  என்னைப்  பிடித்து தூர தள்ளுகின்றன. நீ  இருப்பதற்கு எதிர்ப்பாதையில் நான் செலுத்தப்படுகிறேன்.  அவற்றை பிளந்து நீ என்னருகில் வா கிருஷ்ணா, வா வா  வந்து என் மனதில் அமைதியை நிரப்பு.  அலைபாயும்  இதயத்திற்கு அமைதியைக்கொடு . ஒய்வு தா. 
நீ என் ராஜா,  ஒரு மஹா ராஜா, இதோ பார்  என்னை.   மூடிய  அறையில் மூலையில் சுருண்டு  என் இதயம் நோஞ்சானாக கூனி குருகி  தவிக்கிறதே.  மூடிய கதவை படார் என்று உதைத்து திறந்து உள்ளே வா என் மஹாராஜா, என் இதயத்தைத்  தட்டிக் கொடுத்து உனது இருப்பிடமாக ஆக்கிக்கொள் .
எப்போதும்  என் மனம் ஒரு இனம் புரியாத மாயை  மயக்கத்தில் வாடி, ஆசை புழுதியில் கண் இருண்டு , குருடாகி, புரள்கிறதே,  பரிசுத்த, பரிபூர்ண  தெய்வமே,  வா,  எழுந்திரு, விழித்துக் கொள்.    உன் பேரன்பு மின்னல் ஒளி கண்ணை ஒளிபெறச்செய்ய,   தைரியம் ஊட்டும் இடியுடன்  என்னைக் காத்திட வா  கேசவா. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...