Friday, March 30, 2018

VEDIC RAVI




கிழக்கு தாம்பரத்தில் பலே ஜோர் கல்யாணங்கள்.- J.K. SIVAN

பங்குனி உத்தரம் என்பது சுருக்கமாக பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினம். முருகனுக்கும் தேவானைக்கும் திருமணம். ஸ்ரீ ராமர், லக்ஷ்மணன், பரத, சத்ருக்னர்களுக்கு கல்யாணமான நாளாகவும் வருஷா வருஷம் கொண்டாடப்படுகிறது. இந்த வருஷம் அது ஒரு நல்ல வெள்ளிக்கிழமை அன்று வேறு வந்தது. (GOOD FRIDAY). இதே நாளில் பரமேஸ்வரனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து திருமண நாள். மதுரையில் மீனாட்சி கோவிலில் கேட்கவேண்டுமா கூட்டத்துக்கு. சிகரம் வைத்தாற்போல் இன்று தான் ஆண்டாள் ரங்கநாதர் கல்யாணம். மொத்தத்தில் சிறந்த கல்யாண நாள்.

இந்த சிறப்பு மிக்க நாளில் 30.3. 2018 பங்குனி உத்தரத்தில் இன்னும் சில அறுபதாம், எழுபதாம், எண்பதாம் கல்யாணம் நடந்தால் எப்படி இருக்கும் என்று நேற்று நேரில் என்னோடு வந்தவர்களுக்கு தான் தெரியும்.

ஒரு கல்யாணத்திலேயே ரொம்ப சந்தோஷம். 52 ஜோடி கல்யாணங்களில் எத்தனை சந்தோஷம் இருக்கும். அதுவும் இன்னொரு சுவாரசிய சங்கதி. அந்த 52 ஜோடிகளின் பிள்ளை, பெண், பேரன் பேத்தி உறவினர் கூட இல்லாமல் சில ஜோடிகள். அவர்களுக்கு இத்தனை உறவும் நீங்களும் நானும் நம்மை இணைத்து இத்தகைய அற்புதங்களை நிகழ்த்தி வரும் ஸ்ரீ வேதிக் ரவி என்ற அதிசய மனிதரும் தான். அவரோ ஒரு பிரம்மச்சாரி வேத பிராம்மணர். வேத மந்திரங்களை சிறப்பாக பிரயோகிக்க சிறந்த பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டனர். ஒரு 105 வயது மிக ஆரோக்ய உற்சாக பாட்டி கலந்து கொண்டு சிறப்பித்தாள் . என்னை ஆசிர்வதித்தாள். அவளே இந்த வயதிலும் ஒரு மூத்தோர் இல்லம் நடத்தி வருகிறாள் என்பது தான் ஆச்சர்யம்.

நிறைய பேர், நிறுவனங்கள் இந்த கோலாகல வைபவத்தில் கலந்து கொண்டனர். காலையில் சிற்றுண்டி, வேத பாராயணம், ஹோமங்கள், ருத்ர அபிஷேகங்கள், சீர் வரிசைகள், புது வஸ்திரங்கள், முரளிதர ஸ்வாமியின் துளசி மலை, வெள்ளி டாலர் வேறு. சிலரது பரிசுகள். இந்த தினத்தில் புவனேஸ்வரி தார்மீக ட்ரஸ்ட் நிறுவனத்தாரின் (வேதிக் ரவியுடைய அற்புத நிறுவனம்) விளம்பி வருஷ புது பஞ்சாங்கம் வெளியீடு. நான் இந்த பஞ்சாங்கத்தின் முதல் பிரதி பெற ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சங்க சார்பாக (உங்கள் சார்பாக) அழைக்கப்பட்டேன். பஞ்சாங்க உபயோகம் அதன் சிறப்பு பற்றி கொஞ்சம் பேசினேன். முக்கியமாக சதாபிஷேக, பீமரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி தம்பதிகளுக்கும் நானும் மரியாதை செய்ய அழைக்கப்பட்டேன். அவர்கள் அனைவருமே மூன்று வயோதிகர்கள் இல்லத்தில் இருந்து அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்கள். மீதியை இத்துடன் இணைத்துள்ள படங்கள் சொல்லும். நீங்களும் நானும் நம் வீட்டாரும் தான் சீர் கொண்டு வந்து தந்தார்கள். நாதஸ்வர தவில் வாத்யம், அனைவருக்கும் கல்யாண சாப்பாடு இதெல்லாம் நிறைய பேருடைய கைங்கர்யம். பணத்தை நல்ல முறையில் செலவு பண்ண வேண்டும் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு பாடம்.

அப்புறம் வீடியோ போட்டோக்கள் சில வந்து சேரலாம். பல அறிஞர்கள் பங்கேற்று பேசியதையும் கேட்போம்.






















No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...