Sunday, March 25, 2018

PROVERBS



பழ(சான) மொழிகள்  சில --  J.K. SIVAN 

​இன்னும் பல வீடுகளில்  இங்கிலிஷ் பேசாமல் தான்  தமிழ்காரர்கள் இருக்கிறார்கள்.  அவர்களில் சில  வீடுகளில் பழயகால  சில வார்த்தைகள் அபூர்வமாக காதில் விழவும் வாய்ப்புண்டு.  நான் கேட்ட எங்கள் வீட்டில் எத்தனையோ வருஷங்கள் முன்பு  பேசிய சில ஞாபகத்துக்கு வருகிறது.

'​
அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியா
​ப் ​
 
​பொண்ணும் 
 சமைக்கும்
​'' ---   இப்போது 
 யார்  சமைக்கிறார்கள் வீட்டிலே?  பாதி 
​பொழுது 
 எங்கோ  ஒரு ஓட்டலில் தானே.
 சாப்பாடு விலை போக  மீதி பணம்  தான்  டாக்டருக்கு சொந்தமாச்சே.  
​இன்னும் கொஞ்சம் வீடுகளில்  ஒரு மாமா ஸ்கூட்டரில் வந்து சாம்பார், ரசம், காய், மோர்  பிளாஸ்டிக் பையில் சின்னதாக பொட்டலம் கட்டி நூல்சுற்றி  கொடுத்துவிட்டு காசு வாங்குவது வழக்கமாகி விட்டது. சில வீடுகளில் வசதி இருந்தால் ஒரு மாமி காலைமுதல் ராத்திரி வரை ஒரேவேளையாக சமைத்து வைத்து விட்டுட்டு  ''தின்னால் தின்னு தின்னாவிட்டால் நாய்க்கு போடாதே, கடிக்கும்'' என்று சொல்லாமல் சொல்லிவிட்டு போகும் நியதி. ​

​உண்மையில் ​
முன்னோர்கள் சொன்ன  அஞ்சு
​ என்னவென்றால் 
  
​''​
 மிளகு, உப்பு, கடு
​கு 
,சீரகம், புளி
​''​.
    மூன்று என்பது  தண்ணீர், அடுப்பு, நெருப்பு.  
​மூணு ரெண்டாகி விட்டது இப்போது. நெருப்பும் அடுப்பும்  ஒரே காஸ்  தானே. 

ஒண்ணுமே தெரியாத 
​(அந்தக்கால) ​
 பொண்ணு கூட  இந்த  அஞ்சையும்  மூன்றையும்  கொடுத்தால்  நல்ல  சமையல் செய்து விடுமாம் 
​.  ஞாபகத்தில் இருக்கட்டும் இது அந்தக்கால சமாச்சாரம்.  
இட்டலி  தோசை  பொங்கல்  இல்லாத  வீடு  அப்போதெல்லாம்  கிடையாது. 
''அரைக்காசை ஆயிரம் பொன்னாக்குகிறவளும் பெண்சாதி, ஆயிரம் பொன்னை அரை க்காசு ஆக்குகிறவளும் பெண்சாதி.'' 
இந்த வாக்யத்தின்  முற்பகுதி  கற்காலத்தையோ  முற்காலத்தையோ   சேர்ந்தது தான்  என்று  நினைக்காதீர்கள்.  இன்றும்  சில வீடுகளில்  கணவனுக்கு  எவ்வளவு சம்பாதித்தோம் என்று மட்டும் தான் தெரியும். அது  எப்படி  செலவானது  என்று இதைப் படிக்கும் வரை
​யும் ​
தெரியாது. தெரியப்போவதும் இல்லை.  அவனுக்கு  ஒன்றாம் தேதியும் முப்பதாம் தேதியும் 
​சமம். 
 என்றுமே  அவன் கையில் காசு இருக்கப் போவதில்லை.  சம்பளம் வாங்கிய அன்று  சட்டையை கழட்டுவதற்குள்  பணத்தை கழட்டிவிடுவாள் குயீன் எலிசபெத்.
​ 

 ''ஆறை  நூறாக்கும் தகுதி  
​ பெண்களில் 
பலருக்கு  இருக்கிறது.  குடும்பத்தை  பல  ஐந்தாண்டு திட்டங்கள்  போட்டு  அரசாங்கம் போல் இல்லாமல்  உண்மையிலேயே வெற்றிகரமாக  நடத்தக்கூடியவர்கள் இன்னும்  இருக்கிறார்கள். அத்தகைய  இல்லத்தரசிக
​ளை 
 மனைவியாக
​ அடைந்தவர்கள் 
 கொடுத்துவைத்தவர்கள். பணத்தை மட்டும் அல்ல.. 

 ''ஆயிரம் பொன்னை  அரைக்காசு  ஆக்கும்  அரைக்காசு அம்மன்களை பற்றி  தெரிந்திருக்கும். 
​ 
முக்கால் வாசி ராணிகள்  பல  ஆயிரத்தையும்  கூட  வீட்டிலிருந்தே  அரை நிமிஷத்தில் அமேசானில்  காலி செய்பவர்கள்.​
 ​
 அதனால்  அதைப்பற்றி சொல்லாமலேயே  கொஞ்சம்  வார்த்தைகளாவது  மிச்சம்  பிடித்து  சேர்த்து வைக்கட்டுமா?. 
''ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தா்ன், திருநாளும்  வெறு நாளாச்சு.'' என்றும்   ஒரு பழமொழி   உலவுகிறதே தெரியுமா. 
இப்படியும்  சிலர்  இருக்கிறார்கள்  எப்போது  எதை செய்வார்கள்  என்று எதிர்பார்க்க முடியாது.  இவர்கள்  சமய  சஞ்ஜீவிகள்  அல்ல. சீதக்காதி  என்ற  ராஜா  செத்துப்போனப்புறம் கூட  ஒரு  புலவருக்கு  உதவி  செய்தான் என்று  படித்திருக்கிறோம். அவனைப்பற்றி  தான்  ''செத்தும் கொடுத்தான்  சீதக்காதி''  என்பார்கள்.  சமயா சந்தர்பம்  தெரியாமல்  மனம் போல  நடக்கும்  சிலரால்  தான்  சம்பவங்கள் அசம்பாவிதங்களாகிறது.  சில திக் விஜயசிங்குகள் இன்னும்  இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல  சுப்பிரமணியம்  சுவாமிகளும் இருக்கிறார்கள். 
​சிறைக்கு  இழுத்துக்கொண்டு போனாலும் சிரிப்பவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்களும் இருக்கிறார்களே.​

இதையே  சற்று மாற்றி  வேறு ஒரு  பழமொழியாக  சொல்வதுண்டு.  ''ஒரு நாளுமில்லாமல் திருநாளுக்குப் போனால் , திருநாளும் வெறு  நாளாச்சு.''   அது கொஞ்சம்  நமக்கு  தெரிந்த  வழக்கு தானே. அதிர்ஷ்ட கட்டை  என்று  பெயர் வாங்கிக்கொண்டு  திரிபவர்கள் சம்பந்தப் பட்டது.  ''நான்  எங்கே  போனாலும்  என்  அதிர்ஷ்டம்  எனக்கு  மின்னாலே  அங்கே  போய்டறது சார்''  என்று  நொந்து கொள்பவர்களை கேட்டிருக்கிறேன்.   அப்படி எல்லாம்  சொல்லாதீர்கள். இது  யதேச்சையாக  நடந்திருக்கும். அடுத்த தடவை பாருங்கள் நீங்கள்  எடுத்த  கார்யம் எல்லாம்  ஜாம்  ஜாம்   என்று  நடக்கும்.  ஜெயம்  தான்  போங்கள்''  என்றும்  நம்பிக்கை ஊட்டுவோம். 
''விளக்குமாறுக்கு பட்டுக்குஞ்சமா''  என்பது  நிறைய பேர்களின்  வாயில் புரளும்  பழமொழி. 
இது தகுதி இல்லதாவனுக்கு  பதவி கிடைத்ததையும் ஒண்ணுமில்லாதவனுக்கு  உசந்த  மரியாதையும்  புகழும்  கிடைப்பதை விளக்கும்  சொல்.  இது  கிடைக்க  புண்ணியம்  செய்திருக்க வேண்டும்.  கஷ்டப்பட்டு  படித்து,  தட்டு தடுமாறி  ஏதோ  ஒரு வேலை
​யை ​
 கெட்டியாக பிடித்து
​க 
 ்கொண்டு  நாலு காசு பார்த்து தானும் குடும்பமும்  ஒரு வேளை  சாப்பிட  வழி செய்துகொண்டவர்களுக்கு இது  வயிற்றெரிச்சலை கொடுக்கும்  பழமொழி.  நமக்கு  தலையில்  இட்டது  இவ்வளவு தான்  என்று சமாதானம்  தேடிக்கொள்ளவேண்டியதுதான். அதற்காக  எல்லோருமா ராகுல் காந்தியாகி விடமுடியும்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...