Monday, October 30, 2017

சித்தர்கள் - J.K. SIVAN

சித்தர்கள் - J.K. SIVAN  

                        புரட்சி சித்தர் சிவவாக்கியர்..!!  

எத்தனை எத்தனையோ மஹான்கள், சித்த புருஷர்கள் நம்மிடையே தோன்றி இருக்கிறார்கள். பலரை விடாது கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும். அவர்களது ஒவ்வொரு சொல்லும் விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள். அர்த்தம் பொதிந்தவை. எந்த காலத்திற்கும் முக்யமாக தற்காலத்துக்கும் பொருந்தியவை.
\
அப்படிப்பட்ட ஒரு சித்தர் தான் சிவ வாக்கியர். அவர் வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாக இருக்கும். தண்டவாளத்தில் ரயில் வண்டி ஓடுவதைப் போல ஆடி அசைந்து இதமாக மனதை தொடும். வேகமாக உள்ளே பதியக்கூடியதும் கூட.

வேத கால ரிஷிகள் மீன் தின்றார்களா? இல்லையா? மீன்கள் நீரில் என்னவெல்லாம் செய்தனவோ. அவை இப்படி உபயோகித்த ஆற்று நீரைத் தானே பருகினார்கள், அதில் தானே குளித்தார்கள். மீனை விடு. மானை சாப்பிடவில்லையா? அப்போதும் இப்போதும்? மான் தோலின் மீது தான் அமர்வதே அப்போதும் இப்போதும்! மான்தோலை க்ரிஷ்ணாஜினம் என்று சிறிது கொண்டது தானே உபவீதம் எனும் பூணுல்.

ஆடு சமாச்சாரமும் அப்படித்தான். அப்போதும் இப்போது சில இடங்களிலும் வாஜபேய யாகம்.
வேறு விதத்தில் உணவுத்தட்டில் இப்போது.

பசு? ரிஷிகள் தொடவில்லை. இப்போதுள்ள சிலர்? புதைத்த இறந்த பசுவின், மாமிசம், கழிவு, சாணம் கூட காய்கறிகள் விளைய உரம் தானே! காய்கறிகளில் பசு மாமிசம்.......??

நிறுத்துங்கள் போதும். இது என்ன சிவவாக்கியர் என்று சொல்லிவிட்டு ஏதோ ஒரு கழக ஆசாமி மாதிரி விதண்டாவாதம் பேசுகிறீர்கள். போதும் உமது வியாக்கியானம். கேட்க தயாராக இல்லை இங்கு யாரும்! இப்படித்தான் நானும் நினைத்தேன்.

இது சிவவாக்கியர் தான். ஏன் எதற்கு எந்த சந்தர்ப்பத்தில் இப்படி சீறுகிறார் என்று புரியவில்லை. ஆனால் அவரது எழுத்தில் உள்ள வேகம், வாதம் சற்று சிந்திக்க வைக்கிறது. விடை தெரியாத வினாக்கள். இனி பாடல்களை பார்ப்போம்.

மீனிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
மீனிருக்கும் நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
மானிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.

ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது.

சிவ வாக்கியர் என்று ஒருவர் இருந்தால் அவரை போற்றி வணங்கவேண்டும். என்ன தெளிவான சிந்தனை எண்ணம் அந்த சித்தருக்கு. அவரை திருமழிசை யாழ்வாராக அடையாளம் கொண்டுவிட்டதால் சிவ வாக்கியர் பாடல்கள் நின்று போயிருக்கலாம். அல்லது ரெண்டு பேருமே வேறாக இருக்கலாம். பத்தாம் நூற்றாண்டு பற்றிய இந்த கவலை பெரிய கேள்விக்குறியாக நின்று போகிறது.
மேலே ஒரு பாடலில் மாட்டிறைச்சி மரக்கறிக்கிடுவது என்றால் உரம் என்று சொன்னேன்.

நேற்று ஒரு கோசாலை சென்றிருந்தேன். பாலா வேத பாடசாலை தொழுப்பேடு என்ற கிராமத்தில் 100கி.மீ. தூரத்தில் சென்னையிலிருந்த்து திருச்சி மார்கத்தில் செல்லும்போது இடது பக்கம் தெரு மீதே 4 ஏக்கர் பரப்பளவில் அருமையாக செயல் பட்டுவருகிறது. அதன் நிறுவனர் ஸ்ரீ பாலகிருஷ்ணன் என்னோடு பேசும்போது பேச்சு வாக்கில் இந்த பத்து வருஷத்தில் எந்த பசுவும் அந்திம காரியம் செய்ய சந்தர்ப்பம் அளிக்கவில்லை. அப்படி நேரிட்டால் நிறைய அதற்கான மந்திரங்கள் மனிதர்களுக்கு செய்வதை விட பல மடங்கு அதிகம் என்றார். இது தான் நான் மேலே சொன்ன ''மாட்டுக்கறி'' உரம்.....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...