Saturday, October 14, 2017

தத்தாத்ரேயரின் 24 குருமார்கள்

உத்தவ கீதை: 2

தத்தாத்ரேயரின் 24 குருமார்கள்

மஹா பாரதத்தில் வரும் ஒரு பெரிய யது குல ராஜரிஷி யயாதி. கிருஷ்ணனின் குலம். யயாதிக்கு அசுர குரு சுக்ராச்சார்யார் மகள் தேவயானி மனைவி. வயதாகியும் உலக ஆசைகள் யயாதியை விடவில்லை. மீண்டும் இளமையை தேடினான். யார் கொடுப்பார்கள்? . கிழவன் யயாதி மகன் யதுவை ஒருநாள் கேட்கிறான்

''அன்பு மகன் யது, நாம் இருவரும் வயதை மாற்றிக்கொள்ளலாமா?''

'' ஸாரி அப்பா, நான் இந்த ஆட்டத்துக்கு வரவில்லை''

கோபித்த யயாதி மகன் யதுவை நாடு கடத்துகிறான். யது மனது உடைந்து காட்டுக்கு போகிறான். அவன் மனது இதமாக யாராவது அவனுக்கு ஆறுதல், உபதேசங்கள் சொல்ல மாட்டார்களா?? தேடுகிறான்? அப்போது தான் அங்கே ஒரு அவதூதரை (முற்றும் துறந்த நிர்வாண ரிஷி ) காண்கிறான்.

தாடி, மீசை, உடல் முழுதும் வெண்ணிற சாம்பல் பூச்சு. ஞான ஒளி வீச எதிரே வருகிறார் முனிவர். அப்படியே ஓடி அவர் காலில் விழுகிறான் யது .

''மகரிஷி நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?

''ஒரு அவதூதன்''

''அப்படியென்றால் என்ன அர்த்தம்?

'' உலக பற்றை அறவே விட்டொழித்தவன், ஆத்ம ஞானப் ப்ரம்மானந்தத்தை பிடித்துக் கொண்டு அதில் திளைப்பவன்''

மகரிஷி எனக்கும் அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு அழியாத ஞானம் பெற உபதேசம் செய்வீர்களா '' என்கிறான் யது .

அவதூதரான தத்தாத்ரேயர் யதுவை கூர்ந்து கவனிக்கிறார். அவன் ஆர்வம் உண்மையானது என அறிகிறார்.

''அப்பனே, நானும் உன் மாதிரி சாதகன் தான். வாழ்க்கையே உலகில் பெரிய பள்ளிக்கூடம். அதில் எண்ணற்ற சாதகர்களுக்கு குருமார்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இருபத்திநாலு சந்தர்ப்பங்களில் எனக்கு உபதேசம் செய்தவர்களை என்னை உய்விக்க வந்த இருபத்து நாலு குருக்களாக ஏற்றுக் கொண்டவன்''

சாக்ஷாத் ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு ஒரு குரு அவசியமா என்ன? அவரே ஜகத் குரு. அவதூதராக அவர் சென்று கொண்டிருந்தவர்.

யது க்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. மண்டை வெடித்து விடும்போல ஆகிவிட்டது.

''சுவாமி என்னால் நம்ப முடியவில்லையே. உங்களுக்கு யார் குரு தேவர்? ''

''குரு என்று நீ யாரையெல்லாம் நினைக்கிறாயோ அவர்கள் எல்லோருமே குரு தான்''

''உங்கள் பெற்றோரிடமிருந்து ஞானம் பெற்றீர்களோ?''

''பெற்றோர் மட்டுமல்ல, மற்றோர் யாராக இருந்தாலும் அவர்களுடமிருந்தும் அறியவேண்டியவை இருந்தால் அவர்களும் குரு தான்''

''உங்களது ஆசானைத் தெரிந்துகொள்ள வெகு ஆர்வமாக இருக்கிறது. யார் அவர் என்று சொல்லுங்களேன்''

''நான் தான் சொன்னேனே அப்பனே. எனக்கு 24 குருமார்கள் உண்டு''

''சுவாமி என்ன சொல்கிறீர்கள் உங்களுக்கு 24 குருவா? எப்படி அத்தனை பேரிடம் பயின்றீர்கள். என்ன தெரிந்துகொண்டீர்கள்?''

''நீ சரியான சாதகன். ஞான மார்க்கத்தை அடைய விழைபவன் என்று புரிகிறது. எனவே சொல்கிறேன் கேள்'' என்று ஆரம்பிக்கிறார் தத்தாத்ரேயர்.:

1 . என் முதல் குரு - பூமி.

அகழ்வாரையும் இகழாது தாங்குவது. பொறுமையின் சின்னம். இன்னா செய்தாலும் நன்மை செய்தல், பொறுமை எல்லாவற்றையும் இது தான் கற்றுக்கொடுத்தது.

''குருவே, நீங்கள் சொன்னதற்குப்பிறகு தான் யான் யோசிக்கிறேன். ஆம் முதல் குரு எல்லோருக்குமே பூமாதேவி தான். ''

2. தண்ணீர் தான் உலகத்துக்கே ஆதாரசுருதி - உயிர் நிலைஅல்லவா.. நீரின்றி அமையாது உலகம் என்பது உனக்கு தெரியுமே. உயிர் கொடுப்பதுடன் பரிசுத்தப்படுத்துவதும் நீரே. தேங்கி நிற்கும் நீர் அல்ல. எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் நதியின் நீர் தான் பரிசுத்தமானது. எனக்கு ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டே இருக்க சொல்லிக்கொடுத்தது நதி நீர் தான். தேங்கினால் அசுத்தம் சேர்கிறது. மனதில் எதையும் சேர விடக்கூடாது என்று இந்த ரெண்டாவது குரு நதி நீரிடம் கற்றுக்கொண்டேன்.

''ஆஹா ஆச்சர்யம் மகரிஷி''

3. நெருப்பு என்னுடைய மூன்றாவது குருவாக அமைந்தது. சத்தை, ஈரம், உளுத்தது, புதுசு, பழசு, பெரிசு சிறிசு எதை அதனிடம் போட்டாலும் அதை எரித்து ஒளியும் ஜ்வாலையும் தரும் நெருப்புதான் எதையும் சமமாக பாவித்து ஒளியை வீச எனக்கு கற்றுத்தந்தது. இது மட்டம் இது பரவாயில்லை, இது நல்லது என்று எல்லாம் பாகுபாடு அறியாத எனது மூன்றாவது குரு நெருப்பு.

''அடடா, இப்படி ஒரு விளக்கமா நெருப்புக்கு. உண்மையிலேயே நெருப்பு குருவே தான்''


அவதூதர் தத்தாத்ரேயாரின் மற்ற குருமார்களையும் அறிவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...