Friday, April 29, 2022

PRANAVA MANTHRA OM

 

''ப்ரணவ மந்திரம்''   -   நங்கநல்லூர்   J K  SIVAN 

“தியானம் என்பது  மனதை   ஒரு நல்ல விஷயத்தால் நிரப்பும் வேலை.  எப்போது நிரப்ப முடியும்?  மனது காலியாக  இருந்தால் தானே நிரப்ப இடம் இருக்கும்?   

மனதை  எப்படி காலியாக்குவது?  
மனது முழுதும்  ஓயாமல்  ஒழியாமல்  பாய்ந்து வரும்  கடல் அலைகள்  போல் என்னென்னவோ  எண்ணங்கள்  மனதை  ஆக்கிரமிப்பதால் அது எப்போதும்  நிறைந்து தான் இருக்கிறது. மேலே மேலே எது வந்தாலும் அதற்கும்  நெருக்கி  பம்பாய் நகரம் போல்   இடம் கொடுக்கிறது.  அதனால்  தான்  என்னென்னவோ சம்பந்தமில்லாத எண்ணங்கள்  ஒன்று சேரும்போது அடிக்கடி,  சலனம் உண்டாகிறது.  

ஏதேனும் ஒரே ஒரு எண்ணத்தில் மனது நிறைந்தால்  அதில்  வேறு பாதிப்பு எதுவும் இல்லை.  அதில் இருக்கும் ஒரே விஷயம்  கூட  எல்லாமும்  ''தான்''  இல்லை  ''அவன், அது''  என்பதால்  மனது காலி தானே.  வேறு எதுவும் இல்லாதது காலி தானே.    

ஒரு வியாதியஸ்தனுக்கு  எப்போது  மருந்து கொடுத்தாலும்   ' மருந்தா,  வேண்டாம்''  என்பான்.
ஏன்  மருந்து வேண்டாம் ?
''மருந்து கூட   சாப்பிடமுடியாத படிக்கு  அவனுக்கு  உடம்புக்கு  ரொம்ப  முடியலே.  கொஞ்சம்  சரியானபிறகு  மருந்து சாப்பிட முடியும் போது,   சாப்பிடுகிறேன்'' என்பான்.

தியானம் செய்வதில் நாம் இப்படித்தான் இருக்கிறோம்.  ''தியானமா'' அதெல்லாம்  நம்மால் முடியா துப்பா. கொஞ்சம் மனசை  தயார் பண்ணிக்கொண்டு  அப்புறம் தியானத்தில்  ஈடுபடுகிறேன்''  என்கிறோம்.

 வாழ்க்கையில்   துன்பம், பெரிய கஷ்டம், கோபம், பயம், இதுமாதிரி ஏதாவது நம்மை  வாட்டும் போது,  ''இப்போ மனசு சரியில்லேப்பா, கொஞ்சம்  நார்மல் ஆகட்டும். தியானம் பழகறேன்'' என்று தள்ளிப்போடுகிறோம். 

தியானம்  நமது கஷ்டங்களை தீர்ப்பது என்று ஏனோ நமக்குத் தெரியவில்லை.  பகவத் தியானம், எண்ணங்களைச்  சீர்படுத்தும்,  அதை பாதிக்கும் விஷயங்களை  அப்புறப்படுத்தும் என்று ஏனோ நமக்கு புரிவதில்லை.  மன அமைதியை தருவது  தியானம் தான்.

இந்த பிரபஞ்சம் உருவான தே  தியானத்தின்  மந்திரம்   ''ஓம்''  என்பதால்  தான் என்று உணர்வ தில்லை.   வேறு எந்த மந்திரம் சொல்லும்போதும் , அதற்கு சக்தி அளிப்பது, ஆரம்பத்தில்  ஓம் என்று ஆரம்பிப்பதாலும்.   முடிக்கும் போதும்  ''ஓம்''   என்று  உச்சரிப்பதால் தான்.

ஒரு சிஷ்யனுக்கு  ஒரு யோகி  ஒரு மந்திரம்  கற்பித்தார்.  
''டேய்  சிஷ்யா, நான் சொல்லிக்கொடுக்கும் இந்த மந்திரத்தை ரஹஸ்யமாக வைத்துக்  கொள், இது எல்லோருக்கும் தெரியாது.  ஒரு சிலர் மட்டும் தான் அறிவார்கள்.நீயும் அவர்களில் ஒருத்தன்''

 ரொம்ப பெருமையோடு சிஷ்யன் வீட்டுக்கு  போனான்.   மறுநாள்  சந்தைக்கு போனான்.  அங்கே  அநேகர்  அவனுக்கு குரு முதல் நாள்   ரஹஸ்யமாக சொல்லிக் கொடுத்த மந்திரத்தை   உரக்க  சர்வ சாதாரணமாக சொல்லிக்  கொண்டிருப்பதை கேட்டான்.  கோபத்தோடு  யோகியிடம் போனான்.

''குருவே, என்ன இது,  என்னிடம் நேற்று  இது ரஹஸ்யம், வெகு சிலருக்கு தான் தெரியும் என்று சொன்ன மந்திரத்தை இன்று குளக்கரையில் அநேகர் குளிக்கும்போது கூட   இதைச் 
 சொல்லிக்
 கொண்டிருப்பதைக்  கேட்டேனே . அது எப்படி ரஹஸ்யமாகும்?''

குரு பதில் சொல்லவில்லை.  தனது ஜோல்னா பையில் கையை விட்டு பச்சையாக ஒரு கல்லை எடுத்தார்.
 ''அடே சிஷ்யா,  இதை ஊரில்  ஜனங்களிடம் காட்டு. இதை வாங்க   யார்  எவ்வளவு கொடுப்பார்கள்  என்று தெரிந்து கொண்டு வா?.  ஒருவருக்கும் நீ   இதை விற்கக்கூடாது.  நீ வந்தபிறகு  நான் அந்த மந்திரத்தை பற்றி உனக்கு   பதில் சொல்கிறேன்'' என்று அனுப்பினார்.

சீடன் ஒரு காய்கறி காரியிடம் பச்சைக் கல்லைக்  காட்டி ''எவ்வளவு கொடுப்பே  இதுக்கு'' என்று கேட்டான்.
''நாலு கத்திரிக்கா தரேன்.  இந்த கல்லு என் பேரனுக்கு விளையாட உதவும்''
அடுத்து சில கடைக்காரர்களை படையெடுத்தான். ஒவ்வொருவரும்  அதை பார்த்து விட்டு வெவ்வேறு தொகையை  தருவதாகச் சொன்னார்கள்.
ஒரு பணக்கார  நகை வியாபாரி  அதை திருப்பி திருப்பி பார்த்தான்.   '' தம்பி, இது நல்ல  இமிடேஷன் மரகத கல்லுப்பா,   இரு நூறு  ரூபாய் தாளும்.  தரேன்''   என்றான்.
ஒரு  பாங்க்  மேனேஜர்  அந்த கல்லை பரிசோதனை செய்து விட்டு ஐநூறு  ரூபாய்  பெறும் ''
என்றார்.
ஒரு  வைர நவரத்ன  கல் வியாபாரியிடம்  சீடன் கல்லைக் காட்டினான்.  ''அருமையான கல்லுங்க  இது. இது மாதிரி  இவ்வளவு வருஷத்திலே நான் பார்த்ததேயில்லை. நீங்க  என்ன விலை சொன்னாலும் தரலாம்.  இந்த ஊர் ராஜாவிடம் கூட  இவ்வளவு பெரிய  மரகதம்  வாங்க பணம் இருக்குதுங்க  ''   என்றான்.
சீடன் யோகியிடம் ஓடினான்.  அவர் அந்த பச்சைக் கல்லை வாங்கி ஜோல்னா பைக்குள் போட்டுக்கொண்டார்.

இப்போ சொல்லுங்க குரு,  ஊரில் எல்லோருக்கும் தெரிந்த மந்திரத்தை ஏன்  நீங்க என்கிட்டே  ரஹஸ்யம்னு சொன்னீங்க. காரணம் சொல்றேன் னு சொன்னீங்க சுவாமி.''

''அதற்கு விடை தான் நீயே தெரிந்து கொண்டு வந்துவிட்டாயேப்பா.  கல்லை அதற்கு தானே உன்னிடம் கொடுத்து அனுப்பினேன்''
''அது என்ன கல் என்ன  என்று  யாருக்காவது சரியாக தெரிந்ததா? அவரவர் ஏதோ ஒரு குத்து, குருட்டு,  மதிப்பு வைத்து   நாலு கத்திரிக்காயிலிருந்து  நாட்டின் முழு செல்வம் வரை உன்னிடம் தருவதாக சொன்னார்கள் இல்லையா? யாருக்கும் சரியான மதிப்பே தெரியலை இல்லையா?''
''ஆமாம்  குருவே''
''நான் சொல்லிக்கொடுத்த மந்திரமும் அப்படித்தான்.  அதை யாரெல்லாமோ  உதட்டளவில்  உச்சரித்து மதிப்பிடுகிறார்கள்.  அதன் உண்மை மதிப்பு  விடாமல் உச்சரித்து தியானிக்கிறவருக்கு தான் தெரியும்.   அதை வெளிப்படுத்த முடியாது. அவரவர் தன்னுடைய அனுபவத்தால் தான் அதை உணரமுடியும்.''
ஆஹா  என்று வியந்து போனான்  சிஷ்யன்.  ஓம்  என்ற மந்திரத்தின்  மஹிமை அதை உணர்ந்தவருக்கு தான் புரியும், தெரியும். பிரணவ மந்திரம் என்று அதற்கு பெயரல்லவா. இறைவனைக் கட்டிப்பிடித்திழுத்து நம்மோடு இணைப்பது.


இத்துடன் இணைத்திருப்பது   ஓம் பர்வதம் என்ற  பனிக்கட்டியால் ஸ்வயம்புவாகவே  அமைந்துள்ள  கைலாச சிகர  பர்வதம். பகவான் நிச்சயம் இருக்கிறார் ஸார் ...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...