Tuesday, April 26, 2022

GREAT PHILANTHROPISTS

 கடையெழு வள்ளல்கள் -  நங்கநல்லூர்  J K  SIVAN 



நாமெல்லோரும்  இந்நாட்டு மன்னர் என்று பாரதியார் சொன்னதை அடிக்கடி ஞாபகப் படுத்துவதோடு இன்று
இன்னொன்றும் சொல்கிறேன்.  நாமும் வள்ளல்கள் தான். கொடுக்கும் மனது நமக்கும் நிறைய உள்ளது.  நம்மில் யாரவது நம்மிடம் இருப்பதை மற்றவர்க்கு கொடுக்காமல் இருக்கிறோமா?  வீட்டில் எத்தனை சாமான்கள், பொருள்கள், துணிகள், நமக்கு உபயோகம் இல்லை, கிழிந்தவை, சாயம் போனவை, சின்னதாக போனவை, மீந்து போனவை, ஊசிப்போனவை,  உடைந்தவை, ஓட்டை, இதெல்லாம் தெருவில் அப்படியே போட்டுவிடுகிறோமா?  ''இந்தாப்பா  என்று யாரையாவது கூப்பிட்டு கொடுக்கிறோமல்லவா?  இந்த குணம் யாருக்கு வரும்?  இது தானம் தர்மம் இல்லையா. வாசலில் வரும் பசுவுக்காவது இதை போடுகிறவர்கள் நம்மில் இல்லையா?

சங்கநூலான சிறுபாணாற்றுப் படையை நல்லூர் நத்தத்தனார் ஏன் ஏழே  ஏழு வள்ளல்கள் பற்றிமட்டும் சொல்லி விட்டு போய்விட்டார்? நம் போன்றவர்கள் அக்காலத்திலும் உண்டல்லவா?  ஏன் அவர்களை எல்லாம்   நத்தத்தனார்  கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்? ரொம்ப  பாரபக்ஷம் அவருக்கு.

ஏழு பேர் அப்படி என்ன செய்தவர்கள் என்று அவர்களை மட்டும் பற்றி பாடினார்? இதைப் போய், இந்த ஏழு வள்ளல் களைப் பற்றிய செய்திகளை மட்டும் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன. அது சரி, யார் அந்த ஏழு வள்ளல்கள் அவர்கள் அப்படி என்ன செய்துவிட்டார்கள்?

பேகன் - அவனிடம்  ஒரு போர்வை போர்த்திக்  கொண்டு  நந்தவனத்தில் நடந்து கொண்டிருந்தபோது  எதிரே ஒரு மயில் வந்து நின்றது.  அதன்  அழகை ரசித்துதால் , அப்போது மிகவும் குளிராக  இருந்ததால்,  அவனுக்கு  என்ன தோன்றியதோ?   ''இந்தா  இது உனக்கு'' என்று  தன் மேல் இருந்த  சால்வையை தற்கு போர்த்தி விட்டான். அது அவனுக்கு ஒரு அழகிய இறகை  பரிசளித்திருந்தால்  அது நன்றி உள்ள மயில். புலவர்  ஏனோ அதைப் பற்றி சொல்லவில்லை.?

பாரி -  பேகன் என்ன உசத்தி, நானும் தான் இப்படி மனிதர்களைத்  தவிர மற்ற ஜீவராசிகளுக்கும்  உதவுபவன். ஏன் அவனுக்கு மட்டும் தனி பெருமை?  என்று நினைக்கவில்லை. அப்போதெல்லாம் பத்த்ரிக்கைகள், போட்டோக்கள்,  வாட்ஸாப்ப் எல்லாம் இல்லை.  பேகன் வேறு காலம் பாரி வேறு காலம். இடமும் எங்கோ  தள்ளி.    

பாரி  ஒரு காட்டில் தேரில் நின்று கொண்டிருந்தான். தேர் நின்றிருந்தது.  குதிரைகளை அவிழ்த்து விட்டிருந்தான். அவை நீர் பருகி  புல் மேய்ந்து கொண்டிருந்தப்பது  எதிரே  ஒரு முல்லைக்கொடி  பாரியின் கண்ணில்  தென்பட்டது.  காற்றில் அந்த நீளமான  முல்லைக்கொடி  அங்குமிங்கும்  ஆலவட்டம்  ஆடியதைப்  பார்த்தான். அது சாய்ந்து கொள்ள ஒரு மரமோ, கொம்போ அருகில் இல்லை.  அப்போது தான் அவனுக்கு ஒரு விசித்திர எண்ணம் தோன்றி யது. ஆஹா, அருகில்  கொம்போ, மரம்  எதுவுமோ இல்லாமல் இந்த முல்லைக்கொடி  கொழுகொம்பு தேடுகிறதே.  இந்த சந்தர்ப்பத்தில் நாம்  உதவி செய்யலாமே.?என்று எண்ணினான்.   அருகில் தான்  நமது அரண்மனை.  பொடி  நடையாக  அரண்மனைக்கு நடந்தே சென்று விடலாம். கூப்பிடு தூரம் என்றாலும் யாரையும் கூப்பிட  வேண்டாமே என்று  தேரை அருகே இருந்த  வளர்ந்து வரும் முல்லைச் செடி பக்கத்தில் தள்ளி அதை அணைத்து  நிற்கும்படி நிறுத்திவிட்டு போய்விட்டான்.  முல்லைக்குத் தேர் தந்தவன் (பறம்பு மலை) ஒரு வள்ளல்.

காரி - (திருக்கோவிலூர்) ஈர நன்மொழி கூறியவன் (councilman)   இவன் எதுவும் பொருளாக  தரவில்லை. அதை விட உயர்ந்த சொற்களால் எல்லோர் மனதையும் இன்புறச்செய்தான்.  அழகான  இன்சொல் இருக்கும்போது மற்றது எதற்கு என்று நல்ல வார்த்தைகளையே எல்லோருக்கும் அள்ளித்தந்தவன். ரொம்ப கெட்டிக்கார வள்ளல்.  

ஆய் அண்டிரன்  ஒரு வள்ளல். பொதிகை மலையைச் சேர்ந்த வேளிர்  வம்சம்.   நான்  தென் காசி செல்லும்போது  ஆய்க்குடி என்ற  அருமையான ஊருக்கு சென்றேன். அது தான்  அண்டிரன் உருவாக்கிய நகரம், அவன் தலைநகரம். இன்றும் அவன்   பெயர் தாங்கி நிற்கிறதே.   மலைபகுதி என்பதால்  அவனிடம்   நிறைய  யானைகள் உண்டு.  யானைகள் அதிகம் இருந்ததால் அவனால்  தானம் கொடுக்க முடிந்தது.

 நாம் யாரையாவது கௌரவிக்க  பொன்னாடை என்று பளபளவென்று ஒரு துணியை போர்த்துகிறோமே அது போல் ஆய் அண்டிரன்  ஒரு புலவருக்கு உண்மையான புலித்தோலை   எடுத்து போர்த்தி   ஒரு யானையையும்  பரிசளித்தவன்.    ஆனந்தமாக அந்த புலவர்  ஏணிச்சேரி முடமோசியார் என்பவர்  என்ன பாடினார்? 

" மன்னா! நான் சோழ நாட்டில் பிறந்தவன். எனக்கு எந்தவிதமான குறையும் கிடையாது. நான் உன்னை பார்த்துவிட்டுச் செல்லலாம் என்றுதான் வந்தேன். உன்னுடைய சிறப்பம்சங்களைப் பற்றி நிறைய பேர் பாடியதால், நீ எப்படி இருப்பாய் என்று உன்னுடன் பழகிவிட்டுச் செல்லலாம் என்றுதான் வந்தேன் . எனக்கே நீ இவ்வளவு பொருள் கொடுத்துள்ளாயே !! அப்படியெனில், உண்மையில் வறுமையில் வாடி வருபவர்களுக்கு நீ எவ்வளவு பொருள் தருவாய் ??"

'பொதிய மலை' என்றாலே  வெளியே தெரியாமல் பல  விநோதங்கள்,  இரகசியங்களும், அதிசயப் பொருட்களும் பொதிந்து கிடக்கும் மலை '' என்று பெயர். அதில் ஒன்று தான்  நீல நிற நாகத்தின் சட்டை.  அந்தப் பாம்பின் சட்டையை  வைத்த்திருப்பவனிடம்  அபரிமிதமாக  செல்வம் சேரும்,  வற்றவே வற்றாது என்பது நம்பிக்கை. 
ஆய் அண்டிரன் தன்னிடம் இருக்கும் யானை, செல்வங்கள் எல்லாம் கொடுத்துவிட்டான் என்பதால் அவனுக்கு ஒரு நீல நாக சட்டை யை  ஒரு முனிவர்  தந்தார். இவனிடம் செல்வம் பெருகினால் எல்லோருக்கும் பலன் என்று நினைத்தார்.  ஆய்  அண்டிரன் ''ஆஹா  இது என்னிடம் இருப்பதை விட  சிவபெருமானிடம் இருந்தால்  உலகமே செழிக்குமே '' என்று    திருக்குற்றால நாதர்  பாதத்தில் வைத்து விட்டான்.  அவனிடம் இருப்பதெல்லாம் கொடுத்தபின்  ஒருநாள்  ''இனி என்னிடம்  புலவர்களுக்கு  யாசகர்களுக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே, இனி இந்த உயிரால் என்ன பயன்'' என்று மரணத்தை தழுவினான்.    முடமோசியார்  அவன்   மரணம் பற்றி அறிந்து ஒரு பாடல் பாடினார்  அதில்  ''ஆய்  அண்டிரன் விண்ணெய்தியதால் நம்மை எல்லாம் இந்த பூமியில் நினைத்து  மழையைப்  பொழிந்து சுபிக்ஷமாக வாழ  அருள்கிறான்''  என்கிறார் 

அதியமான் -  அவன்  ஊர் தகடூர்.   கோட்டை கொத்தளத்துடன் வாழ்ந்த  குட்டி ராஜா அவனுக்கு பெரிய தாராள மான மனசு.இல்லை என்றால் வள்ளல் ஆக  முடி யுமா?  அவன் தாராளமானதுக்கு, பெரிய மனது பற்றி ஒரு சின்ன கதை சொல்ல வேண்டாமா ? அவனுக்கு தமிழ் மேல் அளவற்ற  பற்று,  தாகம்.   அடிக்கடி அவனைத் தேடி புலவர்கள், கவிகள்  எல்லோரும் வருவார்கள். கை நிறைய பரிசுகள் கொடுத்து அனுப்புவான்.  ஒளவை அடிக்கடி அதியமானை த்தேடி வருவாள்.  அவளுக்கு அவன் தமிழ் தாகம் தெரியும். அவனுக்கு ஒளவையின் கவித்தைத்திறன் ரொம்ப பிடிக்கும். ஆகவே  அவன் நாளைக்கு ஒளவை வருவாளே ,அந்த நெல்லிக் கனியை  அவளுக்கு கொடுத்து அவள் உண்டால்  நீண்டகாலம் தமிழும் வாழுமே  என்ற எண்ணம்.  அவளுக்கு அதை கொடுத்தான்.  அவனிடம் இருந்த நெல்லிக்காய் சாதரணமானது அல்ல. சாப்பிட்டால்  நிச்சயம்  நூறு வயதுக்கு மேல்  வாழலாம் என்று காரண்டீ இருந்தது.  நெல்லிக்  காய் சாறு  கொரோனா கிருமி நாசினியாம். யாரோ  வாட்சப்பில் சொன்னது நிஜம் தானோ?   ஒரே ஒரு நெல்லிக்காய் இப்படி  நமக்கு  கிடைத்தால் நாம் என்ன செய்வோம். ரெண்டாம் பேருக்கு சொல்லாமல் டபக்கென்று விழுங்கி விட்டு  எத்தனை வருஷம் ஆகி விட்டது என்று எண்ணு வோம்?  

''ராஜா  நீங்கள் ஏன் அதை சாப்பிடவில்லை ?'' என்று மந்திரி  காரணம் கேட்டபோது, அந்த நெல்லிக் கனியைத் தான் உண்பதை விட   ஔவை உண்டால் ஔவையுடன் சேர்ந்து தமிழும் செழித்துச் சிறக்கும் என்று கூறினான்  அதியமான்.  அதியமான் ஒரு குட்டி ராஜ்யத்துக்கு ராஜா. அதிக படைபலம் இல்லை.    எதிரிகள்  படையெடுத்து எந்த நேரமும்  அவன் ராஜ்ஜியம் போய்விடும், அவனும் கொல்லப்படுவான்.  அதியமான் இப்படி கவலையில் மனநிம்மதி இல்லாமல்  இருந்தான்.  மனநிம்மதி கிடைக்கவும், பகை மன்னர்களால் ஆபத்து எதுவும் நேராமல் இருக்கவும் என்ன செய்யலாம் என்று ராஜ குருவையும் அமைச்சர் பிரதானிகளையும்  கலந்து ஆலோசித்தபோது   படைபலத்தையும் மீறி தெய்வ  சக்தி துணை இருந்தால் நல்லது . காவல் தெய்வமான கால பைரவர்தான் சரியான துணை  என்று சொன்னார்கள்.  

சிவாலயங்களில் ஈசான்ய மூலையில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் கால பைரவர்தான் தன்னையும் காப்பாற்றும் தெய்வம் என்று அறிந்ததும்  அதியமான்  கால பைரவருக்கு ஓர் ஆலயம் கட்ட  முனைந்தான். அமைச்சர்களில் சிலரை வீரர்களுடன் காசிக்கு அனுப்பி, கால பைரவர் சிலையை கொண்டு வரச்  செய் தான். கோயில் கட்டி ரெடியாக இருந்தது.  விக்ரஹம்  வந்தது. பிரதிஷ்டை ஆயிற்று.  
ஆலயத்தில்  நவக்ரஹங்களின்  சக்தி  இருக்க வேண்டும் என்று அவற்றையும் பிரதிஷ்டை செய்தான் அதியமான்.  தகடூரை காக்க  காலபைரவர் கையில்  திரிசூலம், வாள் சகிதம் அருள் பாலிக்கிறார்.   இன்றும்  தரிசிக்கலாம்.   ஆலய சிற்பங்கள் பழமை வாய்ந்தவை.
 காசிக்கு அடுத்து தனிச் சந்நிதியில் இருக்கும் கால பைரவர்  தகடூரில் தான்.   அதற்கு தட்சிண காசி கால பைரவர் ஆலயம் என்று பெயர். முக்தி க்ஷேத்திரம்.   தருமபுரி,  கர்நாடகா, கேரளா போன்று  பல இடங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வருகிறார்கள்.

நள்ளி - துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன் என்று இவனைப் புலவர்கள் பாடுகிறார்கள். . நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன்  என்கிறார்கள். அர்த்தம் என்ன?   அவனை நாடி வந்தவர்கள்,புலவர்கள், மற்ற நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் தந்து மகிழ்த்தியவன். இதற்கு  தாராள மனம் நிறைய பெரிதாக  வேண்டுமே.

ஓரி -(கொல்லிமலை) தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். கூத்தற்கு  நாடு கொடுத்தான் என்பார்கள்.  நடனமாடியவர்களுக்கு  நிலம் தானமாக அளித்தவன்.   கொல்லி
மலை நாட்டை ஆண்டவன். தன்னிடம் பொருள் கேட்டு வருபவர்கள் இனி யாரிடமும் கேட்க தேவை ஏற்படாத அளவில் இல்லறத்திற்கு பொருள் கொடுத்தான்.

கடை ஏழு வள்ளல்கள்  என்று  7 பேரை பற்றி  எங்கள் தமிழ் வாத்தியார்  கோ. கணபதி  ஒரு  மர  நாற்காலியில் தூங்கு மூஞ்சி மரத்தடியில் சொல்லிக் கொடுத்த  போது  அதை புரிந்து கொள்ளும் வயதில்லை. அதன் அருமை தெரியவில்லை.  ஏதோ பாடம், மனப்பாடம் பண்ண  வேண்டியது. இல்லையென்றால் அடிப்பார் என்று தான் தெரிந்தது. 
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...