Sunday, April 24, 2022

NATARAJA STHOTHRAM - 1

 
நடராஜ ஸ்தோத்ரம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


M K T   பாகவதர்  பாடிய ''சிதம்பர நாதா'' என்ற  அபூர்வ  ஹேமாவதி ராகத்தில் அமைந்த  பாட்டை  எவ்வளவு தடவை கேட்டாலும் எத்தனையோ வருஷம் ஓடிப்போய்விட்டாலும் இன்னும் மனதை மயிலிறகால் தடவி கொடுக்கிறது. செவியில் அமுதமாக பாய்ந்து ரீங்காரம் பண்ணிக்கொண்டே இருக்கிறது.   லிங்க்  இணைத்திருக்கிறேன் கேளுங்கள்  https://youtu.be/aI9AFL7Rg_0 

  பாகவதர் அழகான ஒரு ஆண்மகன். உயரமானவர். அவரது கழுத்தை தொடும் கிராப் அந்தக்கால சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல்.  ரிக்ஷா , குதிரை வண்டி ஓட்டுபவர் கூட  கர்நாடக ராக சினிமா பாட்டு பாடிக்கொண்டே  வண்டி ஓட்டுவார்,  பாதிப்பேருக்கு மேல் ஜில்பா ஹேர் கட் . பாகவதர் ஸ்டைல்.  புனுகு வைத்துக் கொள்ள வசதி இல்லாதவர்கள் பெரிய ஒரு ரூபா நாணய அளவு ரவுண்ட்  குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டிருந்த காலம்.  சிதம்பர நாதா பாட்டை நானும் பாடுவேன்.  இன்று காலை கூட  பாடினேன்.

நடராஜ  ஸ்தோத்ரம்  யோகசூத்ரம் எழுதிய  பதஞ்சலி ரிஷி இயற்றி சிதம்பரத்தில் நடராஜாவை தரிசிக்க  நந்தி மறுத்த   போது  சிவனை போற்றி பாடியது.  இந்த ஸ்தோத்ரம்  நடராஜாவுக்கு பிடித்து முனிவருக்கு ஆனந்த நடனம் ஆடி தரிசனம் கொடுக்கிறார்.  பலஸ்ருதியோடு பத்து ஸ்லோகங்களை கொண்டது:   சுருக்கமாக  அர்த்தம் சொல்கிறேன்.

सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्
पतञ्जलि दृगञ्जन मनञ्जन मचञ्चलपदं जनन भञ्जन करम् ।
कदम्बरुचिमम्बरवसं परमम्बुद कदम्ब कविडम्बक कगलम्
चिदम्बुधि मणिं बुध हृदम्बुज रविं पर चिदम्बर नटं हृदि भज ॥ १॥

sadañcita-mudañcita nikuñcita padaṁ jhalajhalaṁ-calita mañju kaṭakaṁ |
patañjali dr̥gañjana-manañjana-macañcalapadaṁ janana bhañjana karam |
kadambarucimambaravasaṁ paramamambuda kadamba kaviḍambaka galam
cidambudhi maṇiṁ budha hr̥dambuja raviṁ para cidambara naṭaṁ hr̥di bhaja || 1 ||

ஸத³ஞ்சித-முத³ஞ்சித நிகுஞ்சித பத³ம் ஜ²லஜ²லம்-சலித மஞ்ஜு கடகம் ।
பதஞ்ஜலி த்³ருக³ஞ்ஜன-மனஞ்ஜன-மசஞ்சலபத³ம் ஜனந ப⁴ஞ்ஜன கரம் ।
கத³ம்ப³ருசிமம்ப³ரவஸம் பரமமம்பு³த³ கத³ம்ப³ கவிட³ம்ப³க க³லம்
சித³ம்பு³தி⁴ மணிம் பு³த⁴ ஹ்ருத³ம்பு³ஜ ரவிம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 1 ॥

இடது பாதத்தை மேலே தூக்கி நின்று  உலகையே ஆட்டிவைத்து அசைந்தாட வைப்பவரும்,  அனந்த நடமிடுபவரும்  காலனைச் சம்ஹாரம் செய்த காலகாலனும், வணங்கும் அன்பர்களைக் காக்க சூலம் தாங்கி நிற்பவரும், திருபுராந்தகனை  சம்ஹாரம் செய்தவரும், மனக்கவலைகளைப் போக்கி அருள்செய்பவரும், கருணையே வடிவானவரும், கபாலம் ஏந்தி நிற்பவருமான சிதம்பரப் பெருமானைப் போற்றுகிறேன்.  ஆஹா  அந்த  தூக்கிய பாதத்தின் தண்டை கொலுசுகள் கிணுகிணு வென ஒலிக்கும் சப்தம்  வேதத்தின் நாதம்.  பிறப்பு இறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்  ஆட்டத்திற்கு என்ற  ஓசை.  பதஞ்சலி கொடுத்து வைத்தவர் தரிசனம் பெறுவதற்கும் ஆடலரசன் தாண்டவ ஒலி  கேட்பதற்கும். நீல வானமே ஆடை,  கதம்ப வன பொலிவு.   கார்மேகங்கள் சூழ்ந்தது போல் ஹாலஹால விஷம் நிறைந்த  தொண்டை. ஞானக்கடல். பக்தர்கள் மனத்தில் வாசம் செய்யும் மஹேஸ்வரா உன்னை நமஸ்கரிக்கிறேன். 

हरं त्रिपुर भञ्जनं अनन्तकृतकङ्कणं अखण्डदय मन्तरहितं
विरिञ्चिसुरसंहतिपुरन्धर विचिन्तितपदं तरुणचन्द्रमकुटम् ।
परं पद विखण्डितयमं भसित मण्डिततनुं मदनवञ्चन परं
चिरन्तनममुं प्रणवसञ्चितनिधिं पर चिदम्बर नटं हृदि भज ॥ २॥

haraṁ tripura bhañjana-manantakr̥takaṅkaṇa-makhaṇḍadaya-mantarahitaṁ
viriñcisurasaṁhatipurandhara vicintitapadaṁ taruṇacandramakuṭam |
paraṁ pada vikhaṇḍitayamaṁ bhasita maṇḍitatanuṁ madanavañcana paraṁ
cirantanamamuṁ praṇavasañcitanidhiṁ para cidambara naṭaṁ hr̥di bhaja || 2 ||


ஹரம் த்ரிபுர ப⁴ஞ்ஜன-மனந்தக்ருதகங்கண-மக²ண்ட³த³ய-மந்தரஹிதம்
விரிஞ்சிஸுரஸம்ஹதிபுரந்த⁴ர விசிந்திதபத³ம் தருணசந்த்³ரமகுடம் ।
பரம் பத³ விக²ண்டி³தயமம் ப⁴ஸித மண்டி³ததனும் மத³னவஞ்சன பரம்
சிரந்தனமமும் ப்ரணவஸஞ்சிதனிதி⁴ம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 2 ॥

அவன் ஹரன். சிதம்பரேசன். நெற்றியில் ஒளிவீசும் கண்களைக் கொண்டவன். வியாக்ரபாதர், பதஞ்சலி போன்ற மகரிஷிகளால் வில்வம் போன்ற பூஜாதிரவியங்களால் அர்ச்சிக்கப்படுபவன்.  திரிபுராந்தகன் போன்ற அசுரர்களை முப்புரத்தை, ஸம்ஹாரம்  செய்தவன்.  அனந்தன் எனும்  சர்ப்பத்தை கங்கணமாக  தரித்தவன்.எல்லையற்ற கருணை கொண்டவன்.  இந்திராதி தேவர்கள், பிரம்மாவால் தொழப்படுபவன்.  சந்திர சூடி.  புலித் தோலினைத் தன் ஆடையாக உடுத்தவன். காலனை காலால் உதைத்தவன்.   மன்மதனை தீக்கிரையாக்கியவன்.  ஓம் எனும் மந்திரத்தில் அகப்படும்  பரமேஸ்வரா உன்னை தியானிக்கிறேன். 

अवन्तमखिलं जगदभङ्ग गुणतुङ्गममतं धृतविधुं सुरसरित्-
तरङ्ग निकुरम्ब धृति लम्पट जटं शमनदम्भसुहरं भवहरम् ।
शिवं दशदिगन्तर विजृम्भितकरं करलसन्मृगशिशुं पशुपतिं
हरं शशिधनञ्जयपतङ्गनयनं परचिदम्बर नटं हृदि भज ॥ ३॥



avantamakhilaṁ jagadabhaṅga guṇatuṅgamamataṁ dhr̥tavidhuṁ surasarit-
taraṅga nikurumba dhr̥ti lampaṭa jaṭaṁ śamanadambhasuharaṁ bhavaharam |
śivaṁ daśadigantara vijr̥mbhitakaraṁ karalasanmr̥gaśiśuṁ paśupatiṁ
haraṁ śaśidhanañjayapataṅganayanaṁ para cidambara naṭaṁ hr̥di bhaja || 3 ||

அவந்தமகி²லம் ஜக³த³ப⁴ங்க³ கு³ணதுங்க³மமதம் த்⁴ருதவிது⁴ம் ஸுரஸரித்-
தரங்க³ நிகுரும்ப³ த்⁴ருதி லம்பட ஜடம் ஶமனத³ம்ப⁴ஸுஹரம் ப⁴வஹரம் ।
ஶிவம் த³ஶதி³க³ந்தர விஜ்ரும்பி⁴தகரம் கரலஸன்ம்ருக³ஶிஶும் பஶுபதிம்
ஹரம் ஶஶித⁴னஞ்ஜயபதங்க³னயனம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 3 ॥

சதானந்தத்தில்  சதா  ஆனந்தத்தில், தாண்டவமாடும் சிற்சபேசன் நடராஜன்.  நம்மால் புரிந்து கொள்ள  முடியாத  உயர்ந்த ப்ரம்மம் .விரித்த செஞ்சடையாட, விரி கமல நயனமாட சந்திரனைச் சூடியவன். கங்கையை முடியில்  அணிந்தவன். மான் மழு வேந்திய மஹேசன். அக்னி ஸ்வரூபனே  உன்னை நமஸ்கரிக்கிறேன். 

अनन्तमहसं त्रिदशवन्द्य चरणं मुनि हृदन्तर वसन्तममलम्
कबन्ध वियदिन्द्ववनि गन्धवह वह्निमख बन्धुरविमञ्जु वपुषम् ।
अनन्तविभवं त्रिजगन्तर मणिं त्रिनयनं त्रिपुर खण्डन परम्
सनन्द मुनि वन्दित पदं सकरुणं पर चिदम्बर नटं हृदि भज ॥ ५॥

anantanavaratnavilasatkaṭakakiṅkiṇijhalaṁ jhalajhalaṁ jhalaravaṁ
mukundavidhi hastagatamaddala layadhvanidhimiddhimita nartana padam |
śakuntaratha barhiratha nandimukha bhr̥ṅgiriṭisaṅghanikaṭaṁ bhayaharam
sananda sanaka pramukha vandita padaṁ para cidambara naṭaṁ hr̥di bhaja || 4 ||

அனந்தனவரத்னவிலஸத்கடககிங்கிணிஜ²லம் ஜ²லஜ²லம் ஜ²லரவம்
முகுந்த³விதி⁴ ஹஸ்தக³தமத்³த³ல லயத்⁴வனிதி⁴மித்³தி⁴மித நர்தன பத³ம் ।
ஶகுந்தரத² ப³ர்ஹிரத² நந்தி³முக² ப்⁴ருங்கி³ரிடிஸங்க⁴னிகடம் ப⁴யஹரம்
ஸனந்த³ ஸனக ப்ரமுக² வந்தி³த பத³ம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 4 ॥

அவனது தண்டை கங்னத்தில் பூட்டிய  சிறு நாத  நவ மணிகள் ஒலிக்கும் திவ்ய சப்தம்  வேத மந்த்ரங்கள். உனது நடனத்துக்கேற்ப  வாத்தியம் இசைப்பவர்  மஹா விஷ்ணு.  உன்னுடனே  கோவிந்தராஜனாக தில்லையில் உள்ளவர்  அல்லவா?  உன் அசைவுக்கேற்ப  டமருகம் ஒலிக்கிறது.  நந்தி,  ஸ்ரிங்கி,  ரீதி,   பிரிங்கி, ப்ரம்மா, சுந்தர், சனகர் போன்றவர்கள் ஆனந்திக்க,  கார்த்திகேயன் தனது மயில் பூட்டிய ரதத்திலேறி வந்து கண்டு களிக்கிறான். எண்ணற்ற  பூத, சிவகணங்கள்  ஆடிப்பாடி  மகிழ்கின்றனர். அதுவும்  ஆருத்ரா தரிசனத்தன்று  சபாபதே ,உன்னை நமஸ்கரிக்கிறேன்.

अचिन्त्यमलिवृन्द रुचि बन्धुरगलं कुरित कुन्द निकुरम्ब धवलम्
मुकुन्द सुर वृन्द बल हन्तृ कृत वन्दन लसन्तमहिकुण्डल धरम् ।
अकम्पमनुकम्पित रतिं सुजन मङ्गलनिधिं गजहरं पशुपतिम्
धनञ्जय नुतं प्रणत रञ्जनपरं पर चिदम्बर नटं हृदि भज ॥ ६॥

anantamahasaṁ tridaśavandya caraṇaṁ muni hr̥dantara vasantamamalam
kabandha viyadindvavani gandhavaha vahnimakha bandhuravimañju vapuṣam |
anantavibhavaṁ trijagadantara maṇiṁ trinayanaṁ tripura khaṇḍana param
sananda muni vandita padaṁ sakaruṇaṁ para cidambara naṭaṁ hr̥di bhaja || 5 ||

அனந்தமஹஸம் த்ரித³ஶவந்த்³ய சரணம் முனி ஹ்ருத³ந்தர வஸந்தமமலம்
கப³ந்த⁴ வியதி³ந்த்³வவனி க³ந்த⁴வஹ வஹ்னிமக² ப³ந்து⁴ரவிமஞ்ஜு வபுஷம் ।
அனந்தவிப⁴வம் த்ரிஜக³த³ந்தர மணிம் த்ரினயனம் த்ரிபுர க²ண்ட³ன பரம்
ஸனந்த³ முனி வந்தி³த பத³ம் ஸகருணம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 5 ॥


சிதம்பரேஸா , நீ  அனாதி நாதன்.  ஆதியந்தம் இல்லாதவன். தேவாதி தேவர்கள் உன் பாதத்தை  வணங்கி தொழுகிறார்கள்.  நிஷ்களங்கமானவன்.  யோகிகள் ரிஷிகள், மஹான்கள், முனிவர்கள் ல்போற்றி உள்ளத்தே வைத்து பூஜிக்கப்படுபவன். ஐம்பூதங்கள், சந்திரன்,ஆத்மன் சூரியன் ஆகியவர்களால் உருவானவன். மூவுலகும் போற்றி வணங்கும் தேவாதி தேவன்.  சநந்தர் போன்ற ரிஷிகள் மேல் பிரியமானவன்.

acintyamalivr̥nda ruci bandhuragalaṁ kurita kunda nikurumba dhavalam
mukunda sura vr̥nda bala hantr̥ kr̥ta vandana lasantamahikuṇḍala dharam |
akampamanukampita ratiṁ sujana maṅgalanidhiṁ gajaharaṁ paśupatim
dhanañjaya nutaṁ praṇata rañjanaparaṁ para cidambara naṭaṁ hr̥di bhaja || 6 ||

அசிந்த்யமலிவ்ருந்த³ ருசி ப³ந்து⁴ரக³லம் குரித குந்த³ நிகுரும்ப³ த⁴வலம்
முகுந்த³ ஸுர வ்ருந்த³ ப³ல ஹந்த்ரு க்ருத வந்த³ன லஸந்தமஹிகுண்ட³ல த⁴ரம் ।
அகம்பமனுகம்பித ரதிம் ஸுஜன மங்க³லனிதி⁴ம் க³ஜஹரம் பஶுபதிம்
த⁴னஞ்ஜய நுதம் ப்ரணத ரஞ்ஜனபரம் பர சித³ம்ப³ர நடம் ஹ்ருதி³ ப⁴ஜ ॥ 6 ॥

ஹரன் மனிதனின் எண்ணத்தால் அறிய வொண்ணாதவன் . அவன் தொண்டையில்  உள்ள ஹாலஹால  விஷம் வெளியே  கருவண்டுக் கூட்டம் போல்  கருமை படர்ந்து தோன்றுகிறதே.  அவன் நிறமோ அழகிய  குந்த மலர்கள்  கொத்தாக  இருப்பது போன்ற  வெண்ணிறமாக  ஜொலிக்கிறது. பல அசுரர்களை அழித்த  விஷ்ணு, இந்திரன், மற்றும்  ப்ரம்மாதி தேவர்கள்  வணங்கும் ஒளி படைத்த  பொன்னார் மேனியனே,  நாகாபரணனே,  அஞ்சா நெஞ்சம் படைத்த ஹரனே ,  ரதியின் மேல்   இரக்கம் கொண்டவனே, அதனால் அல்லவோ  உமையினால்  மதன் உயிர்பெற்று அநங்கனானான். நன்மை ஒன்றையே  செய்வதால் தானே  சம் கரோதி சங்கரன்  என்று பெயர் பெற்றவன்.  கஜாசுரனை வதம்  செய்தவனே.  அர்ஜுனனால் போற்றப்பட்டவனே. பக்தர்களை காக்கும்  பெம்மானே.  உன்னை நமஸ்கரிக்கிறேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...