Friday, December 1, 2017

KALAMEGAM

ரெண்டு சிலேடைகள்.  J.K. SIVAN 

​​
காளமேகப் புலவர்
​ ​
அதிர்ஷ்டக் காரர்.   அவர் புலவராக வேண்டும் என்று நினைத்துக் கூட பார்க்காதவர்.  திடீர் புலவரானவர். அது கூட மற்றொருவன் முட்டாள் தனமாக இழந்த அதிர்ஷ்டம் அவரை தேடி வாயில் நுழைந்தது.

சக்தி
​ உபாசகன் வாக்கு பலிக்கும் என்பார்கள்.  ஆசுகவியாக மதிக்கப்பட்டவர் காளமேகம். அதே சமயம் உயர்ந்த கலைஞானம் அவரிடம் இருந்தது. சிலேடை  என்ற  இரு பொருள் அலங்கார சொற்கள் அவர் பாடல்களில் பரிமளித்தது.  இன்று ஒரு சில சிலேடைகளை சொல்கிறேன்.  நான்  ரசித்தவை.​


ஆமணக்கு
​  என்பது விளக்கெண்ணெய் தயாரிக்கும் ஒரு தாவரம். அதன்  விதைகள் காய்ந்து அதிலிருந்து தான் எண்ணெய் தயாராகும்.  அந்த ஆமணக்கு  ஒரு  யானை போன்றது.  எப்படி அய்யா  மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்  என்று என்னை கேட்கக்கூடாது. நேராக அதோ காளமேகம் நிற்கிறார் அவரைக் கேட்கவேண்டிய கேள்வி. 

உங்களுக்காக நானே கேட்டேன்.  அவர் என்ன பதில் சொன்னார்?  வழக்கம்போல் .கவிதை ரூபத்தில் தான் 


முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரு
​ம் 

​கொ ​
த்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கு
​ம்  

​தே​
மணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையி
​ல்  

​ஆ​
மணக்கு மால்யானை யாம்.
​''

புரிந்திருக்காதே?  விளக்குகிறேன்.​

ஆமணக்குச் செடியில் 
​அதன் விதையில் ஆ
மணக்கு
​  கொட்டை முத்து போல் இருக்கும் அல்லவா. 

 
​அந்த செடி  ​
ஊன்றுகோல் போன்ற
​  தனது  கிளையை, கொம்பை,  காற்றில் ஆட வைக்கும். அசைக்கும். ​
 தன் கொம்பை அசைக்கும். 
​  அதன்  உள்ளே இருக்கும்  
துளை 
​யினில் 
மூரித்தண்டு 
​வளரும்.​
​  வளர்ந்து பெரிதாகும் 
வளரும். 
​ கொத்து ​
கொத்தாக இருக்கும் ஆமணக்குக் குலையை
​ கிளை மேலே தாங்கி  அதன் பளுவால் தலையை சாய்ப்பது போல்  தாழ்வாக்கும்.  இது தான் யானையா?  பேத்தல்.  இல்லை அரைகுறையாக முடிவுக்கு வரவேண்டாம்.

யானை முத்துப்போன்ற தன் வெண்ணிறக் கொம்பை (தந்தத்தை) அசைக்கும்.
​ அந்த இரண்டு தந்தங்களுக்கு நடுவே, இடையே, 
 
​உள்ள இடத்த்தில், 
தன் துதிக்கைத் தண்டை ஏந்திக்கொண்டு வரும். 
​ துதிக்கையில் மூச்சு விட துளை இருக்கும். வாழை மரத்தை பார்த்து விட்டால்  துதிக்கையை தூக்கி  ​
கொத்தாகப் பழுத்திருக்கும் வாழை
​க்  ​
​குலையைச் 
சாய்க்கும்.
​ சௌகரியமாக பழத்தை காலி செய்துவிடும்.  இப்போது பாடலைப் படியுங்கள் ரெண்டுக்கும் பொருத்தம் தெரியும்.​
​ ​

​யானையை  காளமேகம் விடுவதாக இல்லை .  இன்னொரு சந்தர்ப்பத்தில்,  யானையையும்  அது தின்னும் வைக்கோலையும்  ஒன்றாக  பார்த்தார்.  எப்படி ?

​வைக்கோலை பிரிக்க, அதை களத்தடி கொண்டு சென்று  அங்கே வீசி அடிப்பார்கள்.  நெற்கதிர்,மணிகள் உதிர்ந்து வெறும் வைக்கோல் தனியாக பிரியும்.  பின்னர் வைக்கோலை மலைபோல் குவித்து  போராகும். கோட்டைக்குள் போர்  போராக சேமித்து வைக்கப்படும்.  பொன்வண்ணத்தில் அழகாக காட்சி அளிக்கும். 

யானை போர்க்களத்தில் எல்லோரையும் வாரி வீசும், அடித்து நொறுக்கும். போர்க்களத்தில் வேலை முடிந்தபிறகு யானையை  கட்டுத்தறியில்  கோட்டைக்குள் கொண்டு சென்று கட்டிவிடுவார்கள். போர்க்களத்தில்  யானை சிறப்போடு  காணப்படும்.


​​
களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்போ

​போ​
ரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையி
​ல் 

​வைக்கோ
லும் மால்யானை யாம். 

​இன்றைக்கு ரெண்டு போதும்.  மீதி நாளைக்கோ இன்னொரு நாளோ வரும்.

 ​


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...