Thursday, December 21, 2017

KUNTHI PRAYER



                                                                                                                                                                                                                                                    
ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்காந்தம்      J.K. SIVAN 

                  குந்தியின் பிரார்த்தனை

namasye puruùaü tvà.a.adyamã÷varaü prakçteþ param |
alakùyaü marvabhåtànàmantarbahiravasthitam || 1 ||


பரிபூர்ண  பரமாத்மா, தேவாதி தேவா, சர்வ பிரபஞ்ச காரணா,  எங்கும் நிறை மனமோஹனா, 
வாசுதேவா,  உன்னை கையெடுத்து கும்பிடும் பாக்யம் பெற்றதற்காகவே உன்னை வணங்குகிறேன்  கிருஷ்ணா''  என்று ஆரம்பிக்கிறாள்  குந்தி தேவி.

màyàjavanikàcchannamaj¤àdhokùajamavyayam |
na lakùyase måóhadç÷à naño nàñyadharo yathà || 2 ||

2 நானோ எழுத்து வாசனை அற்ற, அஞ்ஞானி, கல்விஅறிவற்றவள்,  மாயத்தோற்றம் கொண்டு மதி மயக்கும் கண்ணா, கபட  நாடக சூத்ரதாரி, உன்னை  அறிந்து கொள்ளும் திறன் இல்லாதவள் நான்.

tathà paramahaüsànàü munãnàmamalàtmanàm |
bhaktiyogavidhànàrthaü kathaü pa÷yema striyaþ || 3 ||

அப்பனே, உன்னை  சகலமும் உணர்ந்த ஞானிகளே கண்டறியமுடியாதபோது.  மறையோதும் ஞானியர் கண்ணுக்கே மறைந்து இருப்பவன் நீ, என் போன்ற  எளிய பேதைக்கு, உன்னைப்  புரியுமா. உன் மீது பக்தி ஒன்றையே எப்போதும் செலுத்தி  உன் அருள் கிடைப்பதற்கே  பெரும் பாக்கியம்  செயதிருக்கவேண்டும் நான். 

kçùõàya vàsudevàya devakãnandanàya ca |
nandagopakumàràya govindàya namo namaþ || 4 ||
தேவகி  மைந்தா வாசுதேவ, யசோத நந்தனா, நந்தகுமாரா, கோவிந்தா,  உன்னை திரும்ப திரும்ப விழுந்து வணங்குவதே நான் செய்ய முடிந்தது கண்ணா

namaþ païkajanàbhàya namaþ païkajamàline |
namaþ païkajanetràya namaste païkajàïghraye || 5 ||

பத்மநாபா, எண்ணற்ற எனது நமஸ்காரங்கள், தாமரை வனமாலி  வாசுதேவா பத்மலோசனா, தாமரைதிருவடிகளை தொழுகிறேன்.

vipadaþ santu naþ ÷a÷vattatra tatra jagadguro |
bhavato dar÷anaü yatsyàdapunarbhavadar÷anam || 6 ||

எனக்கு துன்பம் தொடரட்டும், துயரம் நீடிக்கட்டும், உன்னை அவ்வப்போது நினைப்பேன் உன் அருள் பார்வை என்மீது படுமே என்ற நம்பிக்கை. அதுவே எனக்கு ஸ்வர்க்கம், மோக்ஷம், அழியாத செல்வம்.

janmai÷varya÷ruta÷rãbhiredhamànamadaþ pumàn |
naivàrhatyabhidhàtuü vai tvàmaki¤canagocaram || 7 ||

ஆஹா  என்னே உன் கருணை.  பரம ஏழை குசேலன், நூறுமுறை தவறிழைத்த  சிசுபாலன் போன்றோருக்கும் அருள்பாலித்த தெய்வமே,   உயர்குல மமதை  கொண்ட ஜராசந்தன், கோடானுகோடி எண்ணற்ற செல்வம் நிறைந்த துரியோதனர்களுக்கு,  கர்வம் நிறைந்த  சகுனிகளுக்கு  உன்னை அறிந்து பயன்பெற தெரியவில்லையே. நீ அவர்களுக்கு எட்டாத கிட்டப்பா  அல்லவா ? வெறும் கல்வி பாண்டித்யம் மட்டும் இருந்து என்ன பயன்.  வெறும் ஏட்டுச்சுரைக்காய்.

namo.aki¤canavittàya nivçttaguõavçttaye | 
àtmàràmàya ÷àntàya kaivalyapataye namaþ || 8 ||

தீனர்களுக்கு  தானாகவே நேரே சென்று  அருள் புரிந்து பாவம் தீர்த்து  மோக்ஷம் தரும்  தீன பந்து,  உன்னை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நீயே ஏழைகள்  எங்களது பெரும் செல்வம்.

manye tvàü kàlamã÷ànamanàdinidhanaü vibhum |
samaü carantaü sarvatra bhåtànàü yanmithaþ kaliþ || 9 ||

அழகிய நீல வண்ணா, நீ  ஆதி அந்தமில்லாத அருட்பெருஞ்சோதி.  காலகாலன்.  சர்வ வியாபி. ஓயாமல் ஒழியாமல் உதவும் ஏழை பங்காளன். 

na veda ka÷cidbhagavaü÷cikãrùitaü
tavehamànasya nçõàü vióambanam |
na yasya ka÷ciddayito.asti karhicid
dveùya÷ca yasmin viùamà matirnçõàm || 10 ||

 நீ சாதாரணனாக தோன்றினாலும், அறிவுக்கெட்டாதவன்.  வேண்டியது வேண்டாதது இல்லாதவன். ஆனால் என்போல் வேண்டுபவர்கட்கெல்லாம்ல் அருள்பவன்.  காண்போர்க்கு கண்ணிறைந்து காணும் கண்ணன் .

குந்தி இன்னும் நிறைய சொல்கிறாள் கேட்போம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...