Friday, December 15, 2017

AMMALU AMMAAL






நன்றி நன்றி நன்றி - J.K. SIVAN

ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பக்தர் ஒருவர் எனக்கு அம்மாளு அம்மாளைப்பற்றி எழுதுங்கோ என்று சொன்னார். சில விவரங்களை சேகரித்தேன். ஆச்சர்யமாக இருந்தது. இப்படி ஒரு நாரதர், புரந்தரதாஸரின் அம்சம் கண்ட பெண்மணி சமீப காலம் வரை சப்தம் இல்லாமல் நம்மிடையே இருந்திருக்கிறாளா என்று அதிசயித்தேன். என்னைப்போலவே எண்ணற்ற நண்பர்களும் அம்மாளு அம்மாள் சரித்திரத்தை ரசித்தும், சிலர் அவர்களை நேரில் பார்த்தும், பேசியும், பழகியும், பிரசாதம் அவர்களிடம் பெற்றும், வீட்டுக்கு வரவழைத்து உபசரித்தும் ஆசி பெற்றவர்கள் என்று அவரவர் எழுதிய கருத்துகளை பரிமாறிக்கொள்ளும்போது புரிந்தது. மேலும் என் ஆச்சர்யம் விஸ்தரித்தது.

அம்மாளு அம்மாள் மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ மஹான்கள் அதிக ஆடம்பரம் இன்றி, எளிய வாழ்க்கை வாழ்ந்து பகவானோடு ஒன்றியவர்கள் இன்னும் இருக்கத்தான் செயகிறார்கள். உங்களில் யாருக்கு அப்படிப்பட்டவர் எவரையேனும் தெரிந்தால் எனக்கு முழு விவரமும் கொடுங்கள். சந்தோஷமாக மற்றவர்களோடு பரிமாறி நானும் மகிழ்வேன்.

என்னுடைய இந்த அம்மாளு அம்மாள் சரித்திரம் இன்னும் நிறைய அன்பர்களை அடைந்து கொண்டு இருக்கிறது, அவர்கள் எனது வர்ணனையை விரும்பினார்கள் என்று அறிந்து இன்புறுகிறேன். உங்களோடு தொடர்ந்து இன்னும் நிறைய விவரங்கள் சேர்ந்தே அனுபவிக்க நமது மனத்தில் உறையும் அந்த கிருஷ்ணன் அருளட்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...