Sunday, October 30, 2022

PESUM DEIVAM

 பேசும் தெய்வம் -  #நங்கநல்லூர்_J_K_SIVAN


 
மஹா பெரியவாளிடம் 100 கேள்விகள்.

நான்  தயங்கி தயங்கி  நிற்பதைப்  பார்த்தவுடன்  அவருக்கு  முகத்தில்  புன்  சிரிப்பு.

''என்னடா தயக்கம்,  நீ எதுக்கு வந்திருக்கேன்னு எனக்கு தெரியுமே.  மீதி கேள்வி கேட்கத்தானே. போகட்டும் போ. நல்ல விஷயங்களை நாலு பேருக்கு சொல்லணும்னு நீ நினைக்கிறதாலே உனக்கு ஓப்லைஜ்  OBLIGE  பண்றேன்.  என்ன கேக்கணுமோ சீக்கிரம் கேளு.  பூஜைக்கு நேரமாச்சு.  இன்னிக்கு அரைமணி நேரம் தான் உனக்கு.''

''பரம சந்தோஷம் பெரியவா. ஒரு வினாடி கூட  வேஸ்ட் பண்ணாம  கேட்டுடறேன். உங்க பதிலை எழுதிக்கறேன்''

11.  ''பெரியவா,    அறிவை  வளர்த்துக்கொள்வதற்கு  என்ன செய்யவேண்டும்?

''முதல்லே  மனசு என்று ஒன்று  பகவான் கொடுத்தி
ருக்கார் என்று புரியணும். அதால் தான் அறிவு ஞானம் எல்லாமே  வளரமுடியும். அந்த மனசு அசுத்தமா இருந்தால்  அறிவாலே  ஒரு பிரயோஜனமம் இல்லை.   மனசை சுத்தமாக்க  அதை கட்டுப்பாட்டில் வைக்க ணும். அதற்கு  ஒழுக்கம் ரொம்ப அவசியம். ஒழுக்கம் இல்லாவிட்டால் மனசு கட்டுப்பாடு இல்லாமல் தறி கெட்டு  அலையும். செய்யற காரியம் எல்லாம் தப்பாக முடியும். அறிவு இருந்தும் ஒன்னும் உபயோக மில்லாதபடி ஆகிவிடும்.

12.  தியாகம், தர்மம், புண்யம் என்று சொல்றோமே  அதைப்  பத்தி  கொஞ்சம் புரிய வையுங்கோ?

குறைச்சலான வசதியைக் கூட பெற முடியாமல்   இருக்கிறவர்களுக்கு முடிந்தவரை மற்றவர்கள் சமூகத்தில்  உதவணும்.  அது தான் தியாகம், தர்மம், புண்யம் எல்லாமே. இந்த  குணம் வந்துட்டாலே மத்ததெல்லாம்  தானே வரும்.

13.  நிறைய  சம்பாதித்தால் தான்   வாழ்க்கையிலே  வசதியோடு சந்தோஷமா இருக்கலாம்  என்கிற எண்ணம் அநேகருக்கு மனதில் இருக்கிறதே சுவாமி?

''தப்பு,    வெளியே  இருந்து நிறைய  பொருள்களைத் தேடி குவிக்கிறதாலே வாழ்க்கைத் தரம் உயரும் என்ற எண்ணமே தப்பு. தரமான  வாழ்க்கை  என்பது இருப் பதை வைத்து திருப்தியோடு மன நிறைவோடு வாழ் வது.  அது வேண்டும்  இது வேண்டும் என்ற  அரிப்பு இருக்கிற  வரையில் நாம் தரித்ரர்கள் தான்.   வெளியுலக  பொருள்கள் மேல் ஆசையை  வளரவிட்டு அதால் அவதிப்படுபவர்கள் தான் ஜாஸ்தி.  ஆசை நிறைவேறாத  போது  கோபம் பொறாமை வளருகிறது. சுவற்றிலடித்த பந்து திரும்பி முகத்தில் வந்து விழுவது போல  நிறைவேறாத ஆசை ஒருவனை நிலை தவறச்  செய்கிறது. பாப கார்யங்கள் செய்யத்  தூண்டு கிறது''

14. அப்படி என்றால் பணம் சேர்ப்பது தவறோ?

தேவைக்கு மேல் பணம் எதற்கு? தேவை அத்தியாவசி யமாக இருக்க வேண்டும். ஓடி ஓடி சம்பாதிக்கும் காசு கூட வரப்போவதில்லை. அவசியமில்லாமல்  ஏராளமாக சம்பாதிப்பதும், அவசியமில்லாமல் காசை  செலவழித் து  விரயம் செய்வதும் வீண். பூதம் காத்த  புதையலாக  பாங்கில்  போட்டு பயத்தோடு வாழ்வது எதற்கு? அடுத்த உலகத்தில் செல்லக்கூடிய செலாவணி  பகவன் நாமா ஒன்று தான்''

15. குரு என்பது  யார்,  எவரை  குருவாக ஏற்றுக் கொள் வது என்று பெரியவா சொல்ல வேண்டும்?

'' குரு என்றால் கனமானது, பெரியது என்று ஒரு அர்த்தம்.அதாவது குரு என்பவர்  பெருமையுடையவர், மஹிமை  பொருந்தியவர் என்று அர்த்தம். ரொம்ப பெரியவர்களை ''மஹா கனம்  பொருந்திய...'' என்று சொல்வது அக்கால வழக்கம்.  கனம்  என்றால் குண்டு, வெயிட் WEIGHT என்று அர்த்தமில்லை.  அருளாலும், அறிவாலும், அனுபவத்தாலும் பெரியவர் என்று அர்த்தம். ஆசார்யன் என்றால்  தான் நல்வழியில் நடந்து காட்டி சிஷ்யர்களுக்கு அவ்வாரே  நடக்க  வழிகாட்டுபவர். குரு என்றால் இருட்டைப் போக்குபவர் என்றும் அர்த்தம்.  அறியாமை, அஞ்ஞானம் என்பது தான் இருட்டு.  அதைப் போக்குபவர் தான் குரு. 

தீக்ஷை என்பது குருவிடமிருந்து புறப்பட்டு சிஷ்ய னைச் சேரும் அவரது சக்தி. அது கண்ணாலும், ஸ்பரிசத்தாலும் , குருவின் எண்ணத்தாலும், சங்கல்பத்தாலும் நிகழ்வது'' 
16.  ரொம்ப சந்தோஷம் பெரியவா. கடைசியா ஒரு கேள்வி.    மௌன விரதம் அவசியமா?
நமது வாக்கில்  ஸரஸ்வதி  தேவி இருக்கிறாள். வாக் தேவி என்று அவளுக்கு அதனால் தான்  பெயர்.  நாம் பேசும் பேச்சுக்கள் அநேகமாக யாரைப்பற்றியாவது விமர்சனம் பண்ணுவதாக இருக்கிறது.  பிறரைப் புண் படுத்துவதாக, தீமை விளைவிப் பதாக இருக்கிறது. இது  ஸரஸ்வதி தேவிக்கு நாம் செய்யும் அபசாரம்.  சோமவாரம் எனும் திங்கள், குருவாரம் எனும் வியாழன், ஏகாதசி எனும் நாட்களி லாவது  கொஞ்சம்  பேசாமல்  மௌனமாக இருக்க லாமே.  ஆபிஸ் போகிறவர்கள் ஞாயிற்றுக் கிழமை யாவது ஒரு அரைமணி நேரமாவது மெளனமாக
இருக்கலாமே. நல்ல எண்ணங்களை மனதில் அப்போது வளர்க்கலாம்.   மனத்தை   ஏதாவது ஒரு திருப்பணியில்  ஈடுபடுத்தவேண்டும். இது தினம் செய்யும் தர்மம்.  அணில் எப்படி ராமருக்கு  சேது  பாலம் கட்ட உதவியதோ அதுபோல் ஒரு சின்ன சேவை. 
நமது குறைகளை கண்டவர்களிடம் சொல்வதை விட மனதாலேயே பகவானுக்கு தெரியப்படுத்தினால் போதும். அவனுக்குத் தெரியும். உதவுவான்''

சரி போய்ட்டு அப்புறம் வா.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...