Sunday, October 23, 2022

pesum deivam

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


கங்கா ஸ்னானம் 

இன்னிக்கு   ஒருவரை ஒருவர் கேட்கும் ஒரு கேள்வி  ''கங்கா ஸ்னானம் ஆச்சா?''   நானும் உங்கள்  எல்லோரையும் இதைக் கேட்கிறேன்.   மற்ற நாள் யாரையாவது  குளிச்சிட்டியா? என்று கேட்கிறோமா,  கேட்டால் தான் பிடிக்குமா?
எங்கேயோ ஒண்டு குடித்தனம் இருக்கிறவனை,  ஏழு மாடி மேல் ஒரு புறா கூண்டில் இருப்பவனை  கிராமத்தில் இருப்பவனை,  யாரைப் பார்த்தாலும் இப்படி கங்கா ஸ்னானம் ஆச்சான்னு கேக்கும் வழக்கம்  தீபாவளி அன்று மட்டும் தான்.  ஏன் என்றால் அன்று ஒருநாள் மட்டும் தான் எல்லா  குழாய்,கிணற்று தண்ணீரும், போர்  தண்ணீரும் கங்கையாக மாறிவிடுகிறது என்ற ஐதீகம், நம்பிக்கை.

''இந்த உலகத்திலே பகவான் எல்லாத்தையும் இரண்டு இரண்டாகப் படைத்து இருக்காறே. அதன் தாத்பர்யம் 
என்ன?  ''ரெண்டு ரெண்டாவா ?  என்ன ஸார்  சொல்றீங்க?''

''ஆமாம், ஆமாம்... இரண்டு இரண்டு என்றால்,  இரவு பகல், இனிப்பு கசப்பு,  ஆண் பெண், உண்மை பொய்,  பிறப்பு இறப்பு,  வெயில் நிழல், வானவெளியில் நக்ஷத்ரம் கிரகங்கள் இது போன்று பகவான் இரண்டு இரண்டாகப் பாகுபடுத்தி உள்ளதைச் சொல்றேன்.   நம்ம  உடம்பையே பாருங்கோ,  இரண்டு கைகள், இரண்டு கால்கள், கண்கள். காதுகள் இப்படி எல்லாமே இரண்டு இரண்டாக. ஆனால் தெய்வம் மட்டும் ஒன்று என்றே சொல்றோமே நம் உடம்பில் உள்ள மூளையைப் போல்.”

''இன்னிக்கு  தீபாவளியும் தாணுமா  எதுக்கு இந்த  ''ரெண்டு ரெண்டு''? அதுக்கும்   கங்கா ஸ்னானத்துக்கும் என்ன சம்பந்தம்?
 
நமக்கு  கங்கையை, யமுனையை மட்டும்  தானே தெரியும். அந்த கங்கை யமுனையோடு அலகாபாத்தில் சங்கமிக்கும் இடத்திலே இன்னுமொரு நதி திரிவேணி சங்கமா  சேர்கிறதே  ஒரு நதி கண்ணுக்குத் தெரியாமல்,அது  தெரியுமா?”
“ஒ, பேர்  தெரியும். சரஸ்வதி நதி. ஆனால் கண்ணால் பார்த்ததே இல்லை எவரும்.”
ஆகவே  மூன்றாவது ஏதோ  ஒன்று இந்த இரண்டுக்குள் புலப்படாமலே இருக்கிறதல்லவா. இரண்டின் தத்துவம்  அறிந்து கொண்டு  காரணமான அந்தப் பரம்பிரம்மத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளத்தான் மேலே சொன்ன பீடிகை எல்லாமே.

இரண்டு இரண்டாகப் படைத்ததே   கண்ணில் படாத அந்த மூன்றாவது  'பரம்பொருளை'  உணர்ந்து கொள்ளத்தான். இரண்டு என்பதே ஒன்றை ஒன்று வேறுபடுத்திக்காட்டவும் (Differentiate) ஒன்றுடன் ஒன்றைப் பாகுபடுத்திக் காட்டவும் (Compare) ஒன்றுடன் ஒன்று சேரும்போது மற்றொன்று உருவாகும் என்பதைக் காட்டவும் உணரவும் ஆண்டவன் செய்த திருவிளையாடல்.”

இந்த சமயம்  மஹா பெரியவா   தீபாவளி  பற்றி  சொன்னதை  புரிந்து கொள்வோம்.  இது புரிந்தால், எப்படி பகவான் தன்னை உணர இரண்டை பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்பது  விளங்கும்.

மஹா பெரியவா: 
“தீபாவளி சமயம். எனக்கு என்னமோ பகீரதனை விட, நரகாசுரனே உயர்ந்தவன். ரொம்ப பிடிச்சிருக்கு அவனை. பகீரதன் பெரிய தபஸ்வி. அவன் பட்ட கஷ்டங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தையால்தான் கங்கை நம் பாரதத்துக்குக் கிடைத்தது. ஆனால் நரகாசுரனோ பெரிய கொடுமைகள் மாபாதகங்கள் பலவும் செய்தவன்.
என்னடா. இப்பேர்ப் பட்ட பாபியை நான் உசந்தவன்னு சொல்றேன்னு பார்க்கிறேளா.”
“தபஸ், பித்ரு பக்தி, சிரத்தை இதுக்கெல்லாம் பகீரதனைப் போற்ற வேண்டும். ஆனாலும் Comparitiveஆ அந்த அசுரன் லோகம் பூராவும் சந்தோஷமா தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடனும்னு வரம் வாங்கித் தரும் அளவுக்கு அந்திம காலத்திலே அடிபோட சேஞ்ச் ஆனதுக்கு அவனை ஜாஸ்தி கொண்டாடணும் இல்லையா. ஒன்று  ன்னு எடுத்துண்டா இருவரையும் compare பண்ண முடியாது.   உத்தேசித்துப் பண்ணினாலும் உத்தேசிக்காமல் பண்ணினாலும் பண்ணியவருக்கு நன்றி சொல்றதுதான் நம் பண்பாடு. இல்லையா?
அப்படிப் பார்த்தா நரகாசுரனுக்குத்தான் அதிகமா நாம் நன்றி சொல்லணும். 

கடன் பட்டா திருப்பிக் கொடுக்கணும். இல்லாட்டா சட்டப்படி குற்றம். தான  தர்மம் பண்றது அப்படி இல்லே. பண்ணினா புண்யம். பண்ணாட்டா பாவம் இல்லை. குற்றம்னு யாரும் கேஸ் போட முடியாது. அதே மாதிரிதான் பகீரதனுக்கு நன்றி சொன்னா புண்யம், சொல்லாட்டா குத்தம் இல்லே. அது Optional ஆனால் நரகாசுரனுக்கு நன்றி சொல்ல வேண்டியது Obligatary. அவசியம்.”

“பகீரதன் கங்கையை பாரதத்தில் ஓடவிட்டது உபகாரம்தான். ஆனால் அவன் அனைத்து ஜனங்களையும் உத்தேசித்துக் கொண்டு வரலே. பாதாள லோகத்திலே பலவருஷமா கிடந்த தன்னோட பித்ருக்களுக்குச் (சகரர்களுக்கு)   சொர்க்கம் கிடைக்கவே கொண்டு வந்தான். இதைத் தன்னலம்னுகூடச் சொல்லலாம். பகீரதன் செஞ்சது incidental, intentional இல்லே.”

“ஆனால், நரகாசுரனோ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவோட சுதர்ஸன சக்ரத்தாலே கழுத்து அறுபட்டு ப்ராணன் போற சமயத்திலேகூடத் தன்னோட க்ஷேமத்தையோ தன்னுடைய பந்துக்கள், பித்ருக்கள் க்ஷேமத்தையோ நினைக்காமல் லோக க்ஷேமத்துக்காகத் தன்னோட இறந்த நாளை (தீபாவளியை)என்னென்னிக்கும் கங்கையோட ஸாந்நித்யம் எல்லாத் தீர்த்தத்திலேயும் பூர்ணமா கிடைச்சு, ஜனங்களோட அனைத்துப் பாவங்களும் பூர்ணமா போகணும்னு ப்ரார்த்தனை செய்து வரன் பெற்றான். 

தீபாவளி அன்னிக்கு ஸ்னானம் பண்ற எந்த ஜலமானாலும் அதிலே கங்கை ஆவிர் பவித்துவிடுகிறாள். கங்கா ஸ்னானம் ஆகி ஆனந்தமா பண்டிகைக் கொண்டாடும் எல்லோருமே மோக்ஷம் பெற வேண்டும் என்று வரம் பெற்றான். ஆனால் தனக்கு மோக்ஷம் வேணும்னோ அல்லது ஒசத்தியான வேறு ஜென்மம் வேணும்னோ கேட்கவே இல்லை.”

“பகீரதன் கொண்டுவந்த கங்கையை நாம் வடதேசம் தேடிச் சென்றுதான் ஸ்னானம் பண்ண வேண்டும். ஆனா நரகாசுரனோ லோக க்ஷேமத்துக்காகத் தீபாவளியன்று எல்லார் வீட்டிலுமே கங்கை ப்ரவாஹிக்க வேண்டும். அந்த நாளில் எல்லா ஜலமும் கங்கையாக ஆகி எல்லா ஜனங்களும் புண்யத்தைப் பெற வேண்டும் என்று ப்ரார்த்தித்தானே அவன் உசத்தியா! அல்லது பகீரதன் உசத்தியா! ஆக நாம் நரகாசுரனுக்குத்தான் அதிகம் நன்றி செலுத்த வேண்டும். தீபாவளி அன்று அவனை ஜாஸ்தியா பூஜிச்சு ஸ்தோத்ரம் பண்ணனும்.” 

எப்படி கங்கை யமுனை இந்த இரண்டு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் சரஸ்வதியும் திரிவேணி சங்கமமாகப் பிரவாஹித்து இருப்பதுபோல  மேலே சொல்லப்பட்ட விளக்கங்கள் பகவானால் மட்டுமே சொல்ல இயலும் என்பதை  மஹா பெரியவா  நமக்கு புரியவைத்துள்ளார். 
இதனால்  நமக்கு கிடைக்கும்  கண்ணுக்குத் தெரியாத ஆனந்தம்தான் இந்த இரண்டின் விசேஷம்.

பகவான் எல்லாவற்றையும்   இரண்டாகப் படைத்ததன் நோக்கம் அதன் மூலம் மூன்றாவது ஒன்றை   நாம்  உணர வேண்டும் என்பதற்காகவே.”

நமக்கு  ரெண்டு கைகளைக் கொடுத்திருக்கான் ஆண்டவன். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டுங்கள். சப்தம் வருகிறதல்லவா  ரெண்டு கைகளையும் பார்க்கிறோமே, அது உண்டாக்கிய சப்தம் பார்க்க முடிகிறதா, கேட்கதானே  முடிகிறது.  
பட்டாஸையும் நெருப்பு குச்சி,  candle  தீபம்  ரெண்டையும் இணைக்கும்போது ''டபார்'' என்று  வெடிசப்தம் கேட்பதை உணர முடிகிறதே தவிர அதை  யாராவது பார்த்ததுண்டா?
இதோ தீபாவளிக்கு  வீட்டில் மாமி  ரவா லாடு பண்ணி இருக்காளே.   அதை எடுத்து  வாயில் போடும் போதுதானே இனிப்பு என்ற உணர்ச்சியை, சந்தோஷத்தை   பெறுகிறோம்.  அந்த இனிப்பு என்கிற சுவையான ஆனந்தத்தை உணர முடிகிறதே ஒழிய அதை  என்ன என்று காட்ட யாராலாவது இயலுமா?

“கங்கையைப் பகீரதன் கொண்டுவந்தாலும் அதை பரிபூர்ணமாக அனுபவிக்கச் செய்து அதன் மூலம் புண்ணியம் என்ற கண்ணுக்குத் தெரியாத ஒன்றை உங்களுக்குப் பெற்றுத் தந்துள்ளானே நரகாசுரன். தீபாவளி அன்று நாம் எல்லோருமே அனைத்துப் பாபங்களையும் போக்கி, புண்ணிய ஆத்மாக்களாக ஆகிவிடுகின்றோம் என்பதை பாரதம் பூராவும் அன்று நிலவும் ஆனந்தம், மகிழ்ச்சி நமக்கு உணர்த்துகின்றதே. இந்த ஆனந்தத்தையும் புண்யத்தையும் பெற்றுத் தந்த அந்த நரகாசுரனைப் போற்ற வேண்டும்''
சாக்ஷாத் பரமேச்வரனான  மஹா பெரியவாளை நேரில் தரிசித்து, அவருடைய  அருள் வாக்குகளைக்  கேட்டு ஆத்மார்த்தமாக அனுபவித்தவர்களுக்கே ஆனந்தம் என்றால் என்ன என்று புரியும்.”

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...