Tuesday, September 20, 2022

KALIYUGAM


 


அப்போதே  சுகர்  சொன்னது: நங்கநல்லூர்  J K  SIVAN 
கலியுகம்: 

त्रिंशद्विंशतिवर्षाणि परमायु: कलौ नृणाम् ॥ ११ ॥
triṁśad viṁśati varṣāṇi  paramāyuḥ kalau nṛṇām  12.2.11

நாம் ஒருவரை ஒருவர்  ''நூறாண்டு வாழ்க'' என்று வாழ்த்துகிறோம். ரொம்ப சரி.இப்போதைக்கு இது முடியலாம். இன்னும் காலம் செல்லச் செல்ல, கலியுகத்தில் அதிக பக்ஷம் ஒவ்வொருவருக்கும் வயது ஐம்பது தானாம் . எழுதும்போதே பயமாக இருக்கிறது.  சுகர் சொன்னால் அது பொய்யாகாது.  நாளுக்கு நாள் மோசமாக தான் கலிகாலம் செல்லும். அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. நாமே அனுபவிக்கிறோம்.

क्षीयमाणेषु देहेषु देहिनां कलिदोषत: ।वर्णाश्रमवतां धर्मे नष्टे वेदपथे नृणाम् ॥ १२ ॥
पाषण्डप्रचुरे धर्मे दस्युप्रायेषु राजसु । चौर्यानृतवृथाहिंसानानावृत्तिषु वै नृषु ॥ १३ ॥
शूद्रप्रायेषु वर्णेषुच्छागप्रायासु धेनुषु । गृहप्रायेष्वाश्रमेषु यौनप्रायेषु बन्धुषु ॥ १४ ॥
अणुप्रायास्वोषधीषु शमीप्रायेषु स्थास्नुषु । विद्युत्प्रायेषु मेघेषु शून्यप्रायेषु सद्मसु ॥ १५ ॥
इत्थं कलौ गतप्राये जनेषु खरधर्मिषु । धर्मत्राणाय सत्त्वेन भगवानवतरिष्यति ॥ १६ ॥12.2.12

kṣīyamāṇeṣu deheṣu dehināṁ kali-doṣataḥ
varṇāśramavatāṁ dharme naṣṭe veda-pathe nṛṇām
pāṣaṇḍa-pracure dharme dasyu-prāyeṣu rājasu
cauryānṛta-vṛthā-hiṁsā- nānā-vṛttiṣu vai nṛṣu
śūdra-prāyeṣu varṇeṣu cchāga-prāyāsu dhenuṣu
gṛha-prāyeṣv āśrameṣu yauna-prāyeṣu bandhuṣu
aṇu-prāyāsv oṣadhīṣu śamī-prāyeṣu sthāsnuṣu
vidyut-prāyeṣu megheṣu śūnya-prāyeṣu sadmasu
itthaṁ kalau gata-prāye janeṣu khara-dharmiṣu
dharma-trāṇāya sattvena bhagavān avatariṣyati

கலியுகத்தை தனது தீர்க்க த்ரிஷ்டியால் கண்டு  பரீக்ஷித் ராஜாவுக்கு  சொல்லும் சுகர்  கொஞ்சம் கடுமையாகவே இதை உச்சரிக்கிறார்.   கலியுகத்தில் இவ்வளவு அக்ரமமா நடக்கப்போகிறது ?? என்று அப்போதே  அவருக்கு தோன்றிவிட்டது.   அப்படி என்ன கண்டார் கலியுகத்தில்?

எல்லா  ஜீவன்களும்  உருவத்தில் குறுகிவிடும்.    என் தாத்தா கொள்ளுத்தாத்தா  எல்லாம் ஆறு அடிக்கு மேல் உயரமான வர்கள்.ஒருநாளைக்கு ஐம்பது மைல்  நடப்பவர்கள்.  நான் ஐந்தரை அடி .  ஐந்து கிமீ. நடக்க முனகுகிறேன். குல வழி, கோட்பாடுகள் எல்லாம் சிதைந்துவிடும். நாம் தான் பார்க்கிறோமே, குலமெங்கே? கோத்ரமெங்கே? வேதம் சொன்ன வழிமுறையை  காற்றில் பறக்கவிடுவார்கள்.  ஆமாம்  இப்போதே  வேதம்  மந்த்ரம் எல்லாம்  மொபைலில் இருந்து தான் படித்து சொல்கிறார்கள்.  ஆஸ்திகம் மறைந்து நாஸ்திகம் தலை தூக்கும்.  வாஸ்தவம்.  ராஜாக்கள் திருடர்களாகி விடுவார்கள்.  இதைப்பற்றி சொல்லவே வேண்டாம்.  எங்கு திரும்பினாலும் அரசாங்கங்கள் ஒரே மாதிரி தான் நடக்கிறது..  திருடுவது ஒரு கலை , தொழில் நுட்பமாகிவிடும்.  ரொம்ப சரியான கணிப்பு. பொய்  பித்தலாட்டம் களை கட்டும்.  ஆமாம் புது புது விதத்தில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.  யூட்யூப், வீடியோ, பத்திரிகை காட்டுகிறது.  ஹிம்சை  அதிகமாகும்.  ஆமாம் ஒரு ரூபாய்க்கும், ஒரு குவார்ட்டருக்கும் கொலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். பசுக்கள்  ஆடு அளவுக்கு குறைந்துவிடும்.  மஹான்கள் ஆசிரமங்கள்  எல்லாம்  சாதாரண வீடுகளாகிவிடும்.   குடும்ப ஒற்றுமை சிதையும்.  கூட்டுக்  குடும்பங்களை பார்க்கமுடியாது.   தாவரங்கள் விருக்ஷங்கள்  உருவத்தில் குறுகிவிடும்.  பிரம்மாண்ட விருக்ஷங்களை பார்க்க காசு கொடுக்கவேண்டும்.  வானத்தில் மேகங்கள் கண்ணைப்பறிக்கும் மின்னலாகிவிடும்.  வீடுகளில் பய பக்தி காணாமல் போய்விடும்.  மனிதர்கள் கழுதைகளாகிவிடுவார்கள் என்கிறார் சுகர்.  இப்படி எல்லாம் தலைகீழாக போகும் சமயத்தில்  பரமாத்மா மீண்டும் பூமியில் தோன்றுவார்.  எல்லாவற்றையும் அழித்து புதிய பாதை வகுப்பார். மீண்டும்  சத்யயுகம் தோன்றும். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...