Wednesday, September 21, 2022

adhi sankarar

ஆதி சங்கரரின் வினா விடை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ப்ரஸ்னோத்ர  ரத்ன  மாலிகா.

४९. गृहमेधिनश्च मित्रं किं? भार्या, को गृही च? यो यजते।  को यज्ञो? यः श्रुत्या विहितः श्रेयस्करो नृणां॥  
49.  Grihamedhinashcha mitram kim? Bhaaryaa, ko grihee cha? Yo yajate  Ko yajno? Yah shrutyaa vihitah shreyaskaro nrinaam

121. ஒரு கிரஹஸ்தனுக்கு உற்ற  நண்பன்  யார்?
அவனுடைய மனைவி மட்டுமே. 

122. கிரஹஸ்தன் உண்மையில் யார்?
எவன் விடாமல் சாஸ்திரங்கள் வேதங்கள் சொல்லியபடி   தேவர்கள், பித்ருக்களுக்கு ஸ்ரத்தையாக,   யாகம்,  யஞம், ஹோமம்  எல்லாம் செய்கிறானோ அவன் தான். 

123.  யஞம் யஞம் என்கிறீர்களே அப்படியென்றால் என்ன?
லோக சம்ரக்ஷணத்துக்காக,  உலக நன்மைக்காக, வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வைதிக கர்மாக்களை செய்வது..

५०. कस्य क्रिया हि सफला? यः पुनराचारवान् शिष्टः|  कः शिष्टो? यो वेदप्रमाणवान् को हतः?क्रियाभ्रष्टः॥
50  kasya kriyaa hi saphalaa?  Yahpunaraachaaravaan shishtah  kah shishto? Yo vedapramaanavaan, ko hatah? kriyaabhrashtah

124. யார்  செய்யும்  காரியங்கள் பலனளிப்பவை.
ஆசாரத்தோடு , பக்தியோடு, செய்கிறவனின்  நற்காரியங்கள். 

125. எவன்  ஆசார  சீலன்?
வேதத்தை நன்றாக புரிந்துக்கொண்டு அனுஷ்டித்து அதன்படி நடக்கிறவன்.

126. இருந்தும்  இறந்தவன் யார்?
வேதங்கள் சொல்வதை புறக்கணித்து, அலட்சியத்தோடு வாழ்பவன். 

५१. को धन्यः? संन्यासी, को मान्यः?पण्डितः साधुः।   कः सेव्यॊ? यो दाता, को दाता? योऽर्थितृप्तिमातनुते॥
51.  ko dhanyah? Sanyaasee, ko maanyah? Panditah saadhuh  kah sevyo? Yo daataa, ko daataa? Yo’rthitriptimaatanute

127.  எவன் புண்யசாலி?
வேறு யார். சந்நியாசி தான். அவன் தானே  ஸம்ஸார  பந்தங்களை அறுத்து எறிந்து , சுதந்தரமாக  பற்றுகளின்றி திரிபவன். 

128.  எவன் மரியாதைக்குறியவன்?
நன்றாக கற்றுணர்ந்த,  எளிமையான, சாது. 

129.  யாரை  மதித்து சேவை செய்யலாம்?
தான தர்மங்களை முடிந்தவரை மன திருப்தியோடு புரிபவருக்கு சேவை செய்யலாம்.

130. யாரை   உண்மையிலேயே கொடுப்பவர் என்கிறோம்?
யார்  இல்லையென்று வந்தாலும் வரவேற்று உபசரித்து, திருப்தியாக அவருக்கு தன்னாலான உதவி, தான, தர்மம் செய்பவர்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...