Saturday, September 24, 2022

adhi sankarar

ஆதி சங்கரரின் வினா விடை - #நங்கநல்லூர்_J_K_SIVAN
ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா.

५६. मुक्तिम् लभेत कस्मात्? मुकुन्दभक्तेः, मुकुन्दः कः?। यस्तारयेदविद्यां, का चाविद्या? यदात्मनोऽस्फूर्तिः॥

56. muktim labheta kasmaat? mukundabhakteh, mukundah kah? Yastaarayedavidyaam, kaa chaavidyaa? Yadaatmano’sphoortih

144. எவர் அருளால் நாம் மோக்ஷம் பெறுகிறோம்?
முகுந்தன்.

145.யார் அதா முகுந்தன்?
அவித்யா, அஞ்ஞானம் எனும் மடமையிலிருந்து நம்மை விடுவிப்பவர்.

146. அவித்யா என்றால் என்ன?
தான் யார் என்றே அறியாத நிலை.

५७ कस्य न शोको? यः स्यादक्रोधः, किं सुखं तुष्टिः। को राजा? रञ्जनकृत्, कश्च श्वा? नीचसेवको य: स्यात्॥

57. kasya na shoko? Yah syaadakrodhah, kim sukham? Tushtih ko raajaa? Ranjanakrit, kashcha shwaa? Neechasevako yah syaat

147. துன்பம், துயரம் அற்றவன் யார்?
எவனுக்கு கோபம் என்பதே தெரியாதோ அவன்

148.எது சந்தோஷம்?
போதும் என்ற மன நிறைவு.

149. யாரை அரசன், ராஜா, என்று சொல்லலாம்?
குடிமக்கள் நலனை உண்மையில் கருதி அவர்களை திருப்தியோடு, சந்தோஷத்தோடு வாழ வகை செய்து தருபவனை.

150. எவனை நாயிலும் இழிவானவன் என்பார்கள்g?
தீயவனுக்கு சேவகம் செய்பவனை.

५८. को मायी? परमेशः, क इन्द्रजालायते? प्रपञ्चोऽयं कः स्वप्ननिभॊ? जाग्रद्व्यवहारः सत्यमपि किं? ब्रह्म॥

58. ko maayee? Parameshah, ka indrajaalaayate? Prapancho’yam kah swapnanibho? Jaagradvyavahaarah, satyamapi kim? Brahma

151. மாயைக்கு நாயகன் யார்.?
சர்வேஸ்வரன்.

152. இந்த்ரஜாலம் என்கிறார்களே அது என்ன?
இந்த பிரபஞ்சம் தான் அதைவிட மாயா ஜாலம் வேறு இருக்கிறதா?

153.எது கனவுக்கு ஒப்பானது?
விழிப்பு நிலையில் நடக்கும் அனைத்துமே கனவுக்கு நிகர் தான்.

154.எது ஸத்யம்?
ப்ரம்மம் ஒன்றே சாஸ்வத சத்யம்.

५९ किं मिथ्या? यद्विद्यानाश्यं, तुच्छं तु? शशविषाणादि। का चानिर्वचनीया? माया, किं कल्पितं द्वैतं॥

59. kim mithyaa? Yadwidyaanaashyam, tuchchham tu? shashavishaanaadi kaa chaanirvachaneeyaa? maayaa, kim kalpitam? Dwaitam

155. மித்யா எனும் கண்கட்டு வித்தை எது?
உண்மையான ஞானம் பெற்றவுடன் அழிந்து, மறைந்து போகுமே அது.

156. எது துச்சமென்று கருதவேண்டியது ?
இல்லாதது, இருக்க முடியாதது. முயலுக்கு கொம்பு போன்ற சமாச்சாரங்கள்.

157. எது விவரிக்க முடியாதது?
மாயா .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...