Thursday, September 22, 2022

ADHI SANKARAR

 ஆதி சங்கரரின் வினா விடை - #நங்கநல்லூர்_J_K_SIVAN


ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா.

५२. किं भाग्यं देहवतां? आरोग्यं, कः फली? कृषिकृत्। कस्य न पापं? जपतः, कः पूर्णो? यः प्रजावान् स्यात्

52. kim bhaagyam dehavataam? Aarogyam, kah phalee? Krishikrit kasya na paapam? Japatah, kah poorno? Yah prajaavaan syaat

131. நமக்கெல்லாம் உடம்பு இருக்கிறதே. அதற்கு எது சிறந்த பரிசு?
பகவான் அருளும் ஆரோக்கியம் தான் பரிசு.

132. எவன் பலனை நன்றாக அனுபவிப்பவன்?
எவன் உழைக்கிறானோ அவன். மண்ணில் ஆழ உழுது, விதைத்து நீர் பாய்ச்கை வியர்க்க உழைப்பவன் தான் அறுவடை செய்து மகிழ்பவன்.

133. எவனிடம் பாபம் சேருவதில்லை ?
பகவானை நோக்கி ஜபம் செய்பவனை.

134. எவனை முழுமையானவன் எனலாம்?
புத்ர பௌத்ராதிகளை பெற்றவன்.

५३. किं दुष्करं नराणाम्? यन्मनसो निग्रह्स्सततं। को ब्रह्मचर्यवान् स्यात्? यश्चास्खलितो ऊर्ध्वरेतश्च॥

53. kim dushkaram naraanaam? Yanmanaso nigrahah satatam ko brahmacharyavaan syaat? Yashchaaskhalito oordhwaretaskah

135. மனிதர்களுக்கு கடினமான வேலை எது?
ஆஹா, மனதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது ஒன்று தான் முடியாத வேலை.

136.. பிரம்மச்சாரி என்பவன் யார்?
ப்ரம்மத்தையே நாடுபவன். புலனுணர்வுகளை கடந்தவன்.

४. का च परदेवता? चिच्छक्तिः, को जगत्भर्ता? सूर्यः। सर्वेषां को जीवनहेतुः? स पर्जन्यः॥

54. kaa cha paradevataa? Chichchhaktih, ko jagatbhartaa? Sooryah, sarveshaam ko jeevanahetuh? sa parjanyah

137. பரதேவதை என்கிறோமே அது யார்?
லோக மாதா. ஞானத்தின் பிறப்பிடம்.

138.இந்த பிரபஞ்சத்தை ஆதரித்து உதவுவது யார்?
தன் கடமையில் ஒருநாளும் தவறாத சூரியன்.

139. நம் எல்லோருக்குமே வாழ்வாதாரம் எது?
சூலுண்ட மேகம் . மழை தரும் மேகம்.
.
५५. कः शूरो? यो भीतत्राता, त्राता च कः? स गुरुः। को हि जगद्गुरुरुक्तः शंभुः ज्ञानं कुतः? शिवादेव॥

55. kah shooro? Yo bheetatraataa, traataacha kah? sa guruh Ko hi jagatgururuktah? Shambhuh, jnaanam kutah? shivaadeva

140. எவன் தைர்யமானவன்?
பயத்தை நீக்கி காப்பாற்றுபவன்

141 அப்படி நம்மை காப்பாற்றுபவர் யார்?
ஆன்மீக குரு

142. உலகத்துக்கே குரு யார்?
பரமேஸ்வரன்.

143: எவரிடமிருந்து பரி பூர்ண ஞானம் கிட்டுகிறது.
தக்ஷிணா மூர்த்தியான ஸாக்ஷாத் பரமேஸ்வரன் தான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...