Wednesday, September 7, 2022

BRINDHAVANAMUM NANDHAKUMARANUM

 பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - #நங்கநல்லூர்_J_K_SIVAN 

10. சிறந்த பரிசு 

பிருந்தாவனத்தில் பாண்டீர வனத்தில்  ஒவ்வொரு  கணமும் ஆனந்த மயம் தான். கிருஷ்ணன் என்ற ஒரு வார்த்தை போதும் புத்துணர்ச்சி பெற. கோபியர்களிடையே ஒரு  மீட்டிங்.  ''இன்று  நாம்  புதிதாக  ஒரு  விளையாட்டு விளையாடுவோம்'' என்றாள்  ஒருவள்.''என்ன செய்யலாம்?'' ''நாளை காலை கண்ணனுக்குஒவ்வொருவவரும் ஒரு பரிசு கொண்டு வந்து கொடுக்க வேண்டும். எது சிறந்தது என்று அவனே தேர்ந்தெடுத்து சொல்லட்டும்.. அந்த வெற்றி பெற்ற  கோபியோடு அவன் ஆடவேண்டும் என்று சொல்வோம்''கோபியர்கள் எல்லோரும் தீர்மானித்தார்கள். தீர்மானம் முடிவாகியது.மறுநாள் காலை.
எல்லா கோபியர்களும் மறுநாள் சின்னதும் பெரிதுமாக டப்பாக்கள் , பொட்டலங்கள், ஜாடிகள் பைகள் என்று எதெல்லாமோ பரிசுகள், பொருள்கள் நிரப்பி வழக்கமான மது வனத்தில் காத்திருந்தார்கள். அவனை எங்கே காணோம்?
''கண்ணனைக்  கண்டாயோ மல்லிக்கொடியே'' என்று ஒருத்தி பாடினாள்.
ஏன் கிருஷ்ணன்   இன்னும் வரவில்லை. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. பசுக்கள்  வந்து விட்டன. கோ தூளி காற்றில் புகையிட்டது. மஞ்சள் வஸ்திரம் தூரத்தில் தெரிந்தது. கண்ணன் வந்துவிட்டான்.
''என்ன இதெல்லாம்? என்று கேட்டான் அந்த பொருள்களை பார்த்துவிட்டு கிருஷ்ணன்.
''கண்ணா உனக்கு எங்கள் பரிசுகள்''
''எதற்கு ?
''எந்த பரிசு சிறந்தது என்று நீ பார்த்து சொல்லவேண்டும். அதற்காக ''
''ஓ'' என்றான் கண்ணன்.
ராதை வரவில்லை. கண்ணன் குழல் ஊதினான். மகுடி கேட்ட நாகம் போல் எங்கிருந்தோ வந்து அங்கே ராதை தோன்றினாள்.
அவள் கையில் ஒரு மூடிய மண் ஜாடி. அதை அவனுக்கு பிடித்த நீலத்  துணியால், தனது புடவையை கிழித்த ஒரு துண்டால், ஜாடியைச் சுற்றி கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தாள் .
கண்ணன் கோபியர்கள் கொண்டு  வந்ததெல்லாம் ஒவ்வொரு பரிசாக எடுத்து பார்த்தான். ''நன்றாக இருக்கிறது'' என்று மட்டுமே எல்லாவற்றிற்கும் சொன்னான்.
ராதை கொடுத்த மூட்டையை பிரித்தான். நீலத்துணி போர்த்திய சிறிய மண் ஜாடி முடியோடு..     திறந்தான். அதில்....
.... ஒன்றுமே இல்லை.......
எல்லோரும் சிரித்தார்கள். ராதைக்கு வெட்கமாக போய்விட்டது. மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டாள் .
கண்ணன் சிரித்துக் கொண்டே  பேசினான்.
''ஆஹா இது தான் மிகச் சிறந்த பரிசு, எனக்கு ரொம்ப பிடித்தது''என்று அந்த ஜாடிக்குள்  முகம் கவிழ்த்து நிறைய   முத்தமிட்டான்..''
''கிருஷ்ணா போதும் உன் விளையாட்டு... எதற்கு இந்த காலி மண் ஜாடியை சிறந்த பரிசு என்று சொல்லி எங்களை பைத்தியமாக்குகிறாய். உனக்கு கிறுக்கு பிடித்து விட்டதா ?''''
''யார் சொன்னது இது காலி என்று... அதில் ராதா எனக்கு பிடித்ததை நிறைய நிரப்பி மூடி போட்டு அனுப்பியது உங்களுக்கு தெரியவில்லை. நான் என்ன செய்யட்டும்'' என்றான் சிரித்துக்கொண்டே கிருஷ்ணன்.

ஒன்றும் புரியாமல் எல்லோரும் மயங்கி நிற்க ஒருத்தி சொன்னாள் :
''ஆமாண்டி.   இன்று காலை ராதா வீட்டுக்கு போனபோது நீ என்ன பரிசு கொடுக்கப்போகிறாய் என்று கேட்டேன் . ''இது தான் என்னிடம் இருக்கிறது''  என்று கையில் வைத்திருந்த இந்த ஜாடிக்குள் நிறைய முத்தமிட்டதை பார்த்து சிரித்தேன்'' . அது எப்படி  கிருஷ்ணனுக்கு தெரிந்தது  என்று தான்  ஆச்சர்யமாக இருக்கிறது''   என்றாள்  அந்த பெண்.
''நான் அந்த ஜாடிக்குள்  இருந்த பரிசுக்கு  தக்க   பதில் மரியாதை பரிசு (return gift) கொடுத்திருக்கிறான்  கிருஷ்ணன்,
அனைவரும் அசந்து நிற்க ராதை ஓடிவந்து கண்ணனை அணைத்துக் கொண்டாள்.  அப்புறம் ....ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...