Thursday, September 22, 2022

pep talk

 மனோபலம்  -  #நங்கநல்லூர்_J_K_SIVAN 


நாம் மனம்போனபடி போகிறவர்கள். சிலநாள்  திடீரென்று யாரையுமே அல்லது சிலரை நமக்கு பிடிக்காமல் போகும், சிலருக்கு நம்மை பிடிக்காமல் போகலாம்.   மூலையில்  சோறு வேண்டாம் போ  என்று தலையில் கை  வைத்து சுவற்றில் சாய்ந்து உட்காருகிறோம்.  ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு இது.   எதிர்பாராதது கிடைக்கவில்லை என்பதால்,கனவுக்  கோட்டை சரிந்ததால் விளையும்  பிரதி பலன் இது. 
 
கொஞ்சம்  யோசிப்பவர்கள் ஏன் இப்படி என்று சிந்திப்பார்கள்.  மற்றவர்கள் மனமுடைந்து தவித்துக் கொண்டே தான்  இருப்பார்கள். இதனால் உடலும்  உள்ளமும்  எதிர் விளைவுகளை சந்திக்க நேரும்.
 எதிர்மறை எண்ணங்கள் மனதை வியாபித்தால்  இது நிகழும்.

உத்யோகத்தில் அவமதிப்பு,  ப்ரோமோஷன்  இழப்பு, ஏமாற்றம்,  காதலில் தோல்வி,  குடும்பத்தில்  அவமதிப்பு, ஏமாற்றம் நிகழ்ந்தால்  உடைந்து போகிறோம். மனித வாழ்க்கையில் இது ஒரு  தவிர்க்கமுடியாத அனுபவம்.  ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும்  அவரகள் மனோ திடத்தை பொறுத்தது.   ''தலைக்கு மேலே வெள்ளம் போனால்  சாண்  என்ன முழம் என்ன?  உனக்கும் கீழே உள்ளவர் கோடி....  என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..''  . போன்ற பாடல் வரிகள் தெம்பு கொடுக்கும்.

ராஜா ராம் மோகன் ராய் சதி  (உடன் கட்டை ஏறும் வழக்கம்)  தடை சட்டம் வேண்டும் என்று  ஆர்பரித் தபோது  அவர் அம்மாவே  ''போடா நீ என் மகன் அல்ல?  என்று சபித்தாள். 

ஆபிரகாம் லிங்கனை  அவர் மனைவி,  ''உன் மூஞ்சி யை பார்த்தால்  சகிக்கலை.  உன் முகத்தை என் கண்ணில் காட்டாதே'' என்று  பழித்தாள். 

காந்தி  டிக்கெட் இருந்தும்  ரயில் பெட்டியில் இருந்து வெளியே தள்ளப்பட்டார். 

ஒரு தப்பும் செய்யாத  இயேசு சிலுவையில் அறையப் பட்டார்.. கர்மமே கண்ணாயினார் இதற்கெல்லாம் மசிபவர்கள்  இல்லை.  

மேலே  ஒட்டிக்கொண்ட தூசி மாதிரி தட்டிவிட  உறுதி யான மனம் வேண்டும் ஸார் .நாமும்  பாஸிட்டிவாக  இருக்க பழகுவோம்.

If you approve this view, you may circulate to all your friends for their benefit with similar request for social well being of all. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...