Sunday, February 27, 2022

dhakshinamurthi

 தக்ஷிணாமூர்த்தி  ஸ்தோத்ரம்  -    நங்கநல்லூர்   J K  SIVAN 

மௌன குருவே   -  2    


4. निधये सर्वविद्यानां भिषजे भवरोगिणाम् ।
गुरवे सर्वलोकानां दक्षिणामूर्तये नमः ॥४॥

Nidhaye Sarva-Vidyaanaam Bhissaje Bhava-Roginnaam |
Gurave Sarva-Lokaanaam Dakssinnaamuurtaye Namah ||4||

நிதயே ஸர்வவித்யானாம் பிஷஜே பவரோகிணாம் |
குரவே ஸர்வலோகானாம் தக்ஷிணாமூர்தயே னமஃ ||

ஹே,  தக்ஷிணாமூர்த்தே, ப்ரபோ, நமஸ்காரம். ஞானம் என்று எதை எல்லாம் உணர்கிறோமோ அதனைத்தும் உன்னிலே தானே அடக்கம். நீ தானே உலக பந்தம், சம்சார பவ ரோகம் எனும் வியாதிகளுக்கெல்லாம் சர்வ நிவாரண ஓளஷதம் அகில லோக குரு நீ ஒருவன்தானே. தென்திசைநோக்கி அமர்ந்து மௌன ஸ்வரூபமாக அருள்பவன். நமஸ்காரம்.

5. ॐ नमः प्रणवार्थाय शुद्धज्ञानैकमूर्तये ।
निर्मलाय प्रशान्ताय दक्षिणामूर्तये नमः ॥५॥

Om Namah Prannava-Arthaaya Shuddha-Jnyaanai[a-E]ka-Muurtaye |
Nirmalaaya Prashaantaaya Dakssinnaamuurtaye Namah ||5||

ஓம் நம ஃ ப்ரணவார்தாய ஶுத்தஜ்ஞானைகமூர்தயே |
நிர்மலாய ப்ரசாந்தாய தக்ஷிணாமூர்தயே னமஃ ||

''ஹே தக்ஷிணாமூர்த்தி ப்ரபோ, உனக்கு நமஸ்காரம். உன்னை தரிசித்ததும் தான் பிரணவம் எனும் ஓங்கார மந்திரத்தின் உருவம் என்ன என்று புரிகிறது. எல்லாம் ஒன்றே எனும் அத்வைத சித்தாந்தம் புரிகிறது. பரிசுத்த  ஆத்ம ஞானம் எப்படியிருக்கும் என  உணரமுடிகிறது 

6. चिद्घनाय महेशाय वटमूलनिवासिने ।
सच्चिदानन्दरूपाय दक्षिणामूर्तये नमः ॥६॥

Cid-Ghanaaya Mahe[aa-Ii]shaaya Vatta-Muula-Nivaasine |
Sac-Cid-Aananda-Ruupaaya Dakssinnaamuurtaye Namah ||6||

ஹே,  தக்ஷிணாமூர்த்தி ப்ரபோ, எண்ணற்ற எண்ண அலைகள் ஓயாமல் ஒழியாமல் என்னுள் எழுந்து எனை அலைக்கழிக்கும் வேளையில் என் உள்ளுணர்வாக நீ அவற்றை தடுத்து நிறுத்தி, ஓட்டத்தை தடுத்து  அசைவற்ற ஒரு நிலையில் அவற்றை இறுக்கி  நிறுத்தி, என்னை பிரம்மானந்தம் அனுபவிக்க செய்பவனே. கடுகினுள்  ஒரு  பெரிய  கடல் போல ஒரு சிறு விதையில் பரந்த ஆலமரமே,  அணுவுக்குள் அணுவான நீதான்  அண்ட பகிரண்டம்  எல்லாமே, என உணர்த்துகிறாய். மஹா ஈஸ்வரா., மஹேஸ்வரா, அதற்கு தான்  இந்த கல் ஆலமரத்தடி மௌன உபதேசமா? சச்சிதானந்த ஸ்வரூபமே.

ஸ்ரீ ரமண பகவானின் குரல் அக்ஷரமண மாலை ஸ்லோகத்தில் கேட்கிறதா?

''மௌனியாய்க் கற்போன் மலராதிருந்தான் மௌனமிதாமோ வருணாசலா?''
கருங்கல் பாறையைபோல் வாயே திறக்காமல் திரு அருள் புரியாமல் மௌனமாக இருப்பது ருந்தால்,இது உனக்கு அழகோ, அருணாசலா? இந்த மௌனம் உனக்கேற்றதா,அருணாசலா?” 

குற்றமுற் றறுத்தெனைக் குணமாய் பணித்தாள் குருவுரு வாயொளி ரருணாசலா ! அ..மண.மாலை சுலோ 19


அசையாமல் என்னை ஆட்கொண்ட இந்த திரு அண்ணாமலை தனது குரு என்றும் அருணாசலம் என்பதே பகவானின் குரு கிருபையின் மொத்த உருவம் என்கிறார்.

அருணாசலம் தான் பகவான் ரமணரின் குரு. அருணாசலம் எனும் மலை ‘குருவுருவாய்” ஒளிர்ந்து கொண்டிருக்கும்.ஆனால் அது மௌனமாக இருக்கும்.அந்த அருணாசலம் தனது ஒளியினால் நமது குறைகளையெல்லாம் அழித்து நம்மை குணவான் களாக்கிவிடும். அப்படிப்பட்ட அருணாசலமே
கிரியுருவாகிய.கிருபைக் கடலே என்று பகவான் 17 வது சுலோகத்தில் கூறியுள்ளார்.

பகவான் ரமணர் சொன்னபடி ஆதி சங்கரர் தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தை மூன்று பிரிவுகளாக பிரித்து எழுதியிருக்கிறார். தக்ஷிணாமூர்த்தியை ஸ்தோத்திரம் செய்யவேண்டுமென்று சங்கல்பித்து கொண்டார்.ஆனால் மௌனத்தை என்னவென்று துதிப்பது? ஆதலால் சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைப் பிரித்துச் சொல்லி, இவை  யெல்லாவற்றிற்கும் விலக்ஷணமான (வேறுபட்ட) தக்ஷிணாமூர்த்திக்கு நமஸ்காரம் என்று ஸ்தோத்திரம் செய்தார். இதைவிட மௌனத்தைத் துதிப்பது எப்படி?”

எவ்வளவு அருமையான விளக்கம்! மௌனம்  என்பது ஸ்திதி,சிருஷ்டி, நாசம் (லயனம்) எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட நிச்சலனமான ஒரு நிலை.  மௌனம் என்பது ஆத்மஸ்புரணையே! ஆன்மாவின் ஸ்புரணை ஏற்பட்டால் சலனங்கள் அற்றுப் போகின்றன.அங்கு பேரமைதி நிலவும்.

மௌனம் என்று சொல்லிக்கொண்டே தாங்கள் சொல்ல வேண்டியதை எழுதிக் காட்டு கிறார்கள்.அதெல்லாம் வியவகார மில்லையா?( மௌனமாகாது).”

“ வெளியிலிருந்து ஏற்படுகின்ற இடையூறுகளைப் போக்கடிப்பதற்கு ஒருவர் வாங் மௌனம் அனுஷ்டிக்கலாம்.ஆனால் அது தான் யதார்த்தமான மௌனமென்று அவர் நினைத்து விடக்கூடாது.

மௌனம் என்றாலே இடையறாத பேச்சுத் தான். அதை அடைவது என்பதற்கு ஏதோ தனியாக முயற்சி செய்யவேண்டாம்.  அது எப்போதுமுள்ளது. அதை மறைக்கின்ற சித்த விருத்திகளை களைந்தெறிய வேண்டுமே தவிர, அதையடைவதற்கு முயற்சி வேண்டியதில்லை”.

“ சிரவண மனமாதிகள் பாஹ்யம்,ஆந்தரம் என்று இரு வகை.     ஆந்தர சிரவண மனனங்கள் மனம் பக்குவம் அடைந்து ஸ்புரிக்க வேண்டும்.”

“ எப்பொழுதும் ஹ்ருதய குகையில் ‘அஹம்,அஹம்’ என்று பிரகாசிக்கும் ஆத்ம ஸ்புரணையை அறிவதே ஆந்தர சிரவணம்.அதிலேயே நிலையாக நிற்கப் பழகிக் கொள்வது ஆந்தர மனனம்.’நான்’ தானாக நிற்பது நிதித்யாசம்.”

இதெல்லாம்மே ரமண மஹரிஷியின் கருத்துக்கள். பகவான் அருளிச்செய்த ‘ஹ்ருதய குஹர மத்யே’ எங்கிற சுலோகத்தில் தெளிவாக கூறியுள்ளார்:

ஹ்ருதய குஹர மத்யே கேவலம் ப்ரஹ்ம மாத்ரம்
ஹ்யஹ மஹமிதி ஸாக்ஷாத் ஆத்ம ரூபேண பாதி !!
ஹ்ருதி விச மனசா ஸ்வம் சின்வதா மஜ்ஜதா வா !
பவன சலன ரோதாத் ஆத்மனிஷ்டோ பவ த்வம் !!

“இதயமாம் குகையின் நடுவில் ஏகப் பொருளாக பிரம்மம் ,”நான்,நான்”என ஆத்ம ரூபமாக ஒளிர்கிறது.மனதினால் தன்னை யெண்ணி இதயத்துள் சென்றோ, மூச்சையடக்கி அதனால் மனதை இதயத்தினுள்சூழ்ந்திட செய்தோ, இதயத்துள் ஆத்மாவில் நிஷ்டமாவாய்” எங்கிறார் பகவான்.

‘நான்’ பூரணமாக சரணகதி அடைவது தான் மௌனம்;அங்கு பூரண சாந்தி நிலவுகிறது.’மௌனம்’ என்பதை வார்த்தைகளால் வியாக்கியானிக்க முடியாது..மௌனத்தில் எந்த சிந்தையும் கிடையாது.நிச்சலனமான மௌனத்தை நிலை பெறச் செய்ய முடியும் என்றால் அது தான் முக்தி.

ஆதி குருவான தக்ஷிணாமூர்த்தி மௌனத்தையே தனது உபதேச மொழியாகக் கொண்டிருந்தார். பகவான் ரமணரும் அதே வழியில் தான் வந்தவர்.

பகவானிடம் ஒரு பக்தர்     “ சுவாமி,  மௌனம் எப்படி சக்தி வாய்ந்த உபதேச மொழியாக முடியும்?” என்றார்
''ஞானியொருவன் எந்த குகையில் உட்கார்ந்திருந்தாலும் அவரிடமிருந்து வருகின்ற ஆன்மீக அலைகள் எல்லோரையும் அவரிடம் ஈர்க்கும். அவர் பேச வேண்டியதில்லை, குரு ஆன்மீக ஒளியைக் காட்டுபவர். மௌனத்திலிருந்து தான் பேச்சே உருவானது. பேச்சு என்பது மௌனம் சிந்தனையாகி பிறகு வார்த்தைகளாக வெளிவருவது.
விவேகானந்தர் ''மௌனம் தான் சக்தி  வாய்ந்த பிரார்த்தனை” என்பார்..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...