Monday, February 21, 2022

surdas

 


ஸூர்தாஸ்  -  நங்கநல்லூர்   J K  SIVAN 

29.  ஒன்றேகுலம்

எழுதுவது  பேசுவது எல்லாம் என்ன?   ஒரு மனிதனின்  மனதில் எழும் எண்ணங்கள் வெளிப்பட தயாராக நிற்கும்போது, அதை அவனுக்குத் தெரிந்த மொழியில் மற்றவர்க்கு, அது ஒரு  சிலரோ, பலரோ, அவர்களுக்கும் தெரிந்த  புரிந்துகொள்ளமுடிந்த  மொழியில், வழியில், தருவது தானே 

எனக்கு எழுத பிடிக்கும். எவ்வளவோ நல்ல விஷயங்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது.  அதையெல்லாம்  எழுத  ஆசையாகவும் இருக்கிறது.   ஆனால்........ உடல் (83+) ஒத்துழைக்க வில்லையே, நேரமும் போதவில்லையே,   என்ன செய்வேன்?  உள்ளமும் உடலும் எப்போதும் அரசியலும்  ஆன்மீகமும் போல விலகி தான் இருக்கிறது. ஒன்று சேர்க்க மன உறுதி வேண்டும். அதைத் தான் வாழ்க்கை பூரா தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஸூர்தாசரைப் போல் நாம் கனவில் கூட ஆக முடியாதே. அவருக்கு முன்னால்  கிருஷ்ணன் குழந்தையாக  அமர்ந்து அவரை ரசிக்கும் அழகு எந்த மஹாநுபாவன் மனதிலோ உருவாகி   அதை அவன் அற்புத சித்திரமாக நமக்கு  கொடுத்திருக்கிறான். ஒவ்வொரு முறையும்  ஸூர்தாஸ்  எழுதும் போதெல்லாம்  நான் அதை  என் எழுத்தோடு இணைத்து அனுப்புகிறேன்.   ஏனோ  ஒருவரும்   அந்த படத்தைப் பற்றி இதுவரை ஒரு வார்த்தை கூட  சொல்லவில்லையே...?  ஏன்  அந்த கிருஷ்ணன் அழகை வர்ணிக்க வார்த்தை இல்லையா?  கிருஷ்ணன்  அலுத்துவிட்டானா?  அப்படி இருக்க முடியாதே. அவன்  பல துறைகளில் நேர்த்தி ஆயிற்றே?

ராமனையே  மனதில்  கொண்டவன்  எந்த  ஜாதியாக, மதமாக, குடும்பமாக, பெயர் கொண்டவனாக, இருந்தால் என்ன? ராமபக்தி சாம்ராஜ்யத்தில் எல்லோரும் ஒன்றே. (ராமபக்தி சாம்ராஜ்யம் என்ற தியாகராஜ கீர்த்தனை பற்றி தனியாக எழுதுகிறேன்)

அனைவரும்  சமமே. அரசனும் ஆண்டியும் ஒன்று தான். சிவன் எந்த குலம் , அவனுக்கு ஜாதி எது? பெற்றோர் யார்? பிரம்மாவுக்கு??

அதனால் தானே நீ ராமனாக வந்த போது ரகு குலத்தில் திலகமாக அரசனாகவும் அடுத்து என் கிருஷ்ணனாக அவதரித்த போது ஆயர்பாடியில் மண்ணில் புரண்டு விளையாடிய ஒரு கோபனா கவும்  அவதரித்து  எல்லாமே சமம் என்று வாழ்ந்து காட்டியவன். அரன் அயன் ஆகியோரே இவ்வாறு எனில் நாம் எதற்கு வித்யாசப் பட வேண்டும்? 

ஒரு ரகசியம் சொல்கிறேன். ''நான், எனது என்ற கர்வம், அகம்பாவம் பிடித்தவன் எவனாயிரு ந்தாலும், அவன் மனதில் ராமன் குடி புக  மாட்டான். இதயத்தில் இடம் பிடிக்க மாட்டான்.  இது தெரிந் துதானே, இந்த ஸூர் தாஸ்,  நான்,   எனது ஆணவம், அகந்தை, எல்லாவற்றையும் இறுக்கிக்  கட்டி, பெரிய மூட்டையாக கண் காணாமல் வீசி எறிந்து விட்டேன்.  இனி நிம்மதி ஒன்றே''  என்கிறார்.  ஹிந்தியில் என்ன பாடல் என்று தெரியவில்லை.

Whatever is a devotee's
caste, clan, family, or name,
Rama's love for him is the same.
Beggar and king
are one to him.
Say, of what caste could be
Brahma or Shiva?
Rama will never abide
in the egotistic man's heart
therefore his slave, Suradasa,
has abandoned pride.
Rama was born in the Raghu clan
Krishna found his home in Gokula.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...