Tuesday, February 15, 2022

AVVAIYAR

 பாட்டி சொல்  தட்டாதே     - நங்கநல்லூர்  J K  SIVAN  ---


எனக்கு  கெட்டிக்கார  பாட்டி  ஒளவையாரை ரொம்ப பிடிக்கும்.  என்ன அறிவு. ஞானம், தெள்ள தெளிவான தமிழ் வார்த்தைகள். தங்கம் வைரம்  வைடூர்யம் போன்ற  வார்த்தைகள். காலத்தால் அழியாத  கருவூலம் ஒளவையார் பாடல்கள்.

'' முத்து,  நீ கொஞ்சமும் தயக்கப்படாதே. எவ்வளவு பெரிய தப்பு, குத்தம் பண்ணினாலும் உன்னை காப்பாத்த ஒரு அருமையான வக்கீல் சோமு தான். அவன் கிட்டே போ. கொஞ்சம் பீஸ் ஜாஸ்தி. மணிக்கு இருபதாயிரம்  போல கேட்பான். நீ சம்பாதிச்ச கோடிகளை காப்பாற்றிக்கொள்ள சில லக்ஷங்கள் போனால் என்ன?  பேசாமல்  அவன் கிட்டேயே  போ .

வக்கீல் அறிவானந்தன்  இப்படி  சொன்னதும் மோசடி முத்துவுக்கு தைர்யம் வந்தது. அவன் கண் பார்த்ததை  கை கபளீகரம் பண்ணி விடும்  கேடி.   பட்டப்பகலில் எல்லோருக்கும் தெரிந்தே திருடும் கோல்மால் பேர்வழி. தான தர்மம் பண்ணுபவன் என்று காசு கொடுத்து எல்லோரையும் சொல்ல  வைத்து சில போட்டோக்கள் போட்டு பத்திரிகையில் அடிக்கடி சத்தியத்தை தவிர வேறு எதுவுமே எனக்குப்  பேச தெரியாது'' என்று  அறிவிப்பான்.   கோர்ட்டில் கீதை புஸ்தகத்தை கையில் கொடுத்ததும் கூசாமல் பொய் சொல்வான். அவன் எப்படியெல்லாம் பொய் சாட்சியங்கள் கொண்டு வர வேண்டும், எப்படி தஸ்தாவேஜுகளை காசு  கொடுத்து  மாற்றவேண்டும் என்று பாடம் பாடமாக சோமு சொல்லிக்  கொடுப்பான் . நாட்டில் எத்தனையோ முத்துக்கள் சோமுக்கள் இருப்பதால்  தான் நாம்  குட்டிச்சுவரில் முட்டிக்கொள்ளும் கழுதைகளாகி விட்டோம்.

கோர்ட் என்பது ஒரு நீதி தர்ம ஸ்தலம். நியாயஸ்தலம். அங்கு பொய் அதர்மம் அநியாயம் என்பதெல்லாம் வாசல்  படியே மிதிக்கக்கூடாது என்று   ஜட்ஜ் ஆத்மநாதன் மாதிரி நிறைய   பேர் சொல்வார்கள்  .அவர்கள் தான் போய் விட்டார்களே.

எதற்கு இதெல்லாம் இப்போது நினைவுக்கு வந்தது ? அதுவும் நேற்று? பேப்பரில் ஏதாவது படித்தேனோ?..  தினமும்  பேப்பரில் இது போல் சம்பவம் தானே  போடுகிறார்கள்.  இந்த சந்தர்ப்பத்தில் தான்  பாட்டியின்  அருமையான  ஒரு  பாடல்  சின்ன வயதில் படித்தது   நினைவுக்கு வந்தது. அதன் வேகம் உடனே  எழுத வைத்தது.

அந்த காலத்தில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனைகள் மிக கடுமையாக இருந்தன. அரசன்  மாறுகால் மாறு கை வெட்டினான். மதுரை வீரன் படத்தில் வருமே அதுபோல். தூக்கில் தொங்க  விட்டார்கள். தெருவெல்லாம்  எங்கும்  பெரிய  பெரிய  ஆலமரம், புளியமரம்   வேப்ப  மரங்கள் இருந்ததே.   கழுமரத்தில் ஏற்றி கொன்றார்கள். நினைத்தாலே  நடுங்க வைக்கும் தண்டனை இது.  ஆசாமியை  பிளப்பது. 

அப்போது  யாருமே தப்புகள் சொல்லவோ, செய்யவோ, நினைக்கவோ கூடாது என்று பள்ளியில் ஆசிரியர்கள் போதித்தார்கள். இப்போதுள்ள  சில ஆசிரியர்கள் சிறிய குழந்தைகளையே பாலின கொடுமைகள் செய்பவர்களாக இருக்கிறார்களே. என்னத்தைச்  சொல்ல?  அக்ரமத்தின் உச்ச கட்டம்.

நல்வழி காட்டி புத்தி சொல்லும்பெரியவர்கள் வீட்டிலும் இல்லை வெளியிலும் இல்லை. ஆகவே தான்  நாம்  அக்காலத்தில்  ஒளவையார் போன்றவர்கள் சொன்னதை அடிக்கடி  ஞாபகப் படுத்திக்க கொள்ள வேண்டி இருக்கிறது.   பாட்டியின்  பாடல்கல்  ரொம்ப ரொம்ப எளிமையானவை. சுலபமாகிட்ட அர்த்தம்  புரிபவை.

"வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை."

கோர்ட்டிலோ, பொது இடங்களிலோ, நியாயம் சொல்லும் பஞ்சாயத்திலோ வீட்டிலோ , பிறருக்கு,  ஏன் நாட்டுக்கே கூட துன்பம் விழைக்கும் படியான  பொய் வழக்கு, பொய் சமாச்சாரங்கள், ஏமாற்று வித்தைகள் காட்டினால், பொய் சாட்சி பூதலிங்கங்களாக இருந்தால், என்ன ஆகும் தெரியுமா?

"வீட்டில் பேய் பிசாசு வந்து சேரும், அவலட்சணமான, துரதிஷ்டமான வெள்எருக்கம்பூ, சப்பாத்தி கள்ளி படர்ந்து வளரும், துர் தேவதையாக அறியப்படும் மூதேவி வந்து வாழ்வாள், பாம்புகள் வந்து குடி புகுந்து விடும்" 
அப்படியா? ஒளவையார் சொல்படி பார்த்தால்  இன்று நிறைய  வீடுகளில் மூதேவி அம்மாள்  அல்லவோ வாசம் செய்யவேண்டும்.  எங்கும்  வெள்ளெருக்கு மயமாக   கண்ணில் படவேண்டும்,   பாம்புகள் எங்கு பார்த்தாலும்   சீறவேண்டுமே.. வேதாளத்தை பார்த்ததே  யில்லையே  என்ற குறையே மனதில் இருக்காமல்  சர்வவியாபியாக  நிறைய கண்ணில் படவேண்டுமே .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...