Wednesday, December 30, 2020

BAGAVAN RAMANA

 


 பகவான் ரமணர் 



                        சிறுத்தை விஜயம்.      - J K SIVAN

இன்று  பகவான்  ரமண மஹரிஷியின்  141வது  ஜெயந்தி.  டிசம்பர் 30  1879 ல்  திருச்சுழியில் பிறந்த மஹான்.  மகரிஷி ரமணர் எல்லா உயிர்களிடத்தும் ஒரே மாதிரி அன்புடையவர். அவருக்கு ஆண் பெண், ஜாதி, வயது, சமூக அந்தஸ்து வித்யாசங்கள் கிடையாது. பறவைகள் மனிதர்கள் எல்லாமே ஒன்று தான்.  அவரைப்பற்றிய  ஒரு சிறிய சங்கதி ஒன்றை மட்டும்  சொல்லி இந்த  ஜெயந்தியை அவருக்கு நமது சாஷ்டங்கள் நமஸ்காரத்தை  செலுத்துவோம்.

அவரைப் பார்க்க ஒரு வியாபாரி,சென்னை, என்கிற அப்போதைய  மெட்ராஸிலிருந்து   ரயிலில் வந்தார். அவர்  பெயர்   ரங்கசாமி அய்யங்கார்.  ரமணர் ஜாதி, மதம், மொழி,  இதற்கெல்லாம் அப்பாற்பட்ட மகரிஷி.  பரம  ஞானி அல்லவா. 

 1906ல் பச்சையம்மன் கோயிலில் திருவண்ணாமலையில்  அப்போது   பகவான்  வாசம் செய்து கொண்டிருந்தார்.  அப்போதிலிருந்து ஐயங்காருக்கு பகவானுடன்  ஒரு பிடிப்பு,  தொடர்பு. அடிக்கடி திருவண்ணாமலை வருவார்.  தரிசனம் செய்து விட்டு  போய்விடுவார் சிலநாட்கள் பேசக்கூட மாட்டார் மகரிஷி.

அக்கால கட்டத்தில் தமிழகத்தில் பல பகுதிகளில் பிளேக் PLAGUE எனும் கொள்ளை நோய் பல உயிர்களை பலி கொண்டது. இப்போது கொரோனா மாதிரி. திருவண்ணாமலை அதற்கு தப்ப வில்லை. ரங்கசாமி அய்யங்கார் ரயிலிலிருந்து திருவண்ணாமலையில் இறங்கும் போது
 நல்ல உச்சி வெய்யில். நெருப்பாக கொதித்தது. நடந்து வந்து சேர்ந்தார். பகவான் ரமணர் அவரை மலர்ந்த முகத்தோடு வரவேற்றார்.

ஆஸ்ரமத்தில் அவரை ''ஐயங்கார்வாள் சீக்கிரம் போய் ஸ்னானம் பண்ணிட்டு வாங்கோ நல்ல பசியோடு வந்திருப்பீர்கள். பக்கத்திலேயே ஒரு குளம் இருக்கு. சுகமாக சில்லென்று ஸ்னானம் பண்ணிட்டு வாங்கோ. போஜனம் ரெடியாக இருக்கு''  என்று  ஆஸ்ரமத்தில் உள்ளவர்கள்  உபச்சாரம் பண்ணினார்கள்.   அவர் தான் வழக்மாக வரும்  பக்தர் ஆயிற்றே.  குளம் பச்சையம்
மன்   கோவில் வாசலிலேயே இருந்தது. சுற்றிலும் மரங்கள், ஒரு காடு மாதிரி. மனித நடமாட்டம் அதிகம் கிடையாது.

திடீரென்று கோயிலில் அமர்ந்திருந்த பகவான் விருட்டென்று எழுந்தார். கோயிலை நோக்கி நடந்தார். அதன் பக்கமாக இருந்த குளக்கரை சென்றார். எதற்கு பகவான் இப்படி கிளம்பி போகிறார்? எல்லோருக்கும் ஆச்சர்யம். காரணம் தெரியவில்லை.  ஒருவேளை 
அவர் இயற்கை உபாதைக்காக ஒதுங்க  எழுந்து போகிறாரோ?   இதோ  விடுவிடுவென்று  பகவான் குளக்கரை வந்துவிட்டார். அவர் வந்த நேரத்தில் ஒரு பெரிய சிறுத்தைப்புலி காட்டிலிருந்து தாகத்திற்கு தண்ணீர் குடிக்க குளத்திற்கு வந்தது.

''சீக்கிரம் தாகம் தீர்த்துக்கொண்டு போய்விடு. அப்புறம் நிதானமாக வா. ஐயங்கார் உன்னை பார்க்கவில்லை. வடக்கு பக்கம் குளிக்கிறார். பயப்படுவார்''

சிறுத்தைப் புலி  எதிரே நின்ற  பகவானை பார்த்ததும் நின்றது. பிறகு  மெதுவாக அவரைக் கடந்து  குளத்துப்பக்கம் சென்று  நீர் பருகிவிட்டு பூனைக்குட்டி மாதிரி சிறுத்தை   வந்தவழியாகவே  காட்டிற்குள் சென்றுவிட்டது.  அது  செல்லும் வரை பகவான் பார்த்துக் கொண்டிருந்தார். 

பிறகு  குளத்தங்கரையில்  ஐயங்கார்குளித்துக் கொண்டிருந்த பக்கம் சென்று  அவரை அழைத்துக்கொண்டு கோயி லுக்குத்  திரும்பினார்.

''இங்கே வனவிலங்குகள் நடமாட்டம் உண்டு. சிலது வெயிலுக்கு நீர் பருக வருவது வழக்கம். வாருங்கள் போகலாம்'' என்று  மட்டும்  அய்யங்காரிடம் சொன்னாரே தவிர,  இதை நான் எழுதும்வரையில்  அய்யங்காருக்கு  சிறுத்தை  அவர் அருகே வந்து தண்ணீர் குடித்துவிட்டு சென்ற சமாச்சாரம் தெரியாது.   தெரிந்திருந்தால்  புலியை  விட கிலியே  அவரைக் கொன்றிருக்கும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...