Tuesday, December 29, 2020

ARDHRA DHARSAN

 

30.12.2020   '' ஆ...  ருத்ரா!''  -   J K  SIVAN 

 பனி படர்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்க சீரிஷம் எனும் மார்கழி மாதத்தில், ஆர்த்ரா நட்சத்திரம் இணையும் போது “கர்மா தான் பிரதானமே தவிர பகவான் பெரியது இல்லை'' என்று கூறிய சாங்கிய யோகிகளின் அறியாமையை போக்குவதற்கு ஈஸ்வரன் முடிவெடுத்தான். தனக்கு எதிராக ஏவப்பட்ட  யானையைக் கொன்று அதன் தோலை தன் ஆடையாக்கி, உடுக்கு, அக்னி , அரவம் முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்  தான் மார்கழித் திருவாதிரை.அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம். 

மார்கழி திருவாதிரை என்றாலே என் காதில்  ரீங்காரம் செய்வது கணீர்  என்ற  S .G  கிட்டப்பா குரல் தான்  எத்தனை வருஷங்களுக்கு முன் ஒலித்து  இன்னும்  நினைவில் மறையாத குரல்.  ''மார்கழி மாதம் திருவாதிரை நாள்  வரப்போகுது  ஐயே....'' என்ற  கோபாலக்ரிஷ்ண  பாரதியாரின் நந்தனார் சரித்திர  பாடல்.  இப்போது கேட்க  வழியில்லை.  முன்பெல்லாம்    அகில இந்திய ரேடியோவில்  வைப்பார்கள். எங்கு தேடியும்  அந்த பாடலை மீண்டும் கேட்கவழியில்லை.

மார்கழி திருவாதிரையில்  நடராஜரின் திருநடனம் கண்டால், ஆருத்ரா அன்று ''ஆஹா ...ருத்ரா' என்று, மூக்கில் விரலை வைக்கச் செய்யும். என்ன நேர்த்தியான அழகு நடராஜனின் அங்க வளைவு. அத்தகைய அழகு கோலத்தில், அவர் காட்சி தருகிறார்.அவர் இடது காலை,   ஏன்  தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்?  மனைவி மேல் கொண்ட பாசத்திற்காக. வாம பாகி அல்லவா அவள்? .  இது போன்ற  அழகுச்சிலையை உலகில் எங்கும் காணமுடியாது என்பதால் தான் திருடி விற்று கண்டு  பிடிக்கப்பட்டு இந்தியாவுக்கு சிவபுரம் நடராஜர் சிலை மீண்டு வந்தது.  

ஆனந்தமாக இருக்கும் போது தான் நாம் வீட்டில்   ''தையா தக்கா''  என்று ஆடுகிறோம். ஆனந்தம் என்றாலே நடனம். சிவபெருமான் சதா ஆனந்தத்தில் திளைப்பவர். எனவே தான் ஆனந்த நடேசன்,   நடனத்துக்கு ராஜன் ,நடராஜன்.   ஆடியபாதம்,  ஆடலரசன், ஆடல்வல்லான், கனகசபையில் ஆடும்  கனகசபேசன்,  என்றெல்லாம் பெயர்.   மொத்த 108 நடனங்களில் 48 நடனங்கள், சிவன் தனியாக ஆடியது என புராணங்கள் சொல்கிறது. 

மார்கழி திருவாதிரை அன்று சிதம்பரத்தில்  ஆடியது பிரசித்தமான ஆனந்த நடனம். அதைத்  தரிசிக்க அநேக லக்ஷம் பக்தர்கள் சிதம்பரத் துக்கும்  முடியாதவர்கள் மற்ற  எல்லா சிவன் கோவில்களுக்கும் மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்) போவார்கள்.  கண்கள் கோடி வேண்டாமா கபாலியைக் காண!.  களிப்பு என்றால் சந்தோஷம். திருவாதிரை அன்று சிவனுக்கு நைவேத்யம் களி.  களியும்  நடனமும் தான் களிநடம் புரியும்  கனகசபாபதி.

திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட நாராயணனு க்கு ஒருநாள் அளவற்ற மகிழ்ச்சி. முகம் முழு நிலவானது. ஆதிசேஷனுக்கு என்ன காரணம் திடீரென்று நாராயணனுக்கு இவ்வளவு சந்தோஷம் என்று புரியவில்லை.

''ஹரி, எனக்கும்  எதனால்  இந்த ஆனந்தம் என்று சொல்லுங்களேன்?'' என்கிறார்

''சேஷா, அங்கே பார் சிதம்பரத்தில் ஈசன் நடராஜராக இன்று திருவாதிரை நாளில் ஆடும் திருத் தாண்டவத்தை'' என்றதும் . ஆஹா  இதோ  சென்று பார்க்கிறேன்....  ஆதிசேஷன் ஓடுகிறார்

ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் மாறி, பதஞ்சலி முனிவர் ஆகி தவமிருந்து நடராஜரின் திருநடனத்தை காண வேண்டி, ஈசனை நோக்கி தவம் புரிந்தார்.

‘பதஞ்சலி’.... மெதுவாக பாசத்தோடு  ஒரு குரல்  கேட்டு ஆதிசேஷன்  கண் திறக்க, எதிரே சாந்தஸ்வரூபனாக சர்வேஸ்வரன்.   பதஞ்சலியின்  இரு கைகள் தொழுதன .

‘பதஞ்சலி! உன்னைப் போலவே, வியாக்ர பாதர் என்பவரும் எனது நடனம் காண தவம் செய்கிறார். எனவே உங்கள் இருவருக்குமே சிதம்பரத்தில் நடேசனாக காட்சி தருகிறேன்'' என்கிறார் தில்லை சபேசன்.

மார்கழி திருவாதிரை சிவனுக்குரிய நட்சத்திரம்.  அன்று இருக்கும்  விரதம்  சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.

தாருகாவன ரிஷிகள் ஒரு மார்கழி திருவாதிரை அன்று புரிந்த   யாகத்தில் வெகுண்டெழுந்த ஒரு மதயானை, முயலகன், உடுக்கை, மான் தீப்பிழம்பு ஆகியவற்றை சிவன் மீது திசை திருப்ப, சிவனால் கஜன்  கொல்லப்பட்டு அவனது சருமத்தை ஆடையாக அணிகிறார். உடுக்கையும் , மானும், தீப்பிழம்பும் அவர் கரங்களில் ஐக்கியமாகி, முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடியது தான் ஆருத்திரா தரிசனம்.

சுருக்கமாக  ஒரு குட்டிக்கதை: 

சேந்தனார் என்பவர் காட்டிற்கு சென்று விறகு வெட்டி, விற்று ஜீவனம் செய்பவர். சிதம்பரம் அருகேயுள்ள ஓர் கிராம வாசி. சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.
சோதனையாக ஒரு நாள் விடாமல் மழைபெய்து விறகுகள் ஈரமாகி விற்பனையாக வில்லை. வருமானம் இல்லதாதால் வீட்டில் சமைக்க அரிசி வாங்க காசு இல்லை. வேறு வழி இல்லாமல், வீட்டில் இருந்த கேழ்வரகில் களி செய்து அதிதியாக யாராவது ஒரு சிவனடியாரை எதிர்பார்த் திருந்தார். நேரம் ஓடிக்கொண்டி ருந்ததே தவிர யாரும் தென்படவில்லை. ஏமாற்றத்தாலும் பசியாலும் சேந்தனார் வாட,   தில்லை நடேசன் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் வருகிறார். 
''வாருங்கள்'' என்று முகமும் அகமும் மகிழ கேழ்வரகு களியை சிவனடியாருக்குப் படைத்தார். வந்தவரும் களியை 

''ஆஹா பிரமாதம் என்று உண்டு விட்டு, மீதி இருந்ததையும் ''அடுத்த வேளை சாப்பிட இது வேண்டும் '' என்று எடுத்துச் சென்றுவிட்டார் சிவனடியார்.   சேந்தனார்  அன்று  கம்பல்சரியாக  COMPULSORY முழு உபவாசம் ! .

சிதம்பரம் ஆலயத்தில் அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் கர்பகிரஹத்தை திறக்க, ''இது என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கேழ்வரகு களி சிந்தி கிடக்கிறது. யாருடைய வேலை இது? '' 
விஷயம் ராஜா காதுக்கு எட்டியது . ராஜாவுக்கு ஏற்கனவே கனவில் ஒரு சேதி வந்து ஆச்சர்யத்தில் இருந்தான். 

''எனக்கு திருவாதிரை அன்று சேந்தன் வீட்டில் அருமையான கேழ்வரகு களி கிடைத்தது '' என்று நடராஜர் கனவில் ராஜாவிடம் சொல்லி இருந்தா ரே.   அன்று  சிதம்பரம் நடராஜப் பெருமான் தேர்த் திருவிழாவில் ராஜா மும்முரமாக இருந்ததால் சேந்தனைத் தேட இன்னும் ஆள் அனுப்பவில்லை. ஆனால் அந்த தேர்த்திருவிழாவிற்கு சேந்தனாரும் வந்திருந்தார்.

நடராஜனைத்  தேரில் ஏற்றியாகிவிட்டது. ராஜாவும் மற்றவர்களும் தேர் வடம் இழுக்கி றார்கள். மழையினால் சேற்றில் தேர் சக்கரம் அழுந்தி   தேர்  இம்மியும்  நகரவில்லை. ராஜா வருந்தினான்.

அசரீரி ஒன்று அப்போது எல்லோருக்கும் கேட்டது "சேந்தா , நீ பல்லாண்டு பாடு. தேர் நகரட்டும் "

''நானோ ஒரு விறகுவெட்டி,  எனக்கு  பாடவே  ஒன்றும்  தெரியாதே, எப்படி சிவனுக்கு பல்லாண்டு பாடுவேன்'' என துடித்து சிவனை வேண்டினார் சேந்தனார். 

அடுத்த கணமே  சிவனருளால்  தன்னை அறியாமல் சேந்தனார் கணீர் என்று உரக்க பாடினார். நமக்கு அதிர்ஷ்டம். நல்ல பாடல்கள் 13 கிடைத்திருக்கிறது.  பன்னிரு திருமுறையில் இருக்கிறது.

"மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" ............பல்லாண்டு கூறுதுமே" என்று முடிபவை.  ஒரு நாள்  முடிந்தபோது இதை முழுதும்  எழுதவேண்டும்.

பாடி முடித்தார் சேந்தனார். தேர் நகர்ந்தது. அவர் கால்களில் அரசரும், தில்லை அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். ''ஐயா எனக்கு கனவில் சிவன் சொன்னார் '' என்று விஷயம் சொல்ல அனைவரும் மகிழ்ந்தார்கள். அன்றுமுதல் இன்றுவரை திருவாதிரை நாளில் நடராஜருக்கு களி நைவேத்தியம். உளுந்து மாவினால் செய்த களி. 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என்ற வார்த்தை இதனால் கிடைத் தது  பக்தர்களின் குரல் விடியற் காலை யில் ஓம் நமசிவாய, சிவ சிவ, ஹர  ஹர  மகாதேவா''   என்று செவிக்கினிய சப்தமாக  எங்கும் ஒலிக்கும். பரமேஸ்வரனுக்கு உகந்த நாள் மார்கழி திருவாதிரை . 

சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடப் போகிறது. அவரது தந்தை, மிருகண்டு ரிஷி மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வந்து விட்டான்.   தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற் காக, மார்க்கண்டேயன்   சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டான் . லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார்.  கால சம்ஹார மூர்த்தியாக திருக்கடையூரில் இன்றும்  நாம்  காலகாலனை தரிசிக்கிறோம்.  ஷஷ்டி அப்த பூர்த்தி,  பீமரத சாந்தி, சதாபிஷேகம் எல்லாம் பண்ணிக்கொண்டு நீண்ட நாள் வாழ்கி றோம். சிவனின்  திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.   

 ''திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பார்கள்.  எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்  களி தின்று மகிழ்கின்றனர். திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது  என்பதால்  சிதம்பரத்தில் அளவற்ற  பக்தர்கள் கூட்டம் அம்மும்.

மஹா  பெரியவா குரல்  காதில் ஒலிக்கிறதே:   
''வருஷததுக்கு ஒருநாள்,   மார்கழி மாச விடிகாலையில்,  பௌர்ணமி சந்திரன் திருவாதிரை நக்ஷத்திரத்தில் இணைந்த  மகத்தான நாள் ஆருத்ரா வில்  நடராஜன்  தரிசனம் தருகிறான்.  ஆர் த்ரா என்றால்  ஈரமாக, சொட்ட சொட்ட, என்று அர்த்தம்.  இயற்கை யாகவே  பனி த்துளிகள் சொட்டும் போது  இளஞ் சூரியன்  கதிர்கள் வெம்மையை மிதமாக  சுகமாக  அளிக்கும்.  பவுர்ணமி குளிர்ச்சியும்  பனித்துளியும் என்ன பொருத்தம்,,  அமுதைப் பொழியும்  நிலவே.. என்று பொருத்தமாகத்தான் பாடி இருக்கிறார்கள்...சிவனுக்கு அபிஷேகமாக வானத்திலிருந்து பரிசுத்தமாக பொழியும்.  நமது மனமும் ஆனந்தத்தில் குளிரும்.  உலக  ஜீவராசி கள் மேல் அன்பும்  கருணையும் பொழி யும். இரக்கம் தயாளம் பிறக்கும்.  பரமேஸ் வரன்  ஆனந்த தாண்டவன் ஆடுவான்.  இடது பதம்  தூக்கி நம்மை ஆளும் அழகே அழகு.  எல்லோரும்  விடிகாலை எழுந்து  குளித்து  நடராஜனை  வணங்குவோம். ஆராதிப்போம்''


மார்கழி பஜனை இப்போது  குறைந்துவிட்டது மனதுக் கு வருத்தத்தை அளிக்கிறது.

சிதம்பரம் நடராஜா  கோவில்  மணியோசை

 கேட்போம்   

  
https://youtu.be/POlxPfeWe1Q

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...