Monday, August 31, 2020

WORRY OF DEATH

 அந்த முப்பது நாள் J K SIVAN

கோபன்னாவுக்கு வாழ்க்கை திடீரென்று ஒருநாள்வாழ்க்கை வெறுத்து விட்ட

து. மரகத பவனில் ஐந்து இட்டலி சாம்பார் சட்னியோடு சாப்பிட்டுவிட்டு ஆறாவது இட்டலியை விட்டெறிந்தான். அந்த அவசரத்திலும் காப்பியை விழுங்கிவிட்டு சைக்கிளை மிதித்துக்கொண்டு தெருமுனையில் இருந்த ப்ரவசன மண்டபத்துக்கு சென்றான். அங்கே ஒரு துறவி வந்திருப்பதை முதல் நாளே தெரிந்து கொண்டிருந்தான்.

நல்ல கும்பல். மெதுவாக உள்ளே சென்றுவிட்டான். பழம் போல் பளபளவென்று ஒளி வீசும் முகம் வெண்ணிற தாடி மீசைக்கு இடையே தெரிந்தது. நெற்றியில் பட்டை யாக வெண்ணீறு. கூர்மையான கண்கள். வயது எவ்வளவு என்று கணிக்கமுடியாத உடம்பை காவித்துணி மறைத்திருந்தது. குண்டு குண்டாக கழுத்து நிறைய ருத்ராக்ஷம்.
தடாலென்று கீழே விழுந்து வணங்கினான். சாமியார் தமிழ் தெரிந்தவர்.

''என்னப்பா உனக்கு கண்ணில் சோகம்? விசனமா இருக்கே ?''

''என்ன சொல்வேன் சாமி, வியாபாரத்தில் சாமர்த்தியமா கை நிறைய தான் சம்பாதிக் கிறேன். ஒரு சொந்த வீடு, சைக்கிள் இருக்கு. மனசிலே தான் நிம்மதியே இல்லை. திருப்தியே இல்ல. ஒண்ணு மேலே ஒண்ணா நிறைய பாவம் செய்துகிட்டே வரேன்னு மனசிலே ஏதோ அடிக்கடி சொல்லுது. அதே எண்ணம் திரும்ப திரும்ப வந்துகொண்டே இருக்கு. ரொம்ப தொந்தரவா இருக்கு. நீங்க ஊருக்கு வந்திருக்கிறது கேள்விப் பட்டேன் . உங்க கிட்டே இதுக்கு ஏதாவது அறிவுரை கேட்க தான் வந்தேன்.''

துறவி சிரித்தார். ''உண்மையை சொன்னா தைரியமா எடுத்துக்கு வியா?'''
'சரிங்க சுவாமி ''
''உனக்கு இன்னும் இந்த தொந்தரவு 30 நாளுக்கு தான் அப்பா, அப்புறம் 31வது நாள் ஒரு தொந்தரவும் உனக்கு கிடையாது.'
'''சந்தோஷமான விஷயம் இது சுவாமி. எதுக்கு இதைப் போய் தைரியமா எடுத்துக் கோன்னு சொல்கிறீர்கள்?'
'''30 நாளுக்கு அப்புறம் என்னன்னு நீ கேட்கலே நான் சொல்லலியே?'
'''சொல்லுங்கோ சுவாமி''
''நீ செத்துப்போய்டுவே. அப்புறம் உனக்கு ஒரு தொந்தரவும் இல்லைன்னு தான் சொன்னேன். போய்ட்டுவா'
'''ஐயோ'' என்ன சொல்றீங்க சுவாமி''

வீட்டுக்கு ஓடினான் கோபன்னா. அவசர அவசரமா என்னென்னவோ செய்தான். ஒவ்வொரு நாளும் காலண்டர் சீட்டை கிழிக்கும்போது பகீர் என்று வயிற்றில் ஒரு சுழற்சி. ஆளே மாறிவிட்டான். எப்போதும் ஏதோ ஒரு தீர்மானத்தோடு வேகவேகமாக ஏதேதோ செய்து கொண்டிருந்தான் நிறைய பேரைச் சென்று பார்த்தான். 30 நாள் ஓடி விட்டது. 31வது நாள் காலை படுக்கை விட்டு எழுந்தபோது அதிர்ச்சி. இன்று என்ன நடக்கப்போகிறதோ, எப்படி நான் சாகப்போகிறேன்?''

அவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை. ஊரில் துறவி இன்னும் இருக்கிறார் என்பதால் அவரிடம் ஓடினான்.
''சுவாமி உங்க ஆசிர்வாதம் தான் என்னை இன்னும் உயிரோடு விட்டு வைத்திருக்கிறது'' என்றான்.
''அது இருக்கட்டும் அப்பா, இந்த முப்பது நாளில் எவ்வளவு சம்பாதித்தாய். எத்தனை பாவங்கள் புரிந்தாய். உன் மனசிலே எத்தனை எண்ணங்கள் தோன்றியது. விவரமாக சொல்லு'''

'சுவாமி இந்த முப்பது நாளில் நான் பணம் சம்பாதிக்க முயற்சிக்க வில்லை, பாவத்தை பற்றிய எண்ணமே இல்லை. எப்போதும் என் மரணத்தைப் பற்றிய சிந்தனையில் தான் இருந்தேன் '
''அமைதி அமைதி. என் அருமை அன்பா, நீ நீண்ட நாள் வாழ்வாய். உனக்கு மரணம் வெகுகாலத்துக்கு இல்லை ''

அவர் காலில் விழுந்து வணங்கிய கோபன்னா முதல் தடவையாக முப்பது நாளுக்குப் பிறகு சிரித்தான்.
' மகிழ்ச்சி சுவாமி. பின் எதற்கு எனக்கு 30 நாளில் மரணம் என்று சொன்னீர்கள்?'''

'''அப்பனே, உலகில் பிறந்தது எல்லாமே ஒருநாள் இறந்து போகத்தான் வேண்டும். அது இயற்கை விதி. நியதி.அதற்குள் செல்வத்தை சேர்க்க அலைகிறார்கள். பாபத்தை செய்ய துணிகிறார்கள். அதை எண்ணிப்பார்ப் பதில்லை. மரணத்தைப் பற்றிய எண்ணம் மனதில் வந்தபின் நீ பாபத்தைப் பற்றியோ, பணத்தைப் பற்றியோ சிந்திக்கவே இல்லை. முப்பது நாள் இல்லை, முப்பது நிமிஷத்தில் கூட மரணம் அணுகலாம். முப்பது வருஷம் கழித்தும் வரலாம். இந்த நினைப்பு மனதில் இருந்தால் தப்பு, பாபம் ஒன்றும் செய்ய தூண்டாது. பணத்தை சேர்க்க அலையாது. அதற்குள் நாலு பேருக்கு முடிந்தவரை நல்லதையே செய், நல்லதையே நினை. மனதில் இது ஞாபகத்தில் இருந்தால் வாழ்க்கை சீராக கடைசி நிமிஷம் வரை மகிழ்ச்சியளிக் கும். பாபம் நெருங்காது. மரணம் நிச்சயம் என்று புரியும், எப்போது என்ற பயம் இருக்காது. அமைதி நிலவும்.

அவரை வணங்கிவிட்டு கோபன்னா சந்தோஷமாக திரும்பினான். வழியில் வழக்கமாக அவன் மசாலாதோசையை தேடிச் செல்லும் மரகத பவன் கண்ணில் பட்டது. சைக்கிள் தானாகவே அங்கு நிற்கும். இன்று வழக்கத்துக்கு மாறாக எதிர்த்த பக்கம் பார்த்துக்கொண்டு சைக்கிளை மிதித்தான். நல்லதையே செய்யும் நல்லதையே நினைக்கும், பிறர்க்கு உழைக்கும் கோபன்னா இப்போது ஆசா பாசங்கள் விட்ட அற்புதமான மனிதன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...