Thursday, August 6, 2020

GITANJALI 28



கீதாஞ்சலி 28 J K SIVAN
தாகூர்

28 நீயின்றி வேறில்லை கண்ணா 28 Obstinate are the trammels, but my heart aches when I try to break them.
Freedom is all I want, but to hope for it I feel ashamed
I am certain that priceless wealth is in thee, and that thou art my best friend,
but I have not the heart to sweep away the tinsel that fills my room
The shroud that covers me is a shroud of dust and death; I hate it, yet hug it in love.
My debts are large, my failures great, my shame secret are heavy; yet when I come to ask for my good, I quake in fear lest my prayer be granted. நான் அடிக்கடி சொல்வேன் இல்லையா ? ரவீந்திரநாத் தாகூரை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கலாம். அவர் ஒரு வேதாந்தி. தளதளவென்று கொதிக்கும் எண்ண ஊற்றுக்கள். அதில் ஒரு ஏக்கம்,ஒரு ஏக்கம், நிராசை, வெறுமை, எதிர்பார்ப்பு, எல்லாம் தெளிவாக தெரியும். அவரது இணையற்ற வளமான கற்பனை அவர் சொல்லும் கருத்துகளை மூடி மறைத்தாலும் உன்னிப்பாக கவனித்தால் அவர் சொல்ல வரும் உயர்ந்த பக்தியும் சரணாகதியும் வெளிப்படும். நேரடியாக சொல்லாமல் இலைமறைவு காய் மறைவாக சொல்பவர். சொல்வதை அழுத்தமாக வெளியிடுபவர். வங்காளி ஆங்கிலம் ரெண்டிலும் புலமை. அது தான் நோபல் பரிசு வாங்கித்தந்தது... என்னவென்று சொல்வேன், இதை எப்படி சொல்வேன்? என்னை சுற்றிலும் வலை கெட்டியாக பின்னப் பட்டிருக்கிறது. நான் எப்படி விடுதலை பெறுவேன்? தப்ப ஏது வழி? என் இதயம் வெடித்து விடும் போல் இருக்கிறது. ஒவ்வொருமுறையும் இதிலிருந்து தப்ப நான் முயற்சிக்கும்போது, என் பலஹீனம் தான் மிஞ்சுகிறது. தப்பவேண்டும் என்ற ஆசை. தப்புவோமா என்ற எண்ணம் என் கையாலாகாத் தனத்தை தான் காட்டுகிறது. சே இப்படியா ஒரு ஜீவன்.... ஆமாம் நான் தோல்வியைத் தான் விடாமல் தழுவுகிறேன். கிருஷ்ணா ஏன் எனக்கு இப்படி ஒரு அவல நிலை? நான் என்ன கேட்கிறேன்? ஒரு சுதந்திர பறவையாக நானும் ஒரு குருவியை, புறாவை, கிளியை, ஏன் காக்கையைப் போல் உலவ முடியாதா? அது கிடைக்கும் என்று நம்பிக்கையைக்கூட இழந்து வேதனை யும் அவமானமும் படுகிறேன்! கிருஷ்ணா நீ ப்ரபஞ்சமனை
த்திற்கும் சொந்தக்காரன். மஹா பிரபு. என் உயிர் நண்பன். இருந்தாலும் என்னைப் பார். இதோ என் அறையைப் பார். எவ்வளவு உபயோக மில்லாத பளபள ஜிலுஜிலு அல்ப வஸ்துக்கள். ஜரிகை, மினுக்கும், துண்டுகள்....இதில் தான் மயங்குகிறேன்.. அதை வீசி எறிய மனம் இல்லாமல் என்னை நானே சிறையில் அடைத்துக் கொள்கிறேன்... எவ்வளவு அல்ப ஜீவன் நான். இதெல்லாம் தான் என்னை தலையிலிருந்து கால் வரை போர்த்தி மூடி கொண்டு போகப்போகிறதோ. இந்த புழுதியோடு தான் என் வாழ்வு முடியுமோ? மரணம் இப்படித்தான் என்னை அணுகப்போகிறதோ? வெறுப்பு தான் எனக்கு மரணத்தின் மீது. இருந்தும் அப்படித்தான் என்னால் வா என்று என் மரணத்தை அழைத்து தழுவ முடியும் போல் இருக்கிறது. முழுமையற்ற வாழ்க்கை ஒன்றை தான் வாழ்கிறேன். அடடா, வாழ்க்கையில் நான் நிறைய கணக்கில்லாமல் கடன் பட்டிருக்கிறேன். நான் கண்ட தோல்விகள் மலை அளவு. நான் பட்ட அவமானங்கள் என்னுடன் ரகசியமாக மறையட்டும். அப்பப்பா, அவற்றின் சுமை, கனம், என்னால் தாங்க முடியவில்லையே. பொறுத்து தான் ஆகவேண்டும். வேறு வழி?
இதெல்லாம் புடைசூழ உன்னைத் தேடுகிறேன் கிருஷ்ணா, உன்னை வேண்டுகிறேன். எனக்கு நல்லதே செய். அமைதி கொடு. ஒருவேளை நீ எனக்கு அடைக்கலம் கொடுக்க மாட்டாயோ, என் பிரார்த்தனையை செவி மடுக்க மாட்டாயோ என்று எண்ணும்போதே என் உடல் பயத்தில் நடுநடுங்குகிறதே. உண்மையாகச் சொல் கிருஷ்ணா நீ என்னை கைவிடமாட்டாயே?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...