Sunday, August 9, 2020

PESUM DEIVAM




 பேசும் தெய்வம்     J K  SIVAN


                    நிறுத்து  தோண்டாதே ''

காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் வரிசையில் 58வது ஆச்சார்யார் பெயர்   ஸ்ரீ ஆத்ம போதேந் திர சரஸ்வதி (1586 – 1638) அவர்கள். இந்த சுவாமிகள் விருத்தாசலம் பகுதியைச்  சேர்ந்த வர். அவரது இயற்பெயர் (தாய் தந்தையர் இட்டது) விச்வேஸ்வரன். அவர் நிறைய ஸ்தலங்களுக் கெல்லாம் சென்று க்ஷேத்ரா டனம் செய்து காசியில் வெகுகாலம் தங்கி இருந்திருக்கிறார். ஸ்ரீ ருத்ரத்துக்கு பாஷ்யம் எழுதியவர்களில் அவரும் முக்யமான ஒருவர். இவர் தான் அவதூதர் சுவாமி சதாசிவ ப்ரம்மேந்திரரை குரு ரத்ன மாலிகாவை எழுதுங்கள் என்று பணித்தவர். போதேந்திராள் என்ற பெயரில் அவர் காலத்திலேயே மற்றொருவரும் இருந்தார். அவரை ஆச்சார்யாள் பகவன் நாமத்தை பரப்புங்கள் என்று அதில் ஈடு படுத்தி அந்த போதேந்திரருக்கு  ''பகவன் நாமா போதேந் திரர்'' என்ற பெயர் வழங்கப்பட்டது. அவர் தான் பின்னால் கோவிந்தபுரத்தில் தங்கி நாம சித்தாந்தத் தையும் பகவன் நாமாவையும் பரப்பியவர்.

காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் வரிசையில் 58வது ஆச்சார்யார் பெயர்   ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி (1586 – 1638) அவர்கள். இந்த சுவாமிகள் விருத்தாசலம் பகுதியைச்  சேர்ந்தவர். அவரது இயற்பெயர் (தாய் தந்தையர் இட்டது) விச்வேஸ்வரன். அவர் நிறைய ஸ்தலங்களுக் கெல்லாம் சென்று க்ஷேத்ராடனம் செய்து காசியில் வெகுகாலம் தங்கி இருந்திருக்கிறார். ஸ்ரீ ருத்ரத்துக்கு பாஷ்யம் எழுதியவர்களில் அவரும் முக்யமான ஒருவர். இவர் தான் அவதூதர் சுவாமி சதாசிவ ப்ரம்மேந்திரரை குரு ரத்ன மாலிகாவை எழுதுங்கள் என்று பணித்தவர். போதேந்திராள் என்ற பெயரில் அவர் காலத்திலேயே மற்றொரு வரும் இருந்தார். அவரை ஆச்சார் யாள் பகவன் நாமத்தை பரப்புங்கள் என்று அதில் ஈடு படுத்தி அந்த போதேந்திரருக்கு  ''பகவன் நாமா போதேந் திரர்'' என்ற பெயர் வழங்கப்பட்டது. அவர் தான் பின்னால் கோவிந்தபுரத்தில் தங்கி நாம சித்தாந்தத் தையும் பகவன் நாமாவையும் பரப்பியவர்.

ஆத்ம போதேந்திர ஆச்சார்யாள் தக்ஷிண பினாகினி என்ற  தென்  பெண்ணை ஆற்றின் கரையில்   ஈஸ்வர வருஷம், (1638 ம் வருஷம்) துலா மாசத்தில் கிருஷ்ண அஷ்டமி அன்று முக்தி அடைந்தார். அவரது அதிஷ்டானம் இப்போது பண்ருட்டி செல்லும் வழியில் வடவாம்பலம் என்கிற அமைதியான இடத்தில் உள்ளது. 

ஓஹோ  அப்படியா,  இதில் என்ன ஸார்  அதிச யம் அதிர்ஷ்டம்  என்று சொல்கிறீர்கள் ? என்று கேட்கிறீர்களா மேலே படித்தால்  ஆச்சர் யம் விளங்கும்.

இந்த அதிஷ்டானம் மகாபெரியவாளின் வழி காட்டலால் தான் கண்டுபிடிக்கப்பட்டு 17.1.1927 அன்று புனருத்தாரணம் செய்யப்பட்டது. எப்படி ?
1926 வாக்கில் மகா பெரியவா விழுப்புரத்தை கடந்து பாத யாத்திரை போய் கொண்டிருந்த ஒரு சமயம். வடவம்பலம் என்கிற கிராமம் வழியாக போய்க்கொண்டிருந்த பெரிய வாளுக்கு ஏதோ உள்ளுணர்வு ஒன்று யாரோ கூப்பிடுவது போன்று  இருந்தது.   உணர்ச்சி மேலிட்டு   விடு விடுவென்று வடவம்பலம் கிராமத்துக்குள் நுழைந்தார்.  அவர் அந்த கிராமத்துக்குள் நுழைவதாக உத்தேசம்  இல்லை.  அதை கடந்து மேலே நடப்பதாக தான்  பிளான்.   கூட வந்த அனைவரும் மஹா பெரியவாளை  பின் தொடர்ந்து கிராமத்துக் குள் நுழைந்தனர். . மஹா பெரியவா  அங்கு காணப்பட்ட சில வயதானவர்களிடம் ''இங்கே யாராவது சன்யாசிகள் இருந்தார் களா?'' எனக்கேட்டார்.

யாருக்குமே தெரியவில்லை. எப்படியோ ஓர் வயதான கிழவருக்கு மட்டும்  கொஞ்சம் விஷயம் தெரிந்தி ருந்தது. கூட்டத்திலே இருந்து முன்னே பெரியவா அருகிலே வந்த அந்த கிழவர் 

''சாமி, சில நூறு வருஷங்களுக்கு முன்னாடி யாரோ இங்கே ஒரு சன்யாசி இருந்தாருங்க ளாம். அவரு இங்கே தான் எங்கேயோ சமாதியாயிட்டார்னு சொல்லி கேட்டிருக் கேனுங்க. ஆனால் அவரு யாரு, அவர் சமாதி எங்கேன்னுட்டு தெரியாதுங்க. இந்த ஊர்லே தான் எங்கிட்டோன்னு பேசிக்குவாங்க நான் சின்னப்பிள்ளையா இருக்க சொல்ல'' .

பரமாசார்யாளுக்கு ஞான திருஷ்டிலே தெரிஞ்சு போச்சு. இங்கே தான் எங்கேயோ 58வது பெரியவா ஆத்ம போதேந்திரருடைய சமாதி இருக்கணும். இந்த கிராமம் முழுக்க அலசி னாதான் அது எங்கேன்னுட்டு கண்டு பிடிக்க முடியும். எங்கே பார்த்தாலும் வயல் வெளி, வாழைத்தோப்பு நிறைந்து இருந்தது. பெரியவா ஒரு இடம் விடாம எல்லா இடமும் சுத்தி பார்த்தாள் . 

ஒரு வாழைத்தோப்பு பக்கம் போன போது அவருக்கு திடீரென்று ஒரு வித்யாசமான படபடப்பு ஏற்பட்டது.  சாதாரணமாக  கிணறு தோண்டுவதற்கு  சிலரை அழைக்கிறோம்.  அவர்கள்  ஏதோ கயிற்றை, கட்டையை கையில் வைத்துக்கொண்டு  நிலம் முழுதும் நடக்கி றார்கள்.  திடீரென்று ஒரு இடத்தில்  வலிப்பு மாதிரி வருகிறது  கட்டையை தரையில்  வைத்து தட்டி காட்டி  இங்கே  கிணறு தூண்டுங்கள். இங்கே நீரோட்டம் இருக்கிறது என்கிறார்கள். காசு வாங்கிக்கொள்கிறார்கள்.   அவர்களுக்கே இந்த சக்தி இருக்கும்போது, ஜகதகுரு, ஆத்ம ஞானி மஹா பெரியவாளுக்கு  பூமிக்கடியில்  ஆத்ம போதேந்திரா இருக்கும் இடம் தெரியாமலா போகும்?

 ஒரு இடத்தில் நின்றபோது  மஹா பெரியவா ளுக்கு  உள்ளுணர்வு   படபடப்பு அதிகமாயிற்று. ஏதோ ஒரு தெய்வ சந்நிதிலே இருக்கிற மாதிரி அவாளுக்கு பட்டது. பக்கத்திலே இருக்கிறவர்களை

'' இங்கே  யாரவது கொஞ்சம் தோண்டுங்கோ'' என்று ஒரு இடத்தைக் காட்டினார்.

கூட இருந்தவா சிலபேரில் குமாரமங்கலம் சாம்பமூர்த்தி சாஸ்திரி என்று ஒருவர் தான் அந்த தோண்டும் வேலைக்கு மேஸ்திரியாக அவர்களுக்கு எப்படி தோண்ட வேண்டும் என்று சொல்லி மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந் தார். கொஞ்சம் ஆழம் தோண்டியாயிற்று.

சாம்பமூர்த்தி திடீரென்று '' நிறுத்து நிறுத்து தோண்டாதே '' என்று பெரிதாக கத்தினார். வாழைத்தோப்பு பூரா அவர் குரல் எதிரொலித் தது. மனிதர் அப்படியே கீழே மயக்கமாய் வயலில் தரையில் சாய்ந்து விட்டார். தோண்டிக் கொண்டிருந் தவர்   பயத்தில் நடுங்கி விட்டார். ஓடிப்போய் எங்கிருந்தோ கொஞ்சம் ஜலம் கொண்டு  வந்து அவர் முகத்தில் தெளித்ததும்  கொஞ்சநேரத்தில்  சாம்பமூர்த்தி கண் விழித் தார்.  ஒரு வாய்  து ஜலம் பருகினார். எழுந்து உட்கார்ந்த சாம்ப மூர்த்தி மூச்சு பேச்சு இன்றி மலங்க மலங்க அங்கும் இன்றும்  பார்த்துக் கொண்டு  பேந்த பேந்த  விழித்தார். எல்லோரை யும் பார்த்தார். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு ஆச்வாசப்படுத்திக் கொண்டார்.   இதெல்லாம்  கண்கொட்டாமல்  பார்த்துக்கொண்டிருந்த  மஹா பெரியவா   சாம்பமூர்த்தி அருகில் வந்து நின்றார். 

''சாம்ப மூர்த்தி  உனக்கு  என்னாச்சுன்னு  சொல்லு ?''

“பெரியவா,  பெரியவா........ என்ன  சொல்வேன். .....யாரோ ஒரு பெரிய சந்நியாசி   என்  எதிர்க்க  வந்து  நின்னார். அவரை முழுசா என்னாலே பாக்க முடியலே. ஆகாசத்துக்கும் பூமிக்குமா நிக்கறார். கழுத்து நிறைய ருத்ரா க்ஷம். கையிலே கமண்டலு.  காவி வஸ்த்ரத்தோடு. நெத்தியிலே பட்டை பட்டையா விபூதி.  அவரைச் சுத்தி ஆயிரக்கணக்கா பிராம்மணா வேதம் சொல்றா. அந்த பெரிய சந்நியாசி என்னைப்பாத்து  ''தோண்டாதே தோண்டாதே ''   ங்கறார்.   .அப்படியே மலைச்சு நிக்கறேன் வார்த்தை வரல்லே. கண்ல தாரை தாரையா ஜலம். க்ஷண காலத்திலேயே எல்லாமே மறைஞ்சுடுத்து'    அப்பறம் யாரோ ''சதாசிவம் சதாசிவம்'' என்கிறா. அப்பறம்.. அப்பறம் .... எனக்கு என்னாச்சுன்னே தெரியலே, புரியலே, பெரியவா ''

இதைக்கேட்ட மஹா  பெரியவா அவர்கள் தோண்டின இடத்தைக் காட்டி  அருகிலிருந்த வர்களிடம்  

' என் சந்தேகம்  இப்போ நிச்சயமாயிடுத்து இது தான் கோவிந்தபுரம் போதேந்திராளுடைய குரு ஸ்ரீ ஆத்ம போதேந்திராளுடைய முக்தி ஸ்தலம்''.
என்கிறார்

அந்த வருஷம் (1927) ஜனவரி 17 அன்று ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை பண்ணி  மகா பெரியவா ஒரு பிருந்தாவனத்தை அங்கே ஸ்தாபிதம் பண்ணினார். ஆத்ம போதேந்திரா அதிஷ்டானம் இப்போது அங்கே இருக்கிறது. ஒவ்வொரு வருஷமும் வடவம்பலத்தில் ஆராதனை நடக்கிறது. முடிந்தவர்கள் அங்கே சென்று பார்க்கலாம். நான் ரெண்டு மூணு தடவை அங்கே நிறைய பேரை அழைத்துச்  சென்று காட்டி தரிசனம் பண்ணியிருக்கேன். ரம்மிய மான க்ஷேத்ரம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.  என்னவோ மனதில் எனக்கு ரொம்ப  திருப்தி, நிறைய  விருந்து சாப்பிட்ட மாதிரி  ஒரு  சந்தோஷம்...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...