Monday, August 31, 2020

PESUM DEIVAM

 பேசும் தெய்வம் J K SIVAN

ஒரு புண்யவான் விடை பெற்றார்.
27.8.2020 சாயங்காலம் 6.30மணிக்கு ஒரு பெரிய தலை சாய்ந்து விட்டது.

மஹாபெரியவாளோடு அரை நூற்றாண்டுக ளுக்கும் மேலாக நெருக்கமாக பழகி அவருக்கு உதவியாளனாக இருந்த ஒரு சாஸ்திரிகள், மேச்சேரி ராமநாத சாஸ்திரிகள் பிள்ளை மேச்சேரி பட்டு சாஸ்திரிகள். ஐம்பது வருஷங்களுக்கு மேலாக அனுஷ பூஜை விடாமல் கொண்டாடி எத்தனையோ மஹா பெரியவா பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியவர். அவர் பூஜைக்கு பெரியவா மூன்று தடவை வந்திருக்கிறார். பழைய மாம்பழம் ஆரிய கௌடா தெருவில் அயோத்தி மண்டபத்தில் அனுஷா பூஜை என்றால் பிரபலம். அனுஷம், ஜெயந்தி, ஆராதனை பூஜைகள் விசேஷமாக பண்ணியவர் மேச்சேரி சாஸ்திரிகள்.
மஹா பெரியவா பூஜைகள் பண்ணும்போது அவருக்கு பூஜை பண்ணி வைக்கும் வாத்யார் மேச்சேரி பட்டு சாஸ்திரிகள். இன்னொரு முக்கியமான விஷயம். மஹாபெரியவா 8.1.1994 அன்று மறையும்போது அவர் கடைசியாக பேசி ஆசிர்வதித்தது பட்டு சாஸ்திரிகளிடம் தான்.

பட்டு சாஸ்திரிகளுக்கு நாம் அனைவரும் எழுந்து நின்று நமஸ்கரித்துவிட்டு மானசீகமாக அவரது ஆசியைப் பெறுவோம். அத்தோடு அவர் சொன்ன மஹா பெரியவா பற்றிய சில விஷயங்களை அவர்சொல்வது போலவே இங்கே அளிக்க முயல்கிறேன்.


''நான் மேச்சேரி பட்டு சாஸ்திரி. இசையனூர் கோகிலா பாட்டி மஹாபெரியவாளுக்கு தாயார் ஸ்தானம் மாதிரி. பெரியவா அப்படி தான்பாட்டியை மடத்தில் மரியாதையோடு வச்சுண்டு இருந்தா. பெரியவாளுக்கு தினமும் பாட்டி தான் சாயந்திர வேளைகளில் சுற்றி போடுவா. அரிசிமாவுலே சொப்பு பண்ணி, நெய்விளக்கேத்தி, உப்பு மிளகா, கூரை ஓலை கொஞ்சம் எல்லாம் போட்டு கூப்புடுவா. பெரியவா உள்ளே வந்து தனி அறையிலே நிப்பா. பாட்டி அவருக்கு சுற்றி போடுவா. இந்த பாக்யம் யாருக்கு கிடைக்கும். நான் இசையனூர் பாட்டிக்கு ஆத்து வாத்யார். மடத்துக்கு போகும்போது என்னையும் கூப்பிட்டுண்டு போவா. ஒன்பது வயசிலிருந்து பெரியவா பழக்கம் எனக்கு.
மகா பெரியவாளோட அனுஷ ஜயந்தியை, வருஷம் தவறாம நடத்திண்டு வரேன். சில வருஷத்துக்கு முன்னால, ஜயந்தித் திருநாள் தருணத்துல நடந்தது இது.

ஒரு மாலை நேரம்… அன்பர் ஒருத்தர் அயோத்தியா மண்டபத்துக்கு வந்தார். ‘என் பேரு சுவாமிநாதன். நீங்க ஏன் மகாபெரியவாளோட பாதுகை யையும் திருவுருவப் படத்தையும் வைச்சு அனுஷ ஜயந்தி நடத்தறேள்? பஞ்சலோக விக்கிரகம் பண்ணி, அதுக்குண்டான வழிபாடுகளைச் செஞ்சு, ஜயந்தி விழாவை நடத்தலாமே?’ன்னு என்னைக் கேட்டார்.

அதோட நிக்காம, ஒரு பையிலிருந்து ரெண்டு பித்தளை சொம்புகளை எடுத்துக் கொடுத்து, ‘மகா பெரியவாளின் பஞ்சலோக விக்கிரகம் பண்ணுங்கோ. நிச்சயம் அது கைகூடும். இந்த மாம்பலத்துலயே மஹா பெரியவா தன்னுடைய கோயில்ல குடியிருந்தபடி எல்லார்க்கும் அருள்பாலிக்கப் போறார், பாருங்கோ '' என்று சொன்னார். ஓரமா இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.

பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா, அங்கே அவரைக் காணோம்! மண்டபம் முழுக்கத் தேடியும் கிடைக்கலே. பக்தர்கள்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும், பஞ்சலோகத் திருமேனி பண்றதுக்கு, எல்லார் உதவியும் கிடைச்சுது.

அப்புறம்… மகாபெரியவாளோட திருவுருவத்தை பஞ்சலோக விக்கிரகமா வடிக்க, சுவாமிமலைக்குப் போனோம். அங்கே… கோயிலுக்குப் பக்கத்துலயே இருக்கிற தேவ சேனாபதி ஸ்தபதியைப் பாத்தோம். மகா பெரியவாள்மேல ரொம்ப பக்தி அவருக்கு. வயசானவர். ‘இத்தனை வயசுக்குப் பிறகும், மகாபெரியவாளோட பஞ்சலோக விக்கிரகம் பண்ற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கே’ன்னு சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார். ஒரு நல்ல நாள் பார்த்து, விக்கிரகம் பண்ற வேலையை ஆரம்பிச்சு, பிரமாதமா தயாரிச்சு முடிச்சார். அந்த பெரியவாள் விக்கிரகம்தான், அவர் பண்ணின கடைசி விக்கிரகம்..

இந்த நேரத்துல, கையில பணம் குறைச்சலா இருந்துது. விக்கிரகத்தை வாங்கிண்டு வரணும்னா, சுமார் 5,000 ரூபா வரைக்கும் தேவை. என்ன பண்றதுன்னு தெரியல. ‘எல்லாம் பெரியவா பார்த்துப்பா’னு தைரிய மா இருந்தேன். திடீர்னு ஒருநாள், கடம் விநாயக்ராமோட தம்பி சுபாஷ் சந்திரனோட வீட்டுக்கு, அவரோட மாப்பிள்ளை கஞ்சிரா வித்வான் கணேஷ்குமார் அமெரிக்கா லேருந்து போன் பண்ணியிருக்கார்.

‘மாம்பலத்துல மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்னு ஒருத்தர், காஞ்சி மகா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத்தைச் சிரமப்பட்டுப் பண்ணியிருக்காராம். ‘அவருக்குப் பணம் கொடுத்து ஒத்தாசை பண்ணு’ன்னு அதிகாலைல, மகா பெரியவா என் சொப்பனத்துல வந்து சொன்னார்’னு கணேஷ்குமார் சொல்லிருக்கார். சுபாஷ் சந்திரனோட மனைவி கீதா நேர்ல வந்து, ‘இந்த 6,000 ரூபாயை உங்க கிட்ட கொடுக்கச் சொன்னார்’னு முழு விவரமும் சொல்லிக் கொடுத்தா. எனக்கு ஆச்சர்யம். மகா பெரியவா அனுகிரஹத்தை நினைச்சு கண்கள் குளமாயிடுத்து. பணத்துக்கு என்ன பண்றதுன்னு தவிச்ச கொஞ்ச நேரத்துலயே இப்படி நடக்குமா? , 6,000 ரூபாய் திடீர்னு கைக்கு வந்தா எப்படி இருக்கும் எனக்கு? அப்படியே உருகிப் போயிட்டேன். இத்த னைக்கும் எனக்குப் பணம் தேவைப் படறதுன்னு யார் கிட்டயும் நான் ஒரு வார்த்தைகூடச் சொல்லலை. ஆனா, எங்கேயோ அமெரிக்காவுல இருக்கிற கணேஷ் குமாரோட சொப்பனத்துல வந்து, மகாபெரியவாளே சொல்லிருக்கார்னா, பெரியவாளோட மகிமையை என்னன்னு சொல்றது! ஆறு வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவம் இது!

பணம் கைக்கு வந்ததும், வைகாசி அனுஷ ஜயந்தி நடத்தறதுக்கு முன்னேயே, ஜூன் மாசம் 3-ம் தேதி ராத்திரி, சுவாமிமலையில ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியை கண் குளிரத் தரிசனம் பண்ணிண்டு, வடவாம்பலம் வழியா வந்து, அங்கே ஸ்ரீஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல மகா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத் திருமேனியை ஒரு வாகனத்துல வெச்சு, தீபாராதனை காட்டினோம்.

பூஜையெல்லாம் முடிச்சுட்டு, வண்டியைக் கிளப்பினா… ம்ஹூம்.. வண்டி ஒரு அடிகூட நகரலை. அங்கேயே நின்னுடுத்து. டிராக்டரைக் கொண்டு வந்து இழுத்துப் பார்த்தோம்; லாரியைக் கொண்டு வந்து கட்டி இழுத்தோம்; ம்ஹூம்… வண்டி அசைவே னாங்கறது! கிட்டத்தட்ட விடியற்காலை நேரமும் வந்தாச்சு. அந்த நேரத்துல, அந்த கிராமத்துலே இருக்கிற ஒரு விவசாயி ரெண்டு சிநேகிதர்களோடு அங்கே வந்தார். அவர் தினமும் ஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல பிரார்த் தனை செஞ்சுட்டு தான் கூலி வேலைக்குப் போவாராம்.'' என்ன பக்தி பாருங்கோ. நாம் அவர் காலிலே விழுந்து நமஸ்கரிக்கணும்.''

எங்ககிட்ட வந்த அந்தக் குடியானவர்,'
‘என்ன நடந்துது?’ன்னு கேட்டார். ‘ஏனோ தெரியலை; வாகனம் நகரவே இல்லை’ன்னு சொன்னோம். அப்ப, அவர் சொன்ன வார்த்தைகள், எங்களை மெய்சிலிர்க்க வெச்சுடுச்சு!

‘மகா பெரியவாளும் அவரோட குரு ஆத்ம போதேந்திராளும் ஆத்மார்த்தமா சம்பாஷணையில இருக்கிற நேரத்துல, நீங்க எப்படிக் குறுக்கிடலாம்? பாதிப் பேச்சுல, பெரியவாளைப் பிரிச்சு எப்படி சென்னைக்குக் கூட்டிட்டுப் போகலாம்? இப்ப… அவங்க சம்பாஷணையை நிறுத் திட்டாங்க. ஆகவே இனிமே இப்போ வண்டியை இழுத்துப் பாருங்க, நல்லாவே நகரும்’னார். அதோட நிக்காம, எங்களோட அவரும் சேர்ந்து, ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர‘ன்னு சொல்லிண்டே வாகனத்தை நகர்த்தறதுக்கு உதவி பண்ணினார்.


வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாம நகர்ந் தது. வழியிலயும் எந்தவித அசௌகரி யமும் இல்லாம, விக்கிரகத்தை நல்லபடியா சென்னைக்குக் கொண்டு வந்தோம்.

மகா பெரியவா, சாதாரணமானவரா என்ன? அவர், மகான் மாத்திரமில்லை; சாட்சாத் ஈஸ்வர அம்சம். இல்லேன்னா இதெல்லாம் நடக்குமா? இந்த பஞ்சலோக விக்கிரகத் திருவுருவமேனியைச் செஞ்சது நாங்களா? இல்லவே இல்லை. அவரோட காரியத்தை அவரே நடத்திண்டுட்டார். இப்ப… பாதுகையோடு பஞ்சலோக விக்கிரகமும் தரிசனத்துக்கு இருக்கு. அடுத்து, பெரியவா ளுக்குக் கோயில் கட்டுற வேலைதான் பாக்கி. மகா பெரியவாளுக்கு கோயில்ங்கறது, பக்தர்களோட கோரிக்கைதான். இதையும் அவரே நடத்திக் கொடுத்துடுவார், பாருங்கோ!

ஒண்ணு மட்டும் சத்தியம்! ‘இன்னது நடக்க ணும்’னு நாம சங்கல்பம் பண்ணிண் டாப் போதும்; அவரே நடத்தி வெச்சுடுவார். அவரோட அன்பாலதான் எல்லாமே இயங்கறது; மகா பெரியவா, கருணா மூர்த்தியாச்சே!”

இதை நெகிழ்ச்சியுடன் சொல்லி, பஞ்சலோக விக்கிரகத் திருமேனியாகக் காட்சி தரும் காஞ்சி மகானைப் பார்த்த பட்டு சாஸ்திரிகள், அப்படியே வணங்கித் தொழுதார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...