Saturday, September 21, 2019

GEETHANJALI

கீதாஞ்சலி   J K  SIVAN 
ரவீந்திரநாத் தாகூர் 

                                                              ''சப்த'' ஸ்வரம் 

21  I must launch out my boat. The languid hours pass by on the shore---Alas for me!
The spring has done its flowering and taken leave. 

And now with the burden of faded futile flowers I wait and linger.
The waves have become clamorous, and upon the bank
in the shady lane the yellow leaves flutter and fall.
What emptiness do you gaze upon! 
Do you not feel a thrill passing through the air 
with the notes of the far-away song floating from the other shore?

அரை நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. வாழ்க்கையின் பெரும்பாதி..நான்  கப்பல் கம்பெனியில் பிழைத்தவன். கடலுக்கும் எனக்கும் நெருங்கிய உறவு.  உப்புக்கரிக்காத  உறவு.  உன் நினைவு இனிக்க அப்பப்போ  கிருஷ்ணா என் மனதில் ஊசலாடுவாய். இப்போது  முழு நேரமும் நீயே.....

கிருஷ்ணா  எனக்கு  நேரமாகிவிட்டதடா.  கடலுக்குள்  ரொம்ப  தூரம் செல்லவேண்டும். என் அன்றாட வாழ்க்கை மீனின்  வாழ்வோடு  சம்பந்தப்பட்டது.  என் படகை  இழுத்து நீரில் இறக்குவதே சிரமம்.    இன்று காற்று  பலமாக  வீசுகிறது. மழை வரபோகிறது.  வரட்டுமே. இது என்ன புதிய அனுபவமா? கரையில் துவண்டதெல்லாம் அங்கேயே இருக்கட்டும். 

வெகுநேரம் வெயிலில்  சுடு மணலில்  படகை சுத்தம்செய்து சோர்வாகிவிட்டது. 
உஸ்,  அப்பாடா.... வசந்தகால தென்றலே வா  வா...

நன்றாக  எங்கும் பூத்துக் குலுங்கச் செய்துவிட்டு  மரங்களை செடிகளை உலுக்கி  காய்ந்த மலர்களை  என்னருகே  உதிர்த்துவிட்டு போய்விட்டாயா?.  நான் இனி இந்தஉலர்ந்த, வாடிய மலர்களை,  வாடிய இதழ்களை  பெருக்கி  அள்ளி  தூர வீசவேண்டிய வேலையை வைத்தாயா? ஆஹா  அருமைமலர்களே,  மலர்ந்து  சில மணிகள் தான் உங்கள்  குறுகிய வாழ்க்கை  சரித்திரமா?

 ஒய்வு ஒழிவு இல்லாத நிம்மதியற்ற, அமைதி அறியாத அலைகள்  
ஓவென்று கூச்சலிட்டு  
 கொந்தளிக் கிறது.  கொப்புளிக்கிறது   இனம் புரியாத ஒரு இரைச்சல். நான்  கடலில் காற்றின் உதவியில் நீண்ட தூரம் சென்று விட்டாலும்  கரையைத் திரும்பிப்  பார்க்கிறேன்.  எல்லாம் எப்படி சிறிதாக மாறியது.  எங்கோ வெகுதூரத்தில் நிற்கும் அந்த வயதான பூவரச பூமரம் காற்றில் கிளைகளை தலைவிரித்தாடுவது போல்  ஆட்டி  காய்ந்துபோன மஞ்சளாக மாறிய இலைகளையும்  வாடிய பூக்களையும் பாவாடை விரித்திருக்கிறது கண்ணில் படுகிறது.

என்னைச்  சுற்றி  அலையின் சப்தமும் இல்லை, எல்லையற்ற  நீர்.  எல்லையில்லாத அமானுஷ்யம்.  எதை நான் வெறித்துப்  பார்க்கிறேன்? நடு முதுகெலும்பு தண்டுக்குள்  ஊசி ஏற்றுவது போல் சில்லென்ற  குளிர் பாய் கிறது.  கிருஷ்ணா,  உனக்கில்லாத  அனுபவமா.  அகண்ட கடல் போல் யமுனையில் பிறந்து வளர்ந்து ஆடி யவனாயிற்றே. காற்றில் இப்படி அலைகளின்  ஓயாத   சப்தத்தை  சப்தஸ்வரமாக்கி  காற்றின் ஒலியை  தாளமாக வைத்து  உன் குழலோசை  இசைக்கும்  சுநாதம் எங்கோ  எதிர்க்கரையில்
 மரங்களிடமிருந்து மிதந்து  வந்து மெல்லிதாக என் காதில் விழுகிறது. 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...